India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

சென்னை மெட்ரோ ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று CMRL உதவி எண்கள் செயல்படவில்லை. மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இன்று கோளாறு சரிசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது CMRL உதவி எண் 1860 425 1515 மற்றும் பெண்கள் உதவி எண் 155370 வழியாக புகார்கள் தெரிவிக்கலாம். மேலும், ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னை தெற்கு ரயில்வேயில் ‘யூடிஎஸ் ‘ செயலி மார்ச் முதல் நிறுத்தப்பட்டு அதற்குப் பதிலாக ‘ரயில் ஒன்’ செயலி பயன்பாட்டிற்கு வருகிறது. முதல்கட்டமாக டிக்கெட் முன்பதிவு, புதுப்பித்தல் மற்றும் புதிய பயனர் பதிவு நிறுத்தப்படும். தொடர்ந்து பிளாட்பார்ம் டிக்கெட், ஆர்-வாலட் டாப்-அப் வசதிகளும் முடக்கப்படும். பயனர்களின் ஆர்-வாலட் இருப்பு பாதுகாப்பாக இருக்கும். அதனை ‘ரயில் ஒன்’ செயலியில் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

நொளம்பூர் மற்றும் முகப்பேர் சாலை யில் நடந்து சென்ற பெண்களிடம், முகவரி கேட்பது போல நெருங்கிய நபர் ஒருவர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் திருமங்கலம் மகளிர் போலீசார், சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். இதில், நொளம்பூரைச் சேர்ந்த பயாஸ் அகமது (45) என்பது தெரிந்தது. போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.

டி.பி.சத்திரம், ஜோதியம்மாள் நகரை சேர்ந்தவர் பரமசிவம் (50). கடந்த 5 – ந் தேதி இரவு வீட்டினருகே நடந்து வரும்போது, அவரது அண்ணன் மகனான சந்தோஷ் என்பவர் இவரை அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதை தடுக்க வந்த பரமசிவத்தின் மனைவி, மகளையும் தாக்கியுள்ளார். புகாரின் பேரில் டி.பி சத்திரம் போலீசார் ராணிப்பேட்டை சொறையூரை சேர்ந்த சந்தோஷ்குமார் (25) என்பவரை கைது செய்தனர்.

நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் தர்ஷிகா (14). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9 – ம் வகுப்பு படித்து வந்தார். இவர் செல்போனில் அதிக நேரம் விளையாடியதால் அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த தர்ஷிகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நுங்கம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர். *தற்கொலை எதற்கும் தீர்வல்ல*

பீகாரை சேர்ந்தவர் ராஜ்குமார் (22). இவர் சொந்த ஊர் சென்று விட்டு, நேற்று பெரம்பூரில் இருந்து ஆட்டோ மூலம் மாத்தூர் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் வியாசர்பாடி, கள்ளுக்கடை ஜங்சன் அருகில் ஆட்டோவை நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர், இவரை மிரட்டி தாக்கி ரூ.10,000/-ஐ பறித்து சென்றார். புகாரின் பேரில் வியாசர்பாடி போலீசார், பெரம்பூரை சேர்ந்த விக்னேஷ்வரன் (33) என்பவரை நேற்று கைது செய்தனர்.

பீகாரை சேர்ந்தவர் ராஜ்குமார் (22). இவர் சொந்த ஊர் சென்று விட்டு, நேற்று பெரம்பூரில் இருந்து ஆட்டோ மூலம் மாத்தூர் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் வியாசர்பாடி, கள்ளுக்கடை ஜங்சன் அருகில் ஆட்டோவை நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர், இவரை மிரட்டி தாக்கி ரூ.10,000/-ஐ பறித்து சென்றார். புகாரின் பேரில் வியாசர்பாடி போலீசார், பெரம்பூரை சேர்ந்த விக்னேஷ்வரன் (33) என்பவரை நேற்று கைது செய்தனர்.

பீகாரை சேர்ந்தவர் ராஜ்குமார் (22). இவர் சொந்த ஊர் சென்று விட்டு, நேற்று பெரம்பூரில் இருந்து ஆட்டோ மூலம் மாத்தூர் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் வியாசர்பாடி, கள்ளுக்கடை ஜங்சன் அருகில் ஆட்டோவை நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர், இவரை மிரட்டி தாக்கி ரூ.10,000/-ஐ பறித்து சென்றார். புகாரின் பேரில் வியாசர்பாடி போலீசார், பெரம்பூரை சேர்ந்த விக்னேஷ்வரன் (33) என்பவரை நேற்று கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.