Chennai

News April 6, 2025

சொத்துவரி செலுத்தினால் ரூ.5,000 ஊக்கத்தொகை

image

ஒவ்வொரு அரையாண்டு தொடக்கத்தின் முதல் 30 தினங்களுக்குள் சொத்துவரியினை செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, நிகர சொத்துவரியில் 5% அல்லது அதிகபட்சம் ரூ.5000 ஊக்கத்தொகை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது 2025-26ஆம் நிதி ஆண்டின் முதல் அரையாண்டு தொடங்கியுள்ளதால், சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியினை வரும் 30ஆம் தேதிக்குள் செலுத்தி ஊக்கத்தொகையை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

News April 5, 2025

சென்னையில் அரசு வேலை; 8th பாஸ் போதும்

image

பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதார துறையில் 345 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8th பாஸ் போதும். B.Ed, B.Sc, Diploma, ITI, M.Ed, M.Sc, MBBS, Nursing, PG Diploma படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தகுதிற்கேற்ப ரூ.18,500 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து ஏப்.11ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சென்னையில் வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

News April 5, 2025

புதிய மண்டலங்கள் உருவாக்கும் பணி நிறுத்தம்

image

சென்னையில் 15 ஆக உள்ள மண்டலங்களின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்தி கடந்த மாதம் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. ஆனால் இந்த அறிவிப்புக்கு கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் பதவி காலம் இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. எனவே, புதிய மண்டலங்களை உருவாக்க முடியாது என்பதால் அதற்கான பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 

News April 5, 2025

4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை

image

முகப்பேர் பகுதியில், 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். குழந்தை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், விரைவில் குற்றவாளி பிடிபடுவார் என உறுதியளித்தனர்.

News April 5, 2025

இன்சூரன்ஸ் வெரிஃபிகேஷன் ஆபிசர் வேலை

image

சென்னையில் உள்ள AYU ஹெல்த் அலைடு சர்வீசஸ் நிறுவனத்தில் இன்சூரன்ஸ் வெரிஃபிகேஷன் ஆபிசர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இளங்கலை படிப்பில் டிகிரி பெற்ற 21 – 50 வயதுடைய இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.15,000 வழங்கப்படும். முதல்முறையாக வேலை தேடுபவர்களும் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு 9003162661 அல்லது 9171911696 என்ற எண்ணை அழைக்கவும். ஷேர் செய்யுங்கள்

News April 5, 2025

CSK-DC போட்டி: மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்

image

சேப்பாக்கம் மைதானத்தில், CSK- DC அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி இன்று நடைபெறவுள்ளது. ரசிகா்களுக்கு தடையற்ற பயணத்தை வழங்கும் வகையில், போட்டிக்கான டிக்கெட்டில் இருக்கு QR கோடை மெட்ரோ ரயில் காண்பித்து பயணிக்கலாம். எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும், போட்டி நடைபெறும் மைதானத்துக்கு அருகிலுள்ள அரசினா் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கும் இடையே எவ்வித கட்டணமும் இன்றி பயணிக்கலாம். ஷேர் செய்யுங்கள்

News April 5, 2025

பிரியாணி, ஷவர்மாவால் பாதிப்பு: மக்கள் அச்சம்

image

சென்னையில், கடந்த சில நாட்களாக ஹோட்டல்களில் சாப்பிட்ட சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் திருவல்லிக்கேணி பிலால் ஹோட்டல், நேற்று சிந்தாதிரிப்பேட்டை ஷவர்மா கடை என அடுத்தடுத்த கடைகளில் சுகாதாரம் இல்லாமல் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால், ஹோட்டல்களில் சாப்பிட்டால் உடல்நலக்குறைவு ஏற்படும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

News April 4, 2025

சென்னை கலெக்டரிடம் ரூ.11 லட்சம் மோசடி; 3 பேர் கைது

image

சென்னை கலெக்டர் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.11.63 லட்சம் மோசடி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலெக்டரின் கையொப்பத்தை போலியாகப் போட்டு பணம் பறிக்கப்பட்டது. விசாரணையில் வருவாய் ஆய்வாளர்கள் பிரமோத், சுப்பிரமணி மற்றும் டிரைவர் தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ரூ.3 லட்சம் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 4, 2025

ஷவர்மா சாப்பிட்டு 20 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

image

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கடையில் ஷவர்மா சாப்பிட்ட ரோஹித் (17) என்பவருக்கு உடல்நலம் பாதித்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். உணவகம் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால், ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், உணவகத்தில் சாப்பிட்ட 20 பேர் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. சிக்கன் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

News April 4, 2025

1,299 SI பணியிடங்கள்: 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வாரிசுதாரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு 10% ஒதுக்கீடு உள்ளது. ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!