Chennai

News March 28, 2025

அடிக்கடி உடைக்கப்படும் சாலைகள் – தண்டையார்பேட்டை மக்கள் அவதி

image

தண்டையார்பேட்டையில் “இயேசு நம்முடன் ஜெபக்கூடம்” அருகில் உள்ள சாலை மீண்டும் தோண்டப்பட்டுள்ளது. மக்கள் புழக்கம் அதிகம் உள்ள சாலை பகுதியான அப்பகுதியில் அடிக்கடி, இது போன்ற சாலை பணிகள் நடந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து இதுபோல சாலைகளை உடைப்பதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகள் ஏற்படும் அபாயமும் எழுந்துள்ளது.

News March 28, 2025

வனத்துறை அமைச்சர் பொன்முடி குறும்படத்தை வெளியிட்டார்.

image

சென்னை தலைமைச் செயலகத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி திண்டுக்கல் மாவட்டம், காசம்பட்டி கிராமத்தில் 4.97 ஹெக்டேர் அளவிலான பகுதி பல்லுயிர் பாரம்பரிய தலமாக (Bio diversity Heritage Site) அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது தொடர்பான குறும்படத்தை வெளியிட்டார். இந்நிகழ்வின்போது சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்

News March 27, 2025

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் 2 பேர் பதவிநீக்கம்

image

சென்னை மாநகராட்சியின் கவுன்சிலர்கள் 2 பேரை பதவி நீக்கம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 5ஆவது வார்டு உறுப்பினர் கே.பி.சொக்கலிங்கம், 189ஆவது வார்டு உறுப்பினர் பாபு ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சட்ட வகைமுறைகளை மீறும் வகையில் செயல்படுவோரை நீக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதாக முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

News March 27, 2025

சென்னையில் நிறம் மாறும் அதிசய லிங்கம்

image

சென்னை அயனாவரத்தில் பிரசித்தி பெற்ற பரசுராம லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு பரசுராமர் சிவனை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. மேலும், இங்குள்ள சிவ லிங்கம் ஆவணி- மார்கழி மாதம் வரை கருப்பு நிறமாகவும், பங்குனி- ஆடி மாதம் வரை பொன் நிறமாகவும் காட்சியளிக்கிறது. இங்கு வந்து வழிபட்டால், பாவங்கள் நீங்கி லிங்கம் நிறம் மறுவதுபோல் வாழ்க்கையில் மாற்றம் நிகழும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க.

News March 27, 2025

சென்னையில் அடுத்த 10 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்!

image

சென்னையில் அடுத்த 10 நாட்களுக்கு வெப்பம் மேலும் படிப்படியாக அதிகரிக்கும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 2வது வாரத்தில் குறைந்த காற்றழுத்தம் தமிழ்நாடு அல்லது தெற்கு ஆந்திரப் பிரதேசத்தை நோக்கி நகருவதால் அதீத வெப்பநிலை இருக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கண்டித்துள்ளார். எனவே தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்த்து முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே. ஷேர் பண்ணுங்க.     

News March 27, 2025

எச்சரிக்கை: மெட்ரோ வேலை காரணமாக குடிநீர் ரத்து

image

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு, ஆயிரம் விளக்கு, தி.நகர், கோபாலபுரம், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், மேற்கு மாம்பலம், அசோக் நகர், கே.கே.நகர், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் 29ஆம் தேதி காலை 10 மணி முதல் 30ஆம் தேதி காலை 10 மணி வரை குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படும். ஷேர் செய்யுங்கள்.

News March 27, 2025

பள்ளி படிப்பும், கணினி திறனும் இருந்தால் வேலை

image

மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர் ஆகிய பணியிடங்கள் நிரப்படவுள்ளன. ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ.19,900 – 63,200, ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு ரூ.25,500 – 81,100 வரை சம்பளம் வாங்கப்பட உள்ளன. பள்ளிப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி திறன் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.

News March 27, 2025

சென்னையில் 4ஆவது என்கவுண்டர்

image

சென்னையில் நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் என்கவுண்டர் செய்தனர். 2024 ஜூலை மாதம் சென்னை போலீஸ் கமிஷனராக ஏ.அருண் பொறுப்பேற்றதிலிருந்து, நடக்கும் 4ஆவது என்கவுண்டர் ஆகும். முன்னதாக, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம், பிரபல ரவுடி காக்காத்தோப்பு பாலாஜி, மற்றொரு பிரபல ரவுடியான சீசிங் ராஜா என இதுவரை 4 என்கவுண்டர்கள் நடந்துள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்து? அப்படியே ஷேர் பண்ணுங்க

News March 27, 2025

சென்னையில் இன்று இரவு காவல் ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 26, 2025

நோய் விலகி நலம் தரும் திருநீா்மலை ரங்கநாதர்

image

தென் சென்னைப் பகுதியில் உள்ள குரோம்பேட்டையில் இருந்து 5 கி.மீ தூரத்தில் பிரசித்தி பெற்ற திருநீா்மலை ரங்கநாதர் சுவாமி கோவில் உள்ளது. இத்தலத்தில் உள்ள குளத்தில் நீராடி வழிபட்டால் நோய் விலகி நலம் உண்டாகும். மேலும், குழந்தை இல்லாதவர்கள் மரத்தில் தொட்டில் கட்டியும், திருமண தடை நீங்க கிரிபிரதட்சணம் செய்தும் வழிபட்டால் உடனே வேண்டியது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!