Chennai

News February 14, 2025

பாலியல் தொல்லை: மாதவரம் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை

image

சென்னை போக்குவரத்து இணை ஆணையர் மகேஷ்குமார், பாலியல் குற்றச்சாட்டில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்ட மாதவரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சக்திவேல் மீதும் புகார் எழுந்தது. அவரையும் போலீசார் விசாரித்து காத்திருப்பு பட்டியலில் சேர்த்திருக்கின்றனர். காவல் உயர் அதிகாரிகள் அவரிடமும் விசாரணையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

News February 14, 2025

அதிமுக வட்டச் செயலாளர் தூக்கிட்டு தற்கொலை

image

புழல் காவாங்கரை பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் சபாபதி (47). அதிமுக வட்டச் செயலாளரான இவர், நேற்று மாலை தனது வீட்டில் உள்ள படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்தார். இதை கவனித்த அவரது மனைவி, அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 14, 2025

அஞ்சல் துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். சென்னை மாவட்டத்தில் மட்டும் 33 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <>ஷேர் பண்ணுங்க<<>>

News February 14, 2025

ரத்னா ஃபேன் ஹவுஸ் தலைவர் காலமானார்

image

பிரபல தொழிலதிபரும் ‘ரத்னா ஃபேன் ஹவுஸ்’ நிறுவனத்தின் தலைவருமான அருள் பிரகாச தாசா சுவாமிகள் என்ற கிருஷ்ணமூர்த்தி (81), நேற்று (பிப்.13) காலமானார். வயது மூப்பின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், அவரது உடல் சென்னையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்கு இன்று (பிப்.14) நடைபெற உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

News February 14, 2025

பயங்கரவாத அமைப்பிற்கு மூளையாக செயல்பட்டவர் கைது

image

பயங்கரவாத அமைப்பிற்கு மூளையாக செயல்பட்ட அபு சலாம் அலி என்ற நபரை போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர். வெகு நாட்களாக தலைமறைவாகி இருந்த அவரை அசாம் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர் சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு போலீசாருடன் இணைந்த அசாம் போலீசார், செம்மஞ்சேரியில் பதுங்கியிருந்த அபு சலாம் அலியை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

News February 14, 2025

பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவன் விபத்தில் உயிரிழப்பு

image

அரும்பாக்கத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் நவீன் குமார் (18) இருசக்கர வாகனத்தில் கோயம்பேடு ஜெய் நகர் அருகே சென்றபோது, முன்னால் வாகனம் வருவதைகண்டு பிரேக் பிடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற வாகனத்தின் மீது நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தியதாக சரண்ராஜ் என்பவரை கைது செய்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News February 13, 2025

CM ரூட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

image

வளசரவாக்கத்திற்கு CM செல்லும் ரூட்டில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் பகுதியில் வெடிகுண்டு வைப்போம் எனக் கூறிய தென்காசியை சேர்ந்த முத்துச்செல்வன் என்பவரை செல்போன் நம்பரை வைத்து காவல்துறை கைது செய்துள்ளனர். தென்காசியில் போலீசார் கைது செய்துள்ள நிலையில், முத்துச்செல்வனை அழைத்து வர சென்னை போலீசார் தற்போது தென்காசி விரைந்துள்ளனர்.

News February 13, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா ஆஜர்

image

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில், இசையமைப்பாளர் இளையராஜா இன்று (பிப்.13) ஆஜரானார். தேவர்மகன், குணா உள்ளிட்ட 109 படங்களின் பாடல்கள் உரிமை தொடர்பான வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள இளையராஜா சாட்சியம் அளிப்பதற்காக ஆஜரானார். 109 பட பாடல்களை யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட தடைக் கோரி பாடல்களின் உரிமை பெற்ற மியூசிக் மாஸ்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

News February 13, 2025

12 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

image

சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், 2ஆவது கணவர் தனது மகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்து 2ஆவது திருமணம் செய்து கொண்டதாகவும், 2ஆவது கணவர் தனது மகளுக்கு பாலியல் சீண்டல் கொடுத்து மிரட்டுவதாகவும் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் 2ஆவது கணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

News February 13, 2025

காதலர் தினம்: போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

image

காதலர் தினத்தையொட்டி, பொழுதுபோக்கு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மெரினா கடற்கரை, எல்லியட்ஸ் கடற்கரை, உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கு மாறுவேடத்திலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பொது இடங்களில் எல்லை மீறும் காதலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!