India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட பிரதான சாலையில், சுகந்த பவன் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலுக்கு வந்த ரவுடி கும்பல், உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட உணவுக்கு ஓட்டல் ஊழியர்கள் பணம் கேட்டதால், அவர்கள் வைத்திருந்த பட்டாகத்தியால் ஹோட்டல் உரிமையாளர் மனோ அஜயை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், அமைச்சர் மா.சு., செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “3 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பு மற்றும் நாய் கடிகளுக்கு, வட்டார சுகாதார மருத்துவமனைகளில் மட்டும் மருந்து இருப்பு இருந்தது. ஆனால், தற்போது ஆரம்ப சுகாதார நிலையம் முதல் பெரிய மருத்துவமனைகள் வரை மருந்துகள் கொண்டு வரப்பட்டுள்ளன. புதிதாக உருவாக்கப்படும் மருத்துவமனைகளிலும் நாய், பாம்பு கடி மருந்துகள் உள்ளன” என்றார்.
பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (பிப்.16) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இதன் காரணமாக, சென்னை – கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனினும், பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் – பொன்னேரி இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
நேரு விளையாட்டரங்கில் இன்று (பிப்.15) மாலை 5 மணிக்கு நடைபெறும் ஐஎஸ்எல் கால்பந்து தொடர் போட்டியில், சென்னையின் எஃப்சி – பஞ்சாப் எஃப்சி அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் அணி 24 புள்ளிகளுடன் பட்டியலில் 9ஆவது இடத்திலும், சென்னை அணி 21 புள்ளிகளுடன் 10ஆவது இடத்திலும் உள்ளது. சென்னை அணி சொந்த மண்ணில் தொடர் தோல்வியை சந்தித்து வருவதால், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் முனைப்புடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
புழல் பகுதியில் குடும்ப நண்பர் போல் பழகி 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் உலகநாதன் (63) என்பவரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். இந்தக் குற்றச்செயலில் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி ஜோதிலட்சுமி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி வெளியே சொன்னால் உன் தாயைக் கொலை செய்துவிடுவேன் என அந்த சிறுமியை உலகநாதன் மிரட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வடபழனி முருகனை வழிபட்டால் செல்வ வளம் சேர்வதோடு அனைத்திலும் விருத்தி கிடைக்கும். இங்குள்ள முருகப்பெருமானை வழிபட கல்யாண வரமும், பிள்ளை பாக்கியமும் கிடைக்கும். பழநிக்கு நிகரான இந்தத் தலத்தில் பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டு முடி காணிக்கை செலுத்தினால் சகல தொல்லைகளும் விலகும் என்பது நம்பிக்கை. பழநிக்கு வேண்டிக்கொண்டு செல்ல முடியாதவர்களும் இங்கே வந்து நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். ஷேர் பண்ணுங்க
விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயிலை சாலை மேம்பாலத்துடன் இணைத்து நீட்டிப்பதன் பரிந்துரைக்கான விரிவான திட்ட அறிக்கையை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தார். வழித்தடத்தின் மொத்த நீளம் 15.46 கி.மீ. ஆகும். 13 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளது. இவர், ரூ.9,335 கோடி செலவில் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பசுமை முதன்மையாளர் விருது 2024க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு நிரப்பப்பட வேண்டிய விண்ணப்பபடிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளமான www.tnpcb.gov.in-இல் உள்ளது. பசுமை முதன்மையாளர் விருது 2024-க்கான முன்மொழிவை ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிப்பு
மாநில தகுதித் தேர்வினை (SET) தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்திட அரசு ஆணையிட்டிருந்தது. அதன்படி, மாநில தகுதித் தேர்வினை வருகின்ற மார்ச் மாதம் 6,7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி வாயிலாக நடத்த தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.
தமிழ்நாட்டில், வரும் நாட்களில் இயல்பைவிட வெப்பநிலை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், நீலகிரி, திண்டுக்கல், கரூர், திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் இயல்பைவிட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக வெப்பம் பதிவாகி உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவுக்கு மேகமூட்டமும், காலை வேளையில் லேசான பனிமூட்டமும், வெப்பம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.