India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை அயனாவரத்தில் பிரசித்தி பெற்ற பரசுராம லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு பரசுராமர் சிவனை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. மேலும், இங்குள்ள சிவ லிங்கம் ஆவணி- மார்கழி மாதம் வரை கருப்பு நிறமாகவும், பங்குனி- ஆடி மாதம் வரை பொன் நிறமாகவும் காட்சியளிக்கிறது. இங்கு வந்து வழிபட்டால், பாவங்கள் நீங்கி லிங்கம் நிறம் மறுவதுபோல் வாழ்க்கையில் மாற்றம் நிகழும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க.

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது ’TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் நாளை (ஜன.27) மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 – பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். அடையாறு: கெனால் பங்க் சாலை, புற்றுநோய் மருத்துவமனை, காந்தி நகர், கெனால் குறுக்குத் தெரு, விவேக் ஷோரூம், கிரசண்ட் அவென்யூ, காமராஜ் கல்லூரி, பம்பிங் ஸ்டேஷன், மலர் மருத்துவமனை, மல்லிபூ நகர், கருணாநிதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.

சென்னையில் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் சென்னை சுகாதார அதிகாரியிடம்044-24321566 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று(ஜன. 26), ஞாயிறு அட்டவணையின்படி மெட்ரோ இரயில்கள் இயங்கும் என சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. காலை 5 மணி முதல் 12 வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 10 நிமிட இடைவெளியிலும், பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும்.

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் வசிக்கும் 28 வயதான தனியார் கம்பெனி ஊழியர் ஒருவர் ‘GRINDER’ செயலி மூலம் பலரை தொடர்புகொண்டு தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். செயலில் கனமாப்பேட்டையில் பரிட்சயமான ஒருவரை சந்திக்க சென்றுள்ளார். அங்கு 5 பேர் கொண்ட கும்பல் இரவு முழுவதும் விடிய விடிய அடித்து உதைத்து, நகை, G-PAY மூலம் ரூ.5,000த்தை அபகரித்துள்ளனர். புகாரின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் தென்றல் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன்(19). கல்லூரி மாணவரான இவர், தென்றல் நகர் 9-வது தெருவில் பைக்கில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அதே பகுதியை சேர்ந்த ரவுடியான ஆதிகேசவன்(24). வேகமாக சென்றதை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் தனது 3 நண்பர்களுடன் வந்து ஆதிகேசவன் தலையில் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். புகாரின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கேரளாவில் இருந்து வந்த பேருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு கோயம்பேடுக்கு செல்ல வேண்டிய சுமார் 18 பயணிகளுடன் தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. பல்லாவரம் அடுத்த திருநீர்மலை அருகே வரும்போது திடீரென பஸ்சின் முன்புற வலது பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சுமார் 10 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் 20 பேர் காயமடைந்தனர்.

உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <

சென்னை மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். 1) ஆதார் : https://uidai.gov.in/, 2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in, 3) பான் கார்டு : incometax.gov.in 4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in 5) சென்னை மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://chennai.nic.in/ மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.