Chennai

News November 7, 2024

SDPI கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம்

image

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி SDPI கட்சி சார்பில் ஆழ்வார்பேட்டை, ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. சிறுபான்மை முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து, நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் அமரன் திரைப்படம் இருப்பதாக, மாநில செயலாளர் கரீம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

News November 7, 2024

மெத்தம்பெட்டமைன் சப்ளை செய்த பெண் கைது

image

சென்னையில் பப்களுக்கு செல்லும் இளைஞர், இளம்பெண்களுக்கு மெத்தம்பெட்டமைன் சப்ளை செய்த மணலி பகுதியைச் சேர்ந்த சகிமா மௌபியாவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவரது வீட்டில் இருந்து 7 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான சகிமா மௌபியாவின் தந்தை அக்பர் அலி போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு 12 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர்.

News November 7, 2024

லாரி மீது மோதி உருக்குலைந்த அரசு பேருந்து

image

சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருங்குழி பேரூராட்சி அருகே, இரும்பு கம்பி ஏற்றி சென்ற லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. கம்பி ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென மோதியது. இதில், பேருந்தின் முன்பகுதி முழுமையாக சேதமடைந்தது. ஓட்டுநர், நடத்துநர் பெரும் போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டனர். விபத்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம் அடைந்தனர்.

News November 7, 2024

இனி ஆண்டுக்கு 27,000 நாய்களுக்கு கருத்தடை

image

சென்னை மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கருத்தடை சிகிச்சை செய்வது, வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் நாய்கள் கருத்தடை செய்வதற்கான மையம் நவீனமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாய் கருத்தடை அறுவை சிகிச்சை ஆண்டுக்கு 27 ஆயிரமாக அதிகரிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News November 7, 2024

ஓட்டுநர் இல்லா 9 மெட்ரோ ரயில்கள் ஒப்படைப்பு

image

சென்னையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்க, மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் கடந்த அக்டோபர் மாதம் பூந்தமல்லி பணிமனையில் ஒப்படைக்கப்பட்டது. அடுத்த ரயில் டிசம்பர் மாதம் ஒப்படைக்கப்பட உள்ள நிலையில், ஓட்டுநர் இல்லாத மேலும் 9 மெட்ரோ ரயில்கள் மார்ச் மாதத்திற்குள் ஒப்படைக்கப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உங்கள் கருத்து?

News November 7, 2024

331 தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டில் உள்ளன

image

மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் தாழ்தள சொகுசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வலியுறுத்தப்பட்ட நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 611 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கப்பட்டன. இதில் முதல் கட்டமாக 51 பேருந்துகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, பல்வேறு கட்டங்களில் இதுவரை 331 தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன குறிப்பிடத்தக்கது.

News November 7, 2024

சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு

image

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாகி குடை எடுத்துச் செல்லுங்கள்.

News November 7, 2024

சென்னையில் கனமழை

image

சென்னையில் தற்போது மழை பெய்து வருகிறது. திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அண்ணா சாலை, மாம்பலம், அம்பத்தூர், பாடி, கொரட்டூர், நுங்கம்பாக்கம், மாதவரம், பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால், பணிக்கு செல்வோர் மழையில் நனைந்தபடி சென்றனர். காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க ஏரியாவில் மழையா?

News November 7, 2024

வரும் 9ஆம் தேதி பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம்

image

சென்னையில் உள்ள உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் வரும் 9ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோக திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள், இதில் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்.

News November 7, 2024

திருவான்மியூர் முதல் 6 வழிச்சாலை பணி துவக்கம்

image

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் முதல் அக்கரை வரை 6 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் அடுத்தாண்டு ஏப்ரலுக்குள் முடிக்க திட்டம்இப்பணியில் சாலையின் மையத்தில் 1.2 மீட்டர் அகலத்திற்கு தடுப்புச் சுவர், அதனை அடுத்து இருபுறமும் 11 மீட்டர் அகலத்திற்கு தார் சாலை, அடுத்து 1.65 மீட்டர் அகலத்திற்கு பேவர் பிளாக் தளம் மற்றும் 2 மீட்டர் அகலத்திற்கு மழைநீர் வடிகாலுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட உள்ளன

error: Content is protected !!