India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொங்கு மண்டல பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று மட்டும் ஆங்காங்கே மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மற்றபடி நாளை (நவம்பர் 5) முதல் வெள்ளி வரை கொங்கு மண்டலத்தில் மழை பொழிவு இருக்காது. ஆனால் (நவம்பர் 10) முதல் (டிசம்பர் 7) ஆம் தேதி வரை கொங்கு மண்டலத்தில் நல்ல மழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக கோவை வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஓரே நாடு, ஓரே தேர்தல் விஷயத்தை திறந்த மனதுடன் தவெக தலைவர் விஜய் பரிசீலிக்க வேண்டும்; அரசியல் கட்சிகள் ஒரு விஷயத்தை பேசுகின்றனர் என்பதற்காக அதையே விஜய் பேச வேண்டும் என்று அவசியம் இல்லை; அதை Study பண்ண வேண்டும் என்றார்.
இந்திய ராணுவத்தில் 174 ராணுவ வீரர்கள், 50 கிளார்க் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்ட இளைஞர்களுக்கு தேர்வு முகாம் நடைபெறும் நிலையில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்தோருக்கு வரும் 8ஆம் தேதி தேர்வு முகாம் நடைபெற உள்ளதால் ராணுவத்தில் சேர ஆர்வம் உள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை உக்கடம் கோட்டை சங்கமேசுவரர் கோயிலில் (நவ.8) ஆம் தேதி காலையில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்த நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. பின் இது குறித்து பக்தர்கள் அமைச்சர் பி.கே.சேகர்பாபுக்கு புகார் அனுப்பினர். இந்த நிலையில் நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சியை மாலையிலேயே நடத்த வேண்டும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷுக்கு உத்தரவிட்டார்.
கோவை உக்கடம் பகுதியில் தீபாவளி விடுமுறைக்குச் சொந்த ஊர் செல்லாத கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் அறைகளில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், 50க்கும் மேற்பட்ட போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை நேற்று 29 இடங்களில் முக்கிய தடயங்கள் சிக்கி உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆர். எஸ் புரத்தில் சட்ட விரோதமாக குட்கா விற்றவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். வடவள்ளியில் ஆடுகளை திருடிய இருவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே கத்தியை காட்டி பணம் பறித்த இருவர் கைது. சரவணம்பட்டியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற இருவர் கைது. மேலும் அவர்களிடமிருந்து 27 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை மாநகரில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், துணை ஆணையர் ஸ்டாலின் சரவணகுமார் தலைமையிலான தனிப்படையினர் நேற்று பீளமேடு பகுதியில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறையில் சோதனை செய்த போது சபரீஷ், பிரனேஷ், கவின்குமார் உள்ளிட்ட மூவரை கைது செய்தனர். அவர்கள் மூலம் தென்னரசு, உமாபதி உள்ளிட்டோரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து உயர் ரக போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கம் உள்ளதா என்பது குறித்து போலீசார் சோதனை நடத்தினர். உக்கடம், ராமநாதபுரம், குனியமுத்தூர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்கி உள்ள அறைகளில் 50க்கும் மேற்பட்ட போலீசார் 4 பிரிவாக பிரிந்து இன்று சோதனையில் ஈடுபட்டனர். மேலும் உக்கடம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் சோதனை நடந்தது.
கோவை மாநகர காவல் துறையினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு வெடிக்க கோவை மாநகர காவல் துறையினர் மற்றும் அரசு சார்பில் பல்வேறு விதிமுறைகள் வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று பட்டாசு வெடித்த 15 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராம் செயலியின் கமெண்ட் பகுதியை செயலிழக்கச் செய்யும் மிகப்பெரிய சிக்கலை கவனத்திற்கு கொண்டு சென்ற கோவை பொறியியல் கல்லூரி மாணவருக்கு மெட்டா நிறுவனம் வெகுமதி அறிவித்ததோடு, சிறந்த அவரது செயலை பாராட்டும் விதமாக மெட்டா நிறுவனம் அவருக்கு வெகுமதி அறிவித்துள்ளது. மேலும் சிறந்த ஆராய்ச்சியாளர்களை கௌரவிக்கும் மெட்டா நிறுவனத்தின் Hall of Fame பட்டியலிலும் மாணவர் பிரதாபின் பெயரை இணைத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.