India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்ட மாநகர பேருந்துகளில் தனியார் டவுன் பேருந்துகள் குறைந்தபட்ச கட்டணமாக பத்து ரூபாய் வசூலித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தட்டி கேட்டாலும் நீங்கள் யாரிடம் வேணா சொல்லுங்கள் என திமிராகவும் தெனாவட்டாகவும் மக்களை பேசி உதாசீனப்படுத்தி வருகிறார்கள். இதற்கு அரசு சிறப்பு கவனம் செலுத்தி பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலின் மண்டல பூஜை ஒட்டி சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் நவம்பர் 15ஆம் தேதி முதல் ஜனவரி 16ம் தேதி வரை இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மேலும் SETC இணையதளம் மூலம் 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடர்புக்கு 9445014452, 9445014463 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
மாணவர்களுக்கான கல்வி கடன் முகாம் கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது. முகாமில் கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 8 மாணவர்களுக்கு ரூ.85.89 லட்சம் மதிப்பிலான கடன் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கல்லூரி முதல்வர் பிரகாசம், முன்னோடி வங்கி மேலாளர் ஜிதேந்திரன், கனரா வங்கி துணை மேலாளர் காஞ்சனாஸ்ரீ உள்ளிட்ட பலர் இருந்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை படி, கோவை மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய ஐந்து மண்டலங்களில் உள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு புதிதாக குடிநீர் இணைப்பு பெறுவதற்கான சிறப்பு முகாம் வருகின்ற நவ.13ஆம் தேதி தொடர்புடைய மண்டல அலுவலகங்களில் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இன்று (07.11.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கோவை, சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக இன்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை காவல்துறையினர் முத்துகவுண்டன்புதூரில் அருகே சென்று சோதனை மேற்கொண்ட போது புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த பாண்டி என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 360 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
➤மருதமலையில் சூரசம்ஹார விழா ➤ஆவின் நிறுவனத்தில் ஆய்வு செய்த அமைச்சர் ➤மாணவர்களுக்கான மாபெரும் கல்விக்கடன் முகாம் ➤முதல்வர் பொன் உருக்குவது போல் ஓவியம் ➤முதல்வர் விழாவில் மயங்கிய தொண்டர் ➤ கோவையில் 36,000க்கு வேலைவாய்ப்பு ➤ கோவையில் ரூ.16,000 ஊதியத்துடன் இலவச பயிற்சி
கோவை மாவட்டம், பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று நடைபெற்ற மாணவர்களுக்கான மாபெரும் கல்விக் கடன் வழங்கும் முகாமில் 8 மாணவர்களுக்கு ரூ.85.89 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன் பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று வழங்கினார். இதில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், பி.எஸ்.ஜி டெக் கல்லூரி முதல்வர் பிரகாசம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கோவையில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் நூலக அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றிய முதல்வர் கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் இன்று கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளர் ராஜா முதல்வரின் அறிவிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உருகிய நெஞ்சம் என்ற தலைப்பில் முதல்வர் பொன் உருக்குவது போல் ஓவியம் வரைந்து நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் கோவையில் 2 நாட்கள் சுற்றுப்பயணத்தின் போது, பி.வி.ஜி.திருமண மண்டபத்தில் நடைபெற்ற, கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மலர்மாலை அணிவித்து, வீரவாள் ஒன்றினை பரிசளித்தார். முதல்வர் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.
Sorry, no posts matched your criteria.