Chennai

News March 14, 2026

சென்னை: டூவீலர், கார் ஓட்ட தெரிந்தவரா நீங்கள்?

image

சென்னையில், போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். <>DigiLocker<<>>, M parivaahan போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.

News March 14, 2026

சென்னை: UPI யூஸ் பண்றீங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க!

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News March 14, 2026

சென்னை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க.

News March 14, 2026

சென்னை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க.

News March 14, 2026

சென்னை: VOTER ID க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

சென்னை மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .
1<>.இங்கு க்ளிக்<<>> செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

News March 14, 2026

வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ளவர்களுக்கு உதவி எண்

image

சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பில், ஈரான் நாட்டில் சிக்கியுள்ள சென்னை மாவட்டத்தைச் சார்ந்த மக்கள் ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய தூதரக உதவி எண்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. துபாய்-ஐக்கிய அரபு நாடுகள் +971 543090571 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், 24மணி நேரமும் இயங்கும் 800 46342 (டோல் ப்ரீ) எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News March 14, 2026

சென்னை மக்களுக்கு ஓர் அறிவிப்பு

image

சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் மார்ச் 14, 2026 சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நகரம் முழுவதும் உள்ள அனைத்து பகுதி அலுவலகங்களிலும் திறந்தவெளி குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல், புதிய இணைப்பு, வரி மற்றும் கட்டணங்கள் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News March 14, 2026

ஆலந்தூரில் 1000 மகளிருக்கு இலவச தையல் இயந்திரம்

image

சென்னை ஆலந்தூர் வடக்கு பகுதியில் உள்ள 1000 மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தையல் இயந்திரங்களை நேற்று வழங்கினார். பெண்கள் சுயதொழில் செய்து பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கில் இந்த இயந்திரம் வழங்கப்பட்டதாக அவர் கூறினார். நிகழ்ச்சியில் மகளிர் அணி உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

News March 14, 2026

சென்னையில் கத்தியால் குத்தி கொடூர கொலை; வந்தது தீர்ப்பு!

image

திருவான்மியூரில் அக்கா கணவரை கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில் குற்றவாளியான தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஏழுமலை என்ற நபர் குடித்துவிட்டு தினமும் மனைவி சித்ராவுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தட்டி கேட்ட மனைவியின் தம்பியுடன் ஏற்பட்ட தகராறில், அவர் ஏழுமலையை கத்தியால் குத்தினார்.

News March 14, 2026

கடற்கரை – பரங்கிமலை இடையே ரயில் சேவை தொடக்கம்!

image

சென்னை கடற்கரை – பரங்கிமலை இடையே இன்று பறக்கும் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆதம்பாக்கத்தில் மட்டும் தற்போது ரயில்கள் நிற்காது எனவும், விரைவில் இச்சேவை முழுமையாக செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையின் போக்குவரத்து இன்னும் எளிமையாகும் என்றும், இந்த பயணம் புதுவித அனுபவத்தை கொடுக்கும் என்றும் MRTS தெரிவித்துள்ளது.

error: Content is protected !!