India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிர் நோயியல் துறை சார்பாக, நவம்பர் 2024 மாதத்திற்கான பயிற்சி (05.11.2024) அன்று அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 0422-6611336, 0422-6611226 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முருகனின் 7-வது படைவீடான மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று கந்தசஷ்டி துவங்கியுள்ளது. இந்நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் நான்கு சக்கர வாகனங்களில் மலை ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது, மருதமலை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் கூட்டமாக திரிவதால் தற்போது மாலை 5 மணிக்கு மேல் படிக்கட்டுகளில் கோவில் வருவதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்
தவெக மாநாடு தற்போது முடிந்துள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் 237 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டிச. 27 முதல் அவர் சுற்றுப்பயணத்தை தொடங்குவார் என தெரிகிறது. மேலும் கோவையில் முதல் பயணம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் அவருடைய ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவெக மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27 அன்று விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக தமிழகம் முழுவதும் விஜயின் ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என திரண்டு வந்தனர். விஜயின் பேச்சுக்கு பல அரசியல் தலைவர்கள் ஆதரவும் வெறுப்பும் தெரிவித்திருந்தனர். தற்போது தவெக கட்சித் தலைவர் விஜய் அரசியல் சுற்றுப்பயணமாக கோவையில் ஆரம்பிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மழைக்காலங்களில் ஆற்றில் திறந்து விடப்படும் உபரிநீரை, பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோதவாடி தேவம்பாடி குளங்களுக்கு, கால்வாய்கள் வாயிலாக தண்ணீர் திறந்து விட்டு நிரப்பினால், நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால், ஆறு மாதங்களுக்கு குடிநீர் பிரச்னை ஏற்படாது. அதனால், இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மாவட்ட ஆட்சியருக்கு பொள்ளாச்சி எம்எல்ஏ ஜெயராமன் கடிதம் அனுப்பியுள்ளார்.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலாத்தலங்கள் முழுமையாக சுற்றுலா பயணிகளால் நிரம்பி காணப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவையில் மிகவும் பிரபலமான ஈஷாவில் பக்தர்கள் குவிந்தனர். தொடர்ந்து பக்தர்கள் ஆதியோகி சிலை முன்பு செல்பி எடுத்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர். இதனால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி நேற்று விடுத்த செய்தி குறிப்பில், கோவையில் செயல்படும் முதியோர் இல்லங்கள், விடுதிகள் ஆகியவற்றை அரசாணை எண் 83இன் படியும், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டம் 2007இன் படியும் மாவட்ட சமூகநல துறையின்கீழ் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள், விடுதிகள் எவ்வித முன்னறிவிப்பின்றி நிரந்தரமாக ‘சீல்’ வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை கொண்டாட, சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்களுக்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், கோவை மாவட்டத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அக்., 28 முதல், 31 வரை நான்கு நாட்கள் சிறப்பு பஸ்கள் இயங்கின. இவற்றின் மூலம் கோவை மாவட்டத்தில் இருந்து, ஒரு லட்சத்து, 30 ஆயிரம் பயணிகள் சொந்த ஊர்களுக்குச் சென்றிருக்கின்றனர். போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
கேரள மாநிலம் பத்தனம்திட்டா உள்ள ஏனாத்து என்ற இடத்தில் உள்ள கல்லாடா ஆற்றில் குளித்த யாத்ரீகர் குழுவைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர். இவர்கள் கோவை கணபதி சேர்ந்த செபிருல்லா, செலினா மகன் முஹம்மது ஸ்வாலிஹ் (10), போத்தனூரைச் சேர்ந்த நசீர், சௌதா ஆகியோரின் மகன் அஜ்மல் (21) ஆகியோர் என்பது தெரிய வந்தது மேலும் இவர்கள் உடல் கோவை வந்து கொண்டுள்ளது.
கோவையில் நவ 5 மற்றும் 6ம் தேதிகளில் முதல்வர் ஸ்டாலின் கோவை மாவட்டத்திற்கு வருகை அவருக்கு புரிந்து எல்காட் நிறுவனத்தை திறந்து வைக்க உள்ளார். கோவையில் உள்ள விளாங்குறிச்சியில் 2.86 ஏக்கரில் ₹114.16 கோடி முதலீட்டில் இந்த எல்காட் பூங்கா கட்டப்பட்டுள்ளது. கோவையின் அடுத்த கட்ட ஐடி துறை வளர்ச்சிக்கு மேலும் இதனால் இளைஞர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.