India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை கோட்டப்பாளையத்தில் வாதப் பிள்ளையார் கோயில் உள்ளது. சுயம்பு மூர்த்தியாக உள்ள பிள்ளையாரை வணங்கி, அவரின் மீது படிந்திருக்கும் நல்லெண்ணெயை எடுத்து தடவி வந்தால், வாதம், நரம்பு, மூட்டுநோய்கள் குணமாகுமாம். ஒரு நூல் கண்டு வாங்கி, நூலின் ஒரு முனையை ஒரு சூலத்தில் கட்டிவிட்டு, பிள்ளையாரை பிரார்த்தனை செய்து, நூல் கண்டு தீரும் வரை பிள்ளையாரை சுற்றிவந்தால் உடலில் உள்ள பிணிகள் நீங்குமாம். SHARE பண்ணுங்க!
கோவை மக்களே, தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
கோவையில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள SERVICE ENGINEER பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வரை வழங்கப்படும். இதற்கு டிப்ளமோ, இன்ஜினியரிங் முடித்தவர்கள் <
கோவை கோட்டப்பாளையத்தில் புகழ்பெற்ற வாதப் பிள்ளையார் கோயில் உள்ளது. சுயம்பு மூர்த்தியாக உள்ள பிள்ளையாரை வணங்கி, அவரின் மீது படிந்திருக்கும் நல்லெண்ணெயை எடுத்து தடவி வந்தால், வாதம், நரம்பு, மூட்டுநோய்கள் குணமாகுமாம். ஒரு நூல் கண்டு வாங்கி, நூலின் ஒரு முனையை ஒரு சூலத்தில் கட்டிவிட்டு, பிள்ளையாரை பிரார்த்தனை செய்து, நூல் கண்டு தீரும் வரை பிள்ளையாரை சுற்றிவந்தால் உடலில் உள்ள பிணிகள் நீங்குமாம். SHAREit
கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Data Analytics using Pythonபயிற்சி வழங்கப்படவுள்ளது. 12 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், Data Analytics, Python பயிற்சி அளிக்கப்படுவதோடு, அதில் உள்ள நுட்பங்கள் அனைத்தும் கற்றுத்தரப்படுகிறது.. இதற்கு டிகிரி முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <
பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கூடப்பட்டி பிரிவு வனப்பகுதியில் மனித எலும்புக்கூடு கிடப்பதாக காரமடை போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. விரைந்து சென்ற போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்ததில், இறந்தவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் மாயமான வெள்ளியங்காடு பூமாதேவி நகரை சேர்ந்த முருகன்(70) என்பதும், மன உளைச்சலால் மருந்து குடித்து தற்கொலை செய்ததும் தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
கோவை மாவட்டத்தில் இன்று (11.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில், சாய்பாபா காலனி, அழகேசன் ரோடு சந்திப்பு முதல் எருக்கம்பெனி வரை மேம்பாலப் பணிகள் நடைபெறுகிறது. இதனால் ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 90 நாட்களுக்கு கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி கவண்டம்பாளையம் வழியாக கோவை நகருக்குள் வரும் அனைத்து இலகு ரக மற்றும் கனரக வாகனங்களும் காந்திபுரம், அவினாசி ரோடு செல்ல, நல்லாம்பாளையம் வழியாக காந்திபுரம் வழியாக செல்லலாம்.
கோவை மக்களே, தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தில், அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை சம்பளம் வழங்கப்படும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை மற்றும் விவரங்களை அறிய 044-29520509 எண்ணுக்கு அலுவலக நேரங்களில் அழைக்கலாம். கடைசி தேதி 16.08.2025 ஆகும். SHARE பண்ணுங்க!
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (ஆகஸ்ட்.12) காலை 11.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை, மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களால் நாளை இந்த கூட்டம் நடைபெறாது என மாநகராட்சி சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.