Chennai

News August 5, 2025

சென்னை ரேஷன் அட்டைதாரர்களே…

image

விண்ணப்பித்த ரேஷன் கார்டு (ஸ்மார்ட்கார்டு ) கிடைக்கவில்லை என்றாலோ அல்லது உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தாலோ நீங்கள் அந்த <>இணையதளத்திலேயே <<>>புகார் அளிக்கலாம். உங்கள் பெயர், மொபைல் எண், இ-மெயில் முகவரியை உள்ளிட வேண்டும். வகைப்பாடு என்னும் இடத்தில ‘மின்னணு அட்டை கிடைக்க பெறவில்லை’ என்பதை தேர்வு செய்து உங்கள் புகாரை அனுப்பவும். வீட்டில் இருந்தபடியே செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News August 5, 2025

1 மணி நேரத்தில் சென்னை To வேலூர் செல்லலாம்

image

சென்னையிலிருந்து 140 கி.மீ. தூரத்தில் உள்ள வேலூருக்கு காஞ்சிபுரம் வழியாக RRTS ரயில் சேவையை கொண்டுவர அரசு முடிவெடுத்துள்ளது. இது மெட்ரோ ரயிலைவிட 3 மடங்கு வேகம் கொண்டது. பாலாஜி ரயில் ரோடு என்ற நிறுவனம் அதற்கான சாத்தியக்கூறுகளை தயாரித்து வருகிறது. இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் சென்னை – காஞ்சிபுரம் 25 நிமிடத்திலும், சென்னை – வேலூர் 1 மணி நேரத்திலும் சென்றடைய முடியும். ஷேர் செய்யுங்கள்

News August 5, 2025

சென்னையில் ரயில்வே வேலை… சூப்பர் வாய்ப்பு

image

இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர்- 5623, டிக்கெட் சூப்பர்வைசர்- 6235, ரயில் மேனேஜர்- 7367, அக்கவுண்ட் அசிஸ்டெண்ட்- 7520, கிளர்க்- 7367 என மொத்தம் 30,307 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு டிகிரி படித்திருந்தாலே போதும். ரூ.29,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் 30ஆம் தேதிக்கு மேல்தான் இந்த <>இணையத்தளத்தில்<<>> விண்ணப்பிக்க முடியும். சேவ் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க

News August 5, 2025

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை…

image

மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 4) பரவலாக மழை பெய்தது. சென்ட்ரல், எழும்பூர், அமைந்தகரை, அரும்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, கிண்டி, போரூர், ஈக்காட்டுத்தாங்கல், அம்பத்தூர், ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி, திருமுல்லைவாயல், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. உங்க ஏரியாவில் மாலை பெய்ததா?

News August 5, 2025

சென்னையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

சென்னையில் இன்று தண்டையார்பேட்டை, திரு.வி.க நகர், ஆலந்தூர், அடையாறு, ராயபுரம், தேனாம்பேட்டை பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை <>இங்கு<<>> கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, ஓய்வூதியம் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து, உடனடியாக பயன்பெறலாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News August 4, 2025

2024 ஆண்டை விட 2025ம் ஆண்டு உயிரிழப்பு குறைவு

image

சென்னை பெருநகரில் கடந்த ஆண்டை விட விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை கணிசமாக குறைத்துள்ளன என காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 2024 உடன் ஒப்பிடும்போது 03.08.2025 அன்றைய நிலவரப்படி இவ்வாண்டில் (2025) சாலை விபத்து இறப்புகள் 12% குறைந்துள்ளன.  கடந்த ஆண்டு 03.08.2024 வரை 316 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. இவ்வாண்டு அதே தேதி வரை ஒப்பிட்டு பார்க்கும்போது 278 உயிரிழப்புகள் நேர்ந்துள்ளது.

News August 4, 2025

காவல்துறையால் ரூ.18.08 கோடி மீட்பு

image

சென்னையில் ஜூலை 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பதிவான 35 புகார் மனுக்கள் மீதும் மேலும் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு மண்டலங்களில் சுமார் 156 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு ரூ.1.66கோடி மீட்கப்பட்டது. மேலும் நடப்பாண்டில் ரூ18.08கோடி மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என காவல்துறை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

News August 4, 2025

நடிகை மீரா மிதுனை கைது செய்ய உத்தரவு

image

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிடிவாரண்ட் பிறப்பித்து 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுன் டெல்லியில் இருப்பதாக அவரது தாய் மனு அளித்தார். மீரா மிதுனை கைது செய்து ஆக. 11-இல் ஆஜர்படுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News August 4, 2025

சென்னை: ஆடி மாதத்தில் போக வேண்டிய கோயில்

image

சென்னனை அருகே திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயில் திருமண தடை நீக்கும் புண்ணிய தலமாக உள்ளது. இங்கு மரத்தாலான கருமாரி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. மரச்சிலை அம்மன் என பெயர்கொண்ட இந்த அம்மனிடம் வேண்டி கொண்டால், நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. ஆடி மாதத்தில் வழிபட வேண்டிய முக்கியமான அம்மன் கோயில். ஷேர் பண்ணுங்க

News August 4, 2025

JUST NOW: பிரியாணி சாப்பிட்டதால் இப்படியா?

image

சென்னை ரத்தன் பஜாரில் உள்ள உணவகத்தில் பீப் பிரியாணி சாப்பிட்ட இளைஞருக்கு அலர்ஜி ஏற்பட்டு, வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கெட்டு போன பிரியாணியை வழங்கியதாக இளைஞரின் தாய் கூறியுள்ளார். பிரியாணி சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!