Coimbatore

News October 9, 2024

வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிட மாற்றம்

image

சுல்தான்பேட்டை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக சிவகாமி,பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக ராஜா செல்வம், ஆனைமலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக ராதாகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘பணியிட மாறுதல் தொடர்பாக எந்த கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பணி மாறுதலை தவிர்க்க விடுமுறை எடுக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.

News October 9, 2024

அதிமுக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு: 2 பேர் கைது

image

கோவை, குனியமுத்தூரைச் சேர்ந்த ராஜா@ஜூனியர் ராஜா ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அதிமுகவின் குனியமுத்தூர் வார்டு செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று இவர் அப்பகுதியில் டூவீலரில் சென்ற போது எதிரே டூவீலரில் வந்த இருவர் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கோபிநாத், பூமீஸ்வரன் உள்ளிட்ட இருவரை நேற்று கைது செய்தனர்.

News October 9, 2024

கோவையில் புகார்களுக்கு எண்கள் அறிவிப்பு

image

கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் இன்று கூறியதாவது. கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்றது. கோவை மாவட்டத்தில் இயற்கை சீற்றங்கள் குறித்த புகார் களுக்கு 0422-2302323 என்ற எண்ணில் பொதுமக்கள் அழைத்து தகவல் தரலாம். அவ்வாறு தெரிவிக்கும் பொதுமக்களுக்கு தேவயான அனைத்து உதவிகளும் உடனடியாக வழங்க படும் என்றார்.

News October 8, 2024

நாளை மக்கள் தொடர்பு முகாம்

image

சிறுமுகை முத்துசாமி திருமண மண்டபத்தில் நாளை (அக்.9) காலை 10 முதல் மாலை 2 மணி வரை மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளார். இதில் 15 அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உள்ளனர். இதனை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News October 8, 2024

சிறப்பு ரயில் இயக்கம்

image

சென்னை தாம்பரம் – கோவை வழியாக செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி திண்டுக்கல், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி வழியாக கிணத்துக்கடவு-க்கு வாராந்திர சிறப்பு ரயில் வரும் அக்டோபர் 11ம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. இது ரயில் பயணிகள் மத்தியில் வரவேற்கப்படுகிறது.

News October 8, 2024

பொதுமக்கள் கூறைதீர் கூட்டம்

image

கோவை மாநகராட்சி, பிரதான அலுவலகத்தில் இன்று (08.10.2024) பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவை மாநகராட்சியின் மேயர்.ரங்கநாயகி ராமச்சந்திரன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக தீர்வுகான உத்தரவிட்டார். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு வழங்கினர்.

News October 8, 2024

CM ஸ்டாலினுக்கு கோவை மாணவி கடிதம்

image

கோவையைச் சேர்ந்த மாணவி பிரவீனா (10). இவர் CM ஸ்டாலினுக்கு, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அன்மையில் நான் திரைப்படம் பார்க்க சென்றேன். படத்திற்கு முன் “புகைப்பிடித்தால் புற்றுநோய் உருவாகும் (ம) உயிரை கொள்ளும்” என இருந்தது. இதில் கொல்லும் என்பதற்கு கொள்ளும் என எழுத்துபிழை உள்ளது. பொதுஅறிவிப்புகளில் தவறு இல்லாமல் இருக்க வேண்டும் என எழுதியுள்ளார். இக்கடிதம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

News October 8, 2024

கோவை பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

image

கோவை, மாவட்டம் மேட்டுப்பாளையம், சாலை, தொப்பம்பட்டி பிரிவு அருகே உள்ள தசரதன் பள்ளி மற்றும் ஆர்.எஸ் புரம், தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள பாரதி வித்யா பவன் ஆகிய பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளியில் வெடிகுண்டுகள் உள்ளதா என சோதனை நடத்தினர். வெடிகுண்டுகள் இல்லாத நிலையில் இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News October 8, 2024

கோவைக்கு பொறுப்பு அமைச்சராக மீண்டும் செந்தில் பாலாஜி நியமனம்

image

தமிழ்நாட்டில் வளர்ச்சி பணிகளைத் துரிதப்படுத்த, மக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்க, இயற்கை சீற்றம் உள்ளிட்ட அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் அமைச்சர்கள் சிலரை சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டார். அதன்படி கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக மீண்டும் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

News October 8, 2024

நிதி உதவி வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்

image

தேக்கம்பட்டி அருந்ததியர் காலனியில் வசிக்கும் திமுக மூத்த முன்னோடி வெள்ளையன் இல்லத்திற்கு
நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா நேரில் சென்று அவரது உடல் நலம் விசாரித்து நிதி உதவி வழங்கினார். உடன் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.அ.ரவி, பா.அருண்குமார் Ex MLA, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் T.R.சண்முகசுந்தரம்,
வழக்கறிஞர் அ.அஷ்ரப் அலி கலந்துகொண்டனர்.

error: Content is protected !!