India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மக்களே நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், மருந்துகள், ஆட்டோமொபைல்கள் என 375 பொருட்களுக்கான விலை குறைந்துள்ளது. இதில் ஏதேனும் சந்தேகம் அல்லது புகார்கள் இருந்தால் 1800-11-4000 அல்லது 1915 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.மேலும் 8800001915 என்ற வாட்ஸ் அப் எண் அல்லது இங்கே கிளிக் செய்து புகார் அளிக்கலாம்.இதனை SHARE பண்ணுங்க!
சிவில் வழக்குகளின் தேக்கத்தை குறைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி சென்னை ஐகோர்ட், அனைத்து மாவட்ட நீதிபதிகளுக்கும் சுற்றிக்கை அனுப்பியுள்ளது. அதில், சிவில் வழக்குகளில் சொத்து பாகப்பிரிவினை, உயில் வழக்குகளில் மாவட்ட நீதிமன்றங்கள் முன்னுரிமை அளித்து ஆறு மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இதனை தொடர்ந்து இவ்வழக்குகளுக்கு நீதிபதிகள் முன்னுரிமை அளித்து வருகின்றனர்.
இந்திய அஞ்சல் துறையில் பணிபுரிய தமிழகத்திற்கு மட்டும் சுமார் 32500 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும் தேர்வு ஏதும் இல்லாமல் மெரிட் முறையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறது.18 – 40 வயது உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.இந்த பணிக்கு மாதம் ரூ.10,000- 29,380 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் செப்.30க்குள்<
கோவை மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே<
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நேற்று திடீர் என உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில் ‘வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே அமைச்சர் மருத்துவமனையில் சேர்ந்து உள்ளார். தற்போது அவரது உடல்நிலை நன்றாக உள்ளது’ என்று தெரிவித்து உள்ளது.
கோவை: சிறுமுகை பாறையூரை சேர்ந்த குணசேகரனுக்கு மணிமேகலை என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். இந்தநிலையில் கூலி தொழிலாளியான குணசேகரன் மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததால், கடந்த ஓராண்டுக்கு முன் மகள்களை அழைத்து கொண்டு மனைவி தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை குடும்பம் நடத்த அழைத்தும் வர மறுத்ததால், மனமுடைந்த குணசேகரன் நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை சிங்காநல்லூர் – இருகூர் ரயில் நிலையங்களுக்கு இடையே சூர்யா நகர் பகுதியில், தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்து ரயிலுக்கு சேதம் ஏற்படுத்த முயன்றதாக, ரயில்வே பாதுகாப்புபடை போலீசார், வழக்குபதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் கோவையை சேர்ந்த தினேஷ், வேதவன், நாகராஜ், வினோத், கோகுல் கிருஷ்ணன், கார்த்திக் ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அனைவரையும் இன்று போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டத்தில் இன்று (24.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கோவை சாய்பாபா காலனியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடைபெற்றது. இதனை அறிந்த காவல்துறையினர், சுற்றி வளைத்து அவர்களை பிடித்தனர். சீட்டு விளையாட்டில் ஈடுபட்ட மனோஜ் குமார் (24) கஸ்தூரி பாபு (23)ஆகிய இருவரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.
1)கோவையில் அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற 6 மாத தையல் பயிற்சி சான்றிதழ் இருக்க வேண்டியது அவசியம்.
2)அருகே உள்ள இ-சேவை மையத்தையோ, பொதுசேவை மையத்தையோ அணுகி இந்தத் திட்டத்திற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
3)ஒருவேலை நீங்கள் தையல் பயிறிச் பெறாதவர்களாக இருந்தால் <
உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.