India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.23 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதியின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தலைமைச் செயலாளர் முருகானந்தம் முதன்மைச் செயலாளர் சிட்கோ தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கார்த்திக் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அர்ச்சனா பட்நாயக் கலந்து கொண்டனர்.
நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று கோவை மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் ரூ.167.25 கோடி மதிப்பீட்டில் சுமார் 165.00 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுவரும் செம்மொழிப்பூங்கா கட்டுமானப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். இதில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் என பலரும் கலந்து கொண்டனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை காந்திபுரம் அனுப்பர்பாளையத்தில் மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டி, விழாப் பேருரை ஆற்றஉள்ளார். நாளை காலை காந்திபுர பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து விழாவை முடித்துவிட்டு விமானம் மூலம் கோவையில் இருந்து சென்னை செல்கிறார்.
➤ கோவையில் இன்று முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். ➤ ஊட்டி மலை ரயில் சேவை வரும் நவ.7ஆம் தேதி வரை ரத்து. ➤ ஜடையம்பாளையத்தில் பொறியாளரை போலீசார் அடித்து உதைத்த வீடியோ வைரல் ஆன நிலையில், அவரைகளை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ➤ கோவையில் மணி- நாகஜோதி தம்பதியின் குழந்தைக்கு திராவிட செல்வன் என முதல்வர் ஸ்டாலின் பெயர் சூட்டினார்.
மேட்டுப்பாளையம் ஊட்டி இடையே மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 3ஆம் தேதி நீலகிரியில் பெய்த கனமழையால் மலை ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்து தண்டவாளம் சேதமடைந்தது. சீரமைப்பு பணிகளுக்காக இன்று வரை ரயில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ரயில் பாதையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் வரும் நவ.7ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
கோவை வால்பாறை வனத்துறையினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வால்பாறை – பொள்ளாச்சி சாலையில் வனவிலங்குகள் அதிகளவில் நடமாடுகின்றன. இந்த வழியாக வால்பாறைக்கு, வாகனங்களில் சுற்றுலா செல்லும் பயணியர், தேவையில்லாமல் வனவிலங்குகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். மீறினால், வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
கோவையில் இன்று ரூ.158.32 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில்நுட்ப பூங்கா கட்டிடம் கட்டும் பணியினை துவக்கி வைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வந்திருந்தார். துவக்கி வைத்த பின் அவர் தனது எக்ஸ் தளத்தில், “நல்லா இருக்கீங்களா தலைவரே”.. கோவை விமான நிலையம் முதல் எல்காட் வரையில் திரண்டிருந்த மக்களின் வரவேற்பு 4 கிமீ கடக்க ஒரு மணி நேரமானது. கோவை மக்களின் அன்பு என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
கோவையில் பொற்கோளர்கள் அதிகம் வசிக்கும் கெம்பட்டி காலனி பகுதியில் இன்று ஆய்வு நடைபெற்றது. அப்போது பொற்கொல்லர் பட்டறைக்கு நேரடியாகவே சென்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும் தங்க நகை தயாரிப்பு குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி உடனிருந்தனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (நவ.5) கோவை வந்த நிலையில் அவரது நாளைய நிகழ்ச்சிகளின் கால அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி காலை 9:45 மணிக்கு நூலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து 10.30 மணி அளவில் கோவை விமான நிலையம் புறப்பட்டு, 10.45 க்கு கோவை விமான நிலையம் சென்றடைவார். பின் 11.35 மணிக்கு இண்டிகோ விமானம் மூலம் சென்னை புறப்பட்டு, மதியம் 12.35 க்கு சென்னை சென்றடைவார்.
கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள அம்பிகா லாட்ஜில் வேடப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மற்றும் அவருடைய மனைவி வக்தசலா ஆகிய இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து தகவலறிந்து விரைந்த காந்திபுரம் காவல்நிலைய ஆய்வாளர் தவுலத் நிஷா இன்று இருவரது உடலையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தங்களது சாவுக்கு காரணம் யாரும் இல்லை என்ற கடிதம் கைப்பற்றியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.