India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் முதல்முறையாக AC வசதியுடன் கூடிய புறநகர் ரயில் சேவை இன்று (ஏப்ரல் 19) தொடங்கியது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை முதல் AC ரயில் இன்று புறப்பட்டது. சென்னை கடற்கரையில் இருந்து காலை 7 மணி, பிற்பகல் 3.45 மணி, இரவு 7.35 மணிக்கு இந்த AC ரயில் சேவை இருக்கும். இன்று காலை 7 மணிக்கு புறப்பட்ட AC ரயில் 8.45 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும். ஷேர் செய்யுங்கள்
சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (18.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*
செல்வத்திற்கு அதிபதி லட்சுமி. அதைக் காப்பவர் குபேரன். இவ்விருவரும் அருள்பாலிக்கும் லட்சுமி குபேரர் கோவில், சென்னை அருகே ரத்தினமங்கலத்தில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே லட்சுமி குபேரருக்கு இருக்கும் ஒரே கோவில் இதுதான். இக்கோவிலில், பௌர்ணமி, அமாவாசையில் லட்சுமி குபேர பூஜை செய்தால் போதும், உங்கள் வாழ்வில் செல்வம் செழித்தோங்கும் என்பது ஐதீகம. *நண்பர்களுக்கும் லட்சுமி குபேரரை தெரியப்படுத்துங்கள்*
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து புராதன சின்னங்களை கண்டு களித்து வருகின்றனர். இந்நிலையில், சர்வதேச பாரம்பரிய தினம் மற்றும் புனித வெள்ளி இன்று (ஏப்ரல் 18) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி இலவசமாக சுற்றிப்பார்க்கலாம் என்று தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. ஷேர் செய்யுங்கள்
சென்னை மாநகரத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாகவும் பாதுகாப்புடனும் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக, பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட ‘இளஞ்சிவப்பு’ ஆட்டோக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த இளஞ்சிவப்பு ஆட்டோக்களை பெண்களே ஓட்ட வேண்டும் என்றும், விதிகளை மீறினால் ஆர்.டி.ஓ. மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சமூக நலத்துறை எச்சரித்துள்ளது. ஷேர் செய்யுங்கள்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் மாதாந்திர உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். 10, 12ஆம் வகுப்பு, தொழிற்கல்வி, பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளை படித்து இருக்க வேண்டும். அதேபோல், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறையாக பதிவு செய்து இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு குறைவாக இருக்க வேண்டும்.
சென்னை ஐ.ஐ.டி.,யில் பதிவாளர், கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 23 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மே 19ஆம் தேதிக்குள் இந்த <
சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புனித வெள்ளியான இன்று (ஏப்ரல் 18) பெருநகர் மற்றும் புறநகரில் ஒருசில பகுதிகளில் சாரல் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விடுமுறையை முன்னிட்டு வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது வெயில் அடித்தாலும், இன்றைக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஷேர் செய்யுங்கள்.
அண்ணா சதுக்கத்திலிருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற 25G அரசுப் பேருந்து, குமணன்சாவடி அருகே உள்ள மெட்ரோ ரயில் தூணில் மோதி விபத்துகுள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி நொறுங்கிய நிலையில், டிரைவர் உட்பட 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். டிரைவர் தூக்க கலக்கத்தில் தடுப்பு சுவற்றில் மோதினாரா? அல்லது பேருந்து பழுது ஏற்பட்டு மோதியதா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (17.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம்.
Sorry, no posts matched your criteria.