India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்வை காண கோவையிலிருந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து காலை 9.05 மணிக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து மாலை 6:20-க்கு திருச்செந்தூர் சென்றடையும். இதற்கான பயண கட்டணம் ரூ.350 வசூலிக்கப்படுகிறது. திருச்செந்தூர் செல்பவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு போக்குவரத்து கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
எனக்கு கமிஷனரை நல்லா தெரியும் என்று கூறுபவர்களை நம்ப வேண்டாம் எனவும், எந்த பிரச்னையாக இருந்தாலும் தினமும் பகல் 12 மணி முதல் 2 மணி வரை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் என்னை நேரடியாகச் சந்திக்கலாம் என கோயம்புத்தூர் மாவட்ட பொதுமக்களுக்கு கோவை மாவட்ட போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை விளாங்குறிச்சியில் எல்காட் நிறுவனத்தின் சார்பில் புதிதாக திறக்கப்பட்ட கட்டடத்தின் மூலம் 3,500 பேர் பணிபுரியும் வகையில், அதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தின் இறுதியில் இருந்து முழுமையாக செயல்பாட்டுக்கு வரவுள்ளது என்றும் எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கண்ணன் தெரிவித்தார்.
கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காந்திபுரம் சிறைச்சாலையில் மைதானத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் எட்டு தளங்களுடன் அடிப்பரப்பில் அமைய உள்ள 1,98,000 சதுர அடி பரப்பில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினார். இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். முதல்வர் மேடை ஏறும்போது ‘அஜித்தே கடவுளே’ என்று சிலர் கோஷம் எழுப்பினர்
கோவையில் புதிய நூலகத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கோவையில் டைடல் பார்க் அருகில் மேலும் ஒரு தகவல் தொழில் பூங்கா அமைக்கப்படும்; அவினாசி சாலையில் உள்ள உயர்மட்ட மேம்பாலம், சின்னியம்பாளையம் முதல் நீலாம்பூர் வரை நீட்டிக்கப்படும். மேலும் தொண்டாமுத்தூர் பகுதியில் 10 கி.மீ. யானை புகாத வகையில் நவீன வேலிகள் அமைக்கப்படும் என கூறினார்.
கோவை காந்திபுரம் அனுப்பர்பாளையத்தில் நடைபெறும் அரசு விழாவில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள நூலகம் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நேரு, எ.வ வேலு, அன்பில் மகேஷ், வெள்ளகோவில் சாமிநாதன், செந்தில் பாலாஜி, அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இன்று கோவை விமானநிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பீளமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், கோவை விமான நிலையத்திற்கு மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். இரவு 7 மணி துவங்கிய கூட்டத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 240 திமுக நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர். நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், 2026-ல திமுக ஆட்சி தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கோவை மக்களின் வரவேற்பு இருந்ததாக பெருமித்துடன் பேசினார்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு மெமு ரயில் (06106/06107) கோவை – திண்டுக்கல் – கோவை இடையே இயக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பண்டிகை முடிவடைந்த நிலையில் மேலும் இந்த சிறப்பு விரைவு ரயில் (வழி: போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம்) இம்மாதம் (நவம்பர்) முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து ஏனைய நாட்களில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோவை தனியார் மருத்துவமனையில் 8 மாத ஆண் குழந்தையின் தொண்டையில் சிக்கிய வெள்ளி மெட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. 2 நாட்களுக்கு மேலாக உணவு உட்கொள்வதில் சிரமம் (ம) மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையை சிடி மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை செய்த மருத்துவர்கள், உணவு குழாயில் மெட்டி இருப்பது கண்டுபிடித்தனர். பின் எண்டோஸ்கோப்பி முறையில் வெற்றிகரமாக மெட்டியை இன்று அகற்றினர்.
Sorry, no posts matched your criteria.