Chennai

News April 11, 2025

6ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்

image

சென்னையில், 6ஆம் வகுப்பு மாணவியை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வேன் ஓட்டுனர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் ஆள் இல்லாத நேரம் பார்த்து அத்துமீறி நுழைந்து, சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் தொல்லைகள் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன அழுத்தத்திற்கு உள்ளான சிறுமி நடந்த சம்பவங்களை தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

News April 11, 2025

சென்னையில் வரும் 21ஆம் தேதி முதல் அமல்

image

விதிகளை மீறி கட்டுமான மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டினால் நாள் ஒன்றுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் விதிகளை மீறி கழிவுகளை கொட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். நீர்நிலைகளில் கழிவுகளை கொட்டினால் டன் ஒன்றுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். , கட்டட கழிவுகளை ஒப்படைப்பதில் 1 டன் வரை இலவசமாக கொடுக்கலாம். கழிவுகள் அதிக அளவு இருந்தால் அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படும்.

News April 11, 2025

முன்ஜாமின் கோரி ஜான் ஜெபராஜ் நீதிமன்றத்தில் மனு

image

பாலியல் வழக்கில் போலீசாரால் தேடப்படும் பிரபல கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ், தனக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இவர், கடந்தாண்டு தனது வீட்டில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற 2 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, அந்த சிறுமிகள் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News April 11, 2025

ரேஷன் அட்டையில் திருத்தும் செய்யணுமா?

image

நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, சென்னை மண்டல உதவி ஆணையர் மற்றும் <>வட்ட வழங்கல் அலுவலகங்களில் <<>>ரேஷன் அட்டை திருத்த முகாம் நடத்தபட உள்ளன. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச் செய்து கொள்ளலாம். இலவசமாகவே அப்டேட் செய்து கொள்ளலாம். கட்டணம் இல்லை. மறக்காமல் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News April 10, 2025

Grindr செயலியை தடை செய்ய தமிழ்நாடு அரசுக்கு கடிதம் 

image

போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை போலீசார் தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான டேட்டிங் ஆப் Grindr செயலியை தடை செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் கடிதம் எழுதியுள்ளார். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகும் 10ல், 5 பேர் இந்த செயலியை பயன்படுத்துவது உறுதியாகியுள்ளதாக அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

News April 10, 2025

சென்னை மக்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய எண்கள்

image

▶️சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர், 044-25228025 ▶️சென்னை மாநகராட்சி ஆணையாளர், 044-25381330 ▶️ சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர், 044-23452345 ▶️ மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், 044-27662400 ▶️ மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர், 044-24714758 ▶️ லஞ்ச ஒழிப்புத் துறை, 044-22310989. மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.

News April 10, 2025

18 மின்சார ரயில்கள் ரத்து

image

சென்னை சென்டிரல் – கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் உள்பட 18 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை சென்டிரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி – கவரைப்பேட்டை இடையேயான ரயில் நிலைய பாதையில் இன்று (வியாழக்கிழமை) மற்றும் 12 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை (6 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

News April 10, 2025

மாநகராட்சியில் வேலை: நாளை கடைசி நாள்

image

சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள நகர்புற சுகாதார நல மையங்களில் 345 பணியிடங்கள் உள்ளன. மருத்துவ அதிகாரி, நர்ஸ், சுகாதார பணியாளர், சமூக சேவகர், பேறுகால பணியாளர், எக்ஸ்ரே வல்லுநர், சப்போர்ட் ஸ்டாஃப் உள்ளிட்ட பணிகள் நிரப்பப்பட உள்ளன. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் நாளை 5 மணிக்குள் ரிப்பன் மாளிகைக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். ஷேர் செய்யுங்க

News April 10, 2025

ராணுவத்தில் வேலை: இன்றே கடைசி நாள்

image

அக்னிவீர் திட்டத்தின்படி, ராணுவத்தில் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சியான இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் உள்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும். 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News April 10, 2025

பேருந்துகள் மோதி விபத்து: 20 பேர் காயம்

image

சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு புறப்பட்ட அரசு பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த தனியார் பேருந்துடன் பலமாக மோதியது. இந்த விபத்தில் அரசு பேருந்து வயல்வெளியில் கவிழ்ந்தது. படுகாயமடைந்த 20 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!