India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தனியார் இணைந்து வழங்கும் இலவச அழகுக்கலைப் பயிற்சி வழங்குகிறது. இதில் மேற்படிப்பு படிக்க இயலாத மாணவர்களுக்கு வேலை திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு சான்றிதழுடன் மாத ஊதியம் 16,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படும். கோவையில் இப்பயிற்சி வழங்கப்படுகிறது. விவரங்களுக்கு 80728-28762, 90258-08570 அழைக்கலாம்.
கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு கல்வி கடன் வழங்கும் முகாம்கள் இன்று பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்.
கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், மாநகரில் உள்ள சில கல்லூரிகளில் போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதை தடுக்க போலீஸ் தரப்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கல்லூரி நிர்வாகத்தினரும் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே போதை பொருட்களின் பயன்பாட்டை ஒழிக்க முடியும். மாணவர்களின் மோதல் குறித்து தகவல் அளிக்காத கல்லூரி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கோவை மாநகர காவல் துறை சார்பில் இன்று ஒரு முக்கிய செய்தி குறிப்பு வெளியாகியுள்ளது. அதில் 14வயது வரை உள்ள அனைவரும் குழந்தைகள் தான், அவர்களை எந்தவிதமான வேளையிலும் ஈடுபடுத்தக் கூடாது என கூறப்பட்டுள்ளது. மேலும் குழந்தை தொழிலாளர்கள் சம்பந்தமான புகார்களுக்கு 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என கோவை மாநகர காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி இன்று கூறியதாவது. நாளை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளார். முதற்கட்டமாக கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் நவீன பால்பண்ணையில் ஆய்வு நடத்த உள்ளதாகவும், தேசிய பால்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 60 சதவிகித மானியம் குறித்து விவாதிக்க உள்ளார் என கூறினார்.
முருகப்பெருமானின் ஏழாம் படை வீடு என அழைக்கப்படும் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நாளை நடக்கிறது. காலை 6:30 மணிக்கு கோ பூஜை உடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து மூலவரிடம் சண்முகார்ச்சனை நிகழ்ச்சியும் 11 மணிக்கு உற்சவரிடம் சண்முகார்ச்சனையும் நடக்கிறது. பிற்பகல் 3 மணி அளவில் அன்னையிடம் வேல் வாங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்றும், இன்றும் கோவையில் முகாமிட்டு கள ஆய்வு மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். தொடர்ந்து அவர் தனது எக்ஸ் தளத்தில் சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், கோவையில் தந்தை பெரியார் பெயரிலான நூலகம் மற்றும் அறிவியல் மையம் ஆகியவற்றை பார்வையிட்டுள்ளார். திராவிட இயக்கம் என்பது அறிவியல் இயக்கம் என பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
➤கோவையில் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “2026”-ல் திமுக தான் ஆட்சி அமைக்கும் என்றார். ➤புதிய நூலகம் (ம) அறிவியல் மையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். ➤முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் “அஜித்தே கடவுளே” என கோஷம் எழுப்பிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. ➤பொள்ளாச்சி அருகே பேருந்து நேர்க்கு நேர் மோதியதில் 8 பேர் காயம் அடைந்தனர்.
கோவை அனுப்பர்பாளையத்தில் 8 தளங்களுடன் கட்டப்படவுள்ள நூலகம் அறிவியல் மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா முதலமைச்சர் இன்று முக ஸ்டாலின் அடிக்கல் நாட்டி சிறப்பித்தார். பின்னர் அவர் பேசுகையில், கோவையில் அரசுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த Comeback கொடுத்துள்ளார் செந்தில் பாலாஜி. அவருடைய சிறப்பான, வேகமான செயல்பாடுகளை பார்த்து சில தடைகளை ஏற்படுத்தினார்கள். தடைகளை உடைத்து மீண்டும் வந்திருக்கிறார்.
கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காந்திபுரம் சிறைச்சாலையில் மைதானத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் எட்டு தளங்களுடன் அடிப்பரப்பில் அமைய உள்ள 1,98,000 சதுர அடி பரப்பில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினார். இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். முதல்வர் மேடை ஏறும்போது ‘அஜித்தே கடவுளே’ என்று சிலர் கோஷம் எழுப்பினர்.
Sorry, no posts matched your criteria.