India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டம் குருவாயூரப்பன் நகரை சேர்ந்த தங்கராஜ் (61) கோவை டாடாபாத் 8வது வீதியில் கோகுலம் பேலன்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் குறைந்த விலையில் தவணை முறை திட்டத்தில் வீட்டுமனை விற்பனை செய்வதாக கூறி ரூபாய்.70 லட்சம் வரை மோசடி செய்துள்ளார். பின் கோவை ரத்தினபுரி காவல் நிலையத்தில் மக்கள் அளித்த புகாரின் பேரில் இன்று கைது செய்து, அவரது சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழக முழுவதும் மண்டல வாரியாக தமிழக மின்சார வாரியம்புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் எண் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்ட மின் நுகர்வோர் புகார் தெரிவிக்க கீழ்கண்ட எண்ணெய் தொடர்பு கொள்ளலாம் என்று செய்து குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9442111912 இந்த whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (நவம்பர் 9) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமரன்’ திரைப்பட எதிர்ப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் அடிப்படைவாதிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். ‘அமரன்’ திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசண்ட் (Cognizant) உள்ளது. Cognizant Technology Solutions Corporation எனும் இந்த நிறுவனம் கோவையில் இயங்கி வருகிறது. கோவையில் செயல்பட்டு வரும் காக்னிசண்ட் ஐடி நிறுவனம் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. Excel-ல் 0 முதல் 1 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையின் முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் அதிமுக செய்தித் தொடர்பாளராகவும் கோவை செல்வராஜ் இருந்தார். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் பிரிந்தபோது அவரது அணியில் இருந்து வந்தார். அண்மையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிலையில் அவர் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இதனிடையே முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கோவை செல்வராஜ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
வரைவு வாக்காளர் பட்டியலில் சுருக்கமுறை திருத்தம் செய்ய நவ. 16, 17. 23, 24 ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் கோவையிலுள்ள,10 சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் நடத்தப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் சிறப்பு முகாம்களில் பங்கேற்கலாம். இதில் பங்கேற்று வாக்காளர்கள் தகுந்த படிவங்களில் விண்ணப்பிக்கலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அலுவலராக இருந்த சத்திய பிரகாஷ் சாகு சற்று முன்னர் கால்நடை துறைக்கு செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, தமிழக தலைமை தேர்தல் அலுவலராக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் இதற்கு முன்னர் சில ஆண்டுகள் கோவை மாவட்ட கலெக்டராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து நிறுவனங்கள், கடைகள் தங்களது பெயர்ப் பலகையில் முதலில் தமிழில் எழுத வேண்டும். பின்னர் ஆங்கிலம், அவரவர் விரும்பும் பிற மொழிகளில் பெயர்ப்பலகைகளை வைத்துக் கொள்ளலாம். மேலும்புலம்பெயர் தொழிலாளர் விவரங்களை labour.tn.gov.in/ism என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.என்று கோவை தொழிலாளர் உதவி கமிஷனர் காயத்ரி, தெரிவித்துள்ளார்
கோவை திமுக முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் சற்று முன் மாரடைப்பால் மரணமடைந்தார்.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தனது மகன் திருமண விழாவை முடித்துவிட்டு காரில் இருந்து கீழே இறங்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுகவின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவராக இருந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் கட்சி பிரிந்தஙபோது ஓபிஎஸ் அணியில் இருந்தார். தற்போது திமுகவில் உள்ளார்.
இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து வெளிவந்துள்ள அமரன் திரைப்படத்தை கண்டித்தும், அமரன் திரைப்படத்தை முதல்வர் பாராட்டியதுடன் இஸ்லாமியர்கள் பற்றி தவறான கருத்துக்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதை, நீக்க அறிவிக்காததை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள கோவை சாந்தி திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
Sorry, no posts matched your criteria.