Chennai

News March 28, 2025

சென்னை மக்களே இந்த WEEK END பிளான் ரெடி

image

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காட்டில் தட்சிணசித்ரா என்ற அருங்காட்சியகம் உள்ளது. இங்கு ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் கலை, கட்டிடக்கலை, கலாச்சாரம், கைவினை மற்றும் வாழ்க்கை முறையை சித்தரிக்கும் 18 வீடுகள் உள்ளன. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா என தென் மாநிலங்களின் கலைப் பொருட்களை காணலாம். நுழைவு கட்டணம் ரூ.20- 110 மட்டுமே. விசிட் பண்ணுங்க. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 28, 2025

IPL: சேப்பாக்கத்தில் இன்று போக்குவரத்து மாற்றம்

image

ஐ.பி.எல். போட்டியையொட்டி, சேப்பாக்கத்தில் இன்றிரவு 7 மணி – 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விக்டோரியா விடுதி சாலை செல்ல பாரதி சாலை வழியாக மட்டுமே வாகனங்களுக்கு அனுமதிக்கப்படும். வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படும். ரத்னா கஃபேவில் இருந்து மெரினா காமராஜர் சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் திருப்பி விடப்படும்.

News March 28, 2025

நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கம்

image

சென்னை சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். போட்டி நடப்பதையொட்டி, இன்று (மார்.28) நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்தில் இருந்து நள்ளிரவு 1 மணிக்கு விம்கோ நகர் பணிமனைக்கும், விமான நிலையத்திற்கு கடைசி மெட்ரோ இயக்கப்படும். ஐ.பி.எல். போட்டி நடப்பதையொட்டி, மெட்ரோ ரயிலில் ரசிகர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 28, 2025

தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு

image

தெற்கு ரயில்வேயின் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு, ரயில்வேயில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்றுவிப்பாளர், இன்ஜினியர் (JE) ஆகிய பதவிகளில் 20 பணியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள 65 வயதுக்கு உட்பட்டவர்கள் வரும் ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் இந்த <<-1>>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். நல்ல சம்பளம் வழங்கப்படும். வேலை தேடும் நண்பர்ளுக்கு ஷேர் பண்ணுங்க

News March 28, 2025

கணவரை விட்டு ஓடிவந்த நடிகை ரம்பா

image

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்பா, “ஒருமுறை என் கணவருடன் சண்டை போட்டுவிட்டு, தனது திங்ஸ் எல்லாம் பேக் செய்து எடுத்துக்கொண்டு விமானம் மூலம் சென்னை வந்துவிட்டேன். இது தெரியாமல், கணவர் என்னை கனடாவில் தேடி கொண்டிருந்தார். இதையறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார். கோபத்தில் சில சமயங்களில் நான் தைரியமாக முடிவு எடுப்பேன். இல்லை என்றால், வீட்டுக்குள் பெட்டி பாம்பாக உட்கார்ந்திருப்பேன்” என்றார்.

News March 28, 2025

மெட்ரோ ரயில் பணி: போக்குவரத்து மாற்றம்

image

கொன்னூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, வரும் 30ஆம் தேதி முதல் ஐ.சி.எப், அயனாவரம் வழியாக புளியந்தோப்பு, சென்ட்ரல், பாரிஸ் கார்னர் செல்லும் வாகனங்கள் கொன்னூர் நெடுஞ்சாலையில் இடதுபுறம் திரும்பி டேங்க் பங்க் ரோடு – கிருஷ்ண தாஸ் ரோடு, குக்ஸ் ரோடு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

News March 28, 2025

குழந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய தந்தை

image

மண்ணடி, லிங்குச் செட்டி தெருவைச் சேர்ந்தவர் அக்ரம் ஜாவித் (33). இவருக்கு 2.5 வயதில் பாஹிமா என்ற பெண் குழந்தை உள்ளது. இவருக்கு, தனது மனைவி நிலோபரின் நடத்தையில் கடந்த சில தினங்களாக சந்தேகம் இருந்துள்ளாது. அதனால், கடந்த 2 தினங்களுக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடியுளார். இதை கண்டுபிடித்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News March 28, 2025

ஆயிரம் விளக்கு பகுதியில் நல்ல திட்ட உதவிகள்

image

முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சென்னை மேற்கு மாவட்டம், ஆயிரம் விளக்கு கிழக்கு பகுதி திமுக, 117வது வட்ட செயலாளர் எஸ்.சத்திய பெருமாள் ஏற்பாட்டில், தாமஸ் சாலை அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்று சிறப்புரையாற்றி, அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சிற்றரசு.

News March 28, 2025

சென்னையில் இன்றைய இரவு காவலர்கள் விவரம்

image

சென்னையில் இன்று (27.03.2025) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 28, 2025

சென்னை கோயம்பேட்டில் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்த ரவீந்திரன் துரைசாமி

image

சென்னை கோயம்பேட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அரசியல் விமர்சகர் திரு ரவீந்திரன் துரைசாமி மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேசினார். இருவருக்கிடையில் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது. தற்போதைய அரசியல் நிலைமைகள், எதிர்கால கூட்டணிகள் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

error: Content is protected !!