India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, கோவை போலீசார் விசாரித்து வந்தனர். இதனிடையே அவர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில், முணாறில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற தனிப்படை போலீசார், மூணாறில் ஒரு ரெசாட்டில் இருந்த, ஜான் ஜெபராஜை கைது செய்து, காந்திபுரம் காவல்நிலையம் அழைத்து வந்தனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 137 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு வரும் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஊதியம் ரூ.7700-24,200 வரை வழங்கப்படும். உங்கள் நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சில இளைஞர்கள், சந்தேகத்திற்கு இடமாக தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்த ராஜேஷ், சௌந்தர், அருண்குமார், உள்ளிட்ட 7 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், ரூ.1.09 கோடி ரொக்கம், 2 கார்கள், 2 பைக்குகள், 12 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (ஏப்ரல்.12) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
கோவை மாநகர காவல் ஆணையர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகர காவல் ஆணையரகம் தொடங்கப்பட்டு 35 ஆண்டுகள் ஆனதையொட்டி, மாநகர காவல் துறை சார்பில் பவள விழா போட்டிகள் 14-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை வாக்கத்தான், கலை நிகழ்ச்சிகள், ஓவியப் போட்டி, துப்பாக்கி சுடும் போட்டி, சைக்கிளிங் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மாநகர காவல் ஆணையர் அலுவலகம், பிஆர்எஸ் வளாகம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட உள்ளன என்றார்.
கோவை, காட்டூர் போலீசாருக்கு ஐ.பி.எல் சூதாட்டம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, காந்திபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சோதனை செய்ததில், ஒரு அறையில் இருந்த இளைஞர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறியதால், தீவிர சோதனையிட்டனர். அதில் ரூ.1 கோடியே 9 லட்சத்து 90,000 ரொக்கம் சிக்கியது. விசாரணையில் வாலிபர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்பு கொண்டனர். போலிசார் அவர்களை கைது செய்தனர்.
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
கோவை: அன்னூர் அருகே இரும்பொறையிலிருந்து 4 கி.மீ தொலைவில் ஓதிமலை முருகன் கோயில் உள்ளது. இக்கோயில் பழநி மலையை விடவும் பழமையானதாகும். ஓதிமலை முருகன் 5 தலையுடனும் 8 கைகளுடனும் காட்சி தருகிறார். பொதுவாக, அனைத்துக் கோயில்களிலும் மூலவர் சிலை பீடத்தின் மீதே நிறுவப்பட்டிருக்கும். ஆனால், இக்கோயில் மூலவர் முருகன் சிலை பாறையின் மீது நிறுவப்பட்டிருருப்பது விசேஷம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க!
கோவை, ஆலாந்துறை, நாதேகவுண்டன்புதூரில், கால சம்ஹாரீஸ்வர பைரவர் திருக்கோவில் அமைந்துள்ளது. 8 வாகனங்களில் 8 வகையான கால பைரவர்கள், சம்ஹார பைரவர்களாக இங்கு வீற்றிருக்கின்றனர். சக்திவாய்ந்த கால பைரவரை, அஷ்டமி நாட்களில், 11 தீபங்கள் ஏற்றி, வணங்கி வந்தால், கடன், வறுமை உள்ளிட்ட பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை வெள்ளியங்கிரி மலையேறும் போது காஞ்சிபுரத்தை சேர்ந்த ரமேஷ் (42) மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளார். 6 வது மலை அருகே நேற்று அதிகாலை வரும் போது அவர் மயங்கி விழுந்துள்ளார். அவர் உடல் கீழே கொண்டு வரப்பட்டது.
Sorry, no posts matched your criteria.