Chennai

News March 12, 2025

சிலிண்டர் வெடித்து 3 பேர் உயிரிழப்பு

image

கோவிலம்பாக்கம், காந்திநகர் 15ஆவது தெருவில் வசித்து வந்த முனுசாமி (75) என்பவரது வீட்டில் கடந்த 5ஆம் தேதி கேஸ் கசிவு ஏற்பட்டது. மறுநாள் காலையில் வீட்டார் சுவிட்சை போட்டவுடன் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், 5 பேரும் உடல்கருகி கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். சாந்தி (45), அஜித்குமார் (27), முனுசாமி (75) ஆகிய மூவரும் சிகிச்சை பலனின்றி நேற்று (மார்.11) உயிரிழந்தனர்.

News March 12, 2025

சென்னையில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

சென்னையில் இன்று (மார்.12) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒருசில இடங்கங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் வெளியே செல்லுங்கள். நேற்று அடையாறு, அம்பத்தூர், கோயம்பேடு, சைதாப்பேட்டை, ராயபுரம் போன்ற பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

News March 11, 2025

சென்னையில் இன்று இரவு காவல் ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 11, 2025

சென்னையில் பார்க்கவேண்டிய 10 கோவில்கள்

image

பார்த்தசாரதி கோயில்(திருவல்லிக்கேணி), கபாலீஸ்வரர் கோயில்(மயிலாப்பூர்), வடபழனி முருகன் கோவில்(வடபழனி), அஷ்டலட்சுமி கோவில்(பெசன்ட் நகர்), மருதீஸ்வரர் கோவில்( திருவான்மியூர்), கந்தசாமி கோவில்(கந்தகோட்டம்), தேவபுரீஸ்வரர் கோவில்(திருவேற்காடு), காமாட்சி அம்மன் கோவில்( மாங்காடு), பாலசுப்பிரமணியர் கோவில்(சிறுவாபுரி), தேவநாதப்பெருமாள் கோவில்(செட்டிப்புண்ணியம்). ஷேர் பண்ணுங்க.

News March 11, 2025

மாடுகளின் உரிமையாளர்களிடம் ரூ.1.46 கோடி வசூல்

image

சென்னை சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் ஒரு முறை பிடிபட்டால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் ரூ.10,000 எனவும், அதே மாடு 2-வது முறை பிடிபட்டால் ரூ.15,000 வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்தது. அதன்படி கடந்த ஆண்டு முதல் மொத்தமாக இதுவரையில் 3,221 மாடுகள் பிடிக்கப்பட்டு ரூ.1 கோடியே 46 லட்சத்து 80 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 11, 2025

சென்னையில் இடியுடன் மழை தொடரும்

image

சென்னையின் பல பகுதிகளில் இன்று காலை முதல் மழை கொட்டி தீர்த்த நிலையில், இன்றும் நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே. ஷேர் பண்ணுங்க.

News March 11, 2025

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

image

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் சர்வதேச நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றுத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 11) லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், விட்டர் டீசல் ரூ.92.39 க்கும் விற்பனை.

News March 11, 2025

தமிழ் தெரிந்தால் அரசு வேலை! நாளை கடைசி நாள்

image

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் மார்ச் 12ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பல்வேறு பதவிகளில் மொத்தம் 76 காலிப்பணியிடங்கள் உள்ளன.18-45 வயதுக்குள் இருக்க வேண்டும்.இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இந்து மதத்தை சார்ந்தவரக இருக்க வேண்டும்.ரூ.10,000 முதல் ரூ.50,400 வரை மாத சம்பளம். இந்த லிங்கை <>கிளிக் <<>>செய்து உடனே விண்ணப்பியுங்கள்

News March 11, 2025

சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வெப்ப அலை!

image

தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் ஏப்ரல் மாத இறுதி தொடங்கி மே மாதம் வரை வெப்ப அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, சென்னை திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலை ஏற்படக்கூடும். இதனால், பகல் நேரத்தில் வெளியில் செல்லும் மக்களுக்கு அசௌகரியமான சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.

News March 11, 2025

கருகிய நிலையில் ஐடி ஊழியரின் உடல் மீட்பு

image

சாலிகிராமத்தில் தனியாக வசித்து வந்த ஐடி ஊழியரின் வீடு இரண்டு நாட்களாக பூட்டி இருந்த நிலையில், கதவை உடைத்து பார்த்ததில் படுக்கை அறையில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார்.அவரது உடலை போலீசார் மீட்டு கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.இவர் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த நேதாஜி என்றும் சாலிகிராமத்தில்  2 ஆண்டுகளாக வீடு ஒன்று வாடைக்கு எடுத்து ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் என்றும் தெரியவந்துள்ளது.

error: Content is protected !!