India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாநகராட்சியில் சொத்து வரி ₹129.43 கோடி உட்பட மொத்தமாக பல்வேறு வரிகளில் ₹667.77 கோடி இன்னும் வசூலிக்கப்பட வேண்டியுள்ளது. இந்நிலுவை வரியினங்களை ஆய்வு செய்வதற்கும், வரி ஏய்ப்புகளைக் கண்டறிந்து வசூலிப்பதற்கு சிறப்பு கமிட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கோவை சிட்டி போலீஸ் கமிஷனராக சரவணசுந்தா் பொறுப்பேற்ற பிறகு குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக மாநகரில் ரௌடிகளை ஏ பிளஸ், ஏ, பி என 3 வகைகளாக பிரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மாநகரில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 28 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமிஷனர் சரவணசுந்தர் நேற்று தெரிவித்தார்.
கோவை எஸ்.பி கார்த்திகேயன் நேற்று செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது புகார் அளிக்க 94981-81212, 7708-100100 எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். ரகசியம் காக்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (மார்ச் 31) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
கோவையின் அடையாளமாக திகழும் மருதமலை முருகன் கோயில், முதலில் கொங்கு சோளர்களால் நிர்மாணிக்கப்பட்டது. விஜய நகர, கொங்கு சிற்றரசர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டு இத்திருத்தலம் உருவானது. மருதாசலம், மருதவரையான், மருதைய்யன் என்ற பெயர்களில், 9ஆம் நூற்றாண்டிலேயே மக்களிடம் இக்கோயில் அறியப்பட்டிருந்தது. பாம்பாட்டி சித்தர், இங்கு சில காலம் வசித்தாராம். தீமைகளை போக்கும் சர்வ வள்ளமை, மருதமலை முருகனுக்கு உள்ளதாம்.
கோவையில் தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் சூலூர் மற்றும் ஆனைமலை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் புதிதாக 7 பேருக்கு தொழுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொழுநோய் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் 223 குழுக்கள் மூலம் 4.95 லட்சம் பேருக்கு ஆய்வு நடத்தப்பட்டது. இதுவரை 100 நாட்களாக ஆய்வு பணிகள் நடைபெற்றுள்ளன.
கோவை வால்பாறையைச் சேர்ந்த கார்த்தி, வினோபா தம்பதி. இவர்கள் பொள்ளாச்சியில் உள்ள மாக்கினம்பட்டியில் மைத்துனர் நடத்திய ஹோட்டலை கார்த்தி தனது மனைவியுடன் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு உறங்க சென்றவர்கள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தொழிலில் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தகவல் வந்துள்ளது.
அபுதாபியிலிருந்து கோவைக்கு, விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், விமான நிறுவனங்கள் கூடுதல் விமான சேவைகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் அபுதாபி – கோவை – அபுதாபி விமான சேவை நேற்று முதல் செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வாரத்துக்கு, 3 விமானங்களிலிருந்து, 4 விமானங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இரு வழிகளிலும் முழு பகல்நேர விமானமாக இது மாறுகிறது.
கோவை மருதமலை, சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வரும் 4ம் தேதி திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு, ஏப்.1 மாலை 5 மணிக்கு மேல், திருக்கோவிலில் அமைந்துள்ள மூலவர் மற்றும் பரிவார சன்னதிகளில், சக்தி கலசங்களை யாகசாலையில் வைத்து பூஜை செய்கின்றனர். எனவே வரும் (ஏப்.4-6) வரை மலை மீது வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)
Sorry, no posts matched your criteria.