India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் இன்று (01.04.2025) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள, உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சியில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். கடந்த நிதியாண்டில் மொத்தம் ரூ.2,025 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி வரலாற்றிலேயே ரூ.2,000 கோடிக்கு மேல் சொத்து வரி வசூலிக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும். இது முந்தைய நிதியாண்டைவிட ரூ.275 கோடி அதிகம்.
சென்னை திருவல்லிக்கேணியில் பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி கோயில் உள்ளது. இங்கு வந்து பெருமாளை மனமுருக வேண்டினால், கணவன்- மனைவி இடையே சண்டை சச்சரவு என எதுவும் இல்லாமல் குடும்ப ஐஸ்வர்யம் மேம்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், திருமண வரம், குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். உங்களுக்கு தெரிந்த தம்பதிகளுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (02-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் நேற்று (மார்.31) சென்னை வந்தடைந்தனர். ஏப்ரல் 5ஆம் தேதி சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், டெல்லி அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதற்காக இன்று (ஏப்ரல் 1) முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
கடைகளில் இருந்து தர்பூசணி பழங்கள் வாங்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சோதனை செய்து பார்த்த பிறகே, தர்பூசணி பழத்தை வாங்குங்கள். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விரைவாக கெட்டு விடும் என்பதால், சில பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றில் இந்த ரசாயனத்தை கலந்து ஜூஸ் போடுவதாகக் கூறப்படுகிறது. லாபம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பழங்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.
ரசாயனங்களை தண்ணீரில் கலந்து அதனை ஊசி மூலமாக தர்பூசணி பழங்களுக்குள் செலுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் அண்மையில் தெரிவித்தார். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் சிவந்து போய் இருக்கும். அதன் மீது ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து தேய்க்கும்போது, டிஷ்யூ பேப்பர் மீது ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறம் படிந்து இருந்தால் அதில் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறது.
செங்கல்பட்டு அருகே நடந்த கோர விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து புறப்பட்ட லாரி ஒன்று சிங்கப்பெருமாள் கோவில் அருகே திடீரென பிரேக் பிடித்ததால், பின்னால் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியது. அப்போது, மற்றொரு டிப்பர் லாரி கார் மீது மோதியது. இதில், கார் நசுங்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மூவர் பலத்த காயம் அடைந்தனர்.
சென்னை பெரவள்ளூரில் சந்துரு என்ற இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தனது நண்பரோடு மது அருந்தி விட்டு வந்தவரை, ஆட்டோவில் வந்த இருவர் வழிமறித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்துருவை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளனர். மேலும், கொலையில் தொடர்பு இருப்பதாக வினோத் உள்ளிட்ட இருவரை தேடி வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வடதிருமுல்லைவாயலில் மாசிலாமணீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த தலத்தில் உள்ள நந்தி பகவானுக்கு பூஜை செய்து சாத்திய மாலையை அணிந்தால் திருமணத்தடை, புத்திரதோஷம் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், குடும்ப நலம், உடல் நலம், செல்வம் பெருக பக்தர்கள் இங்கு வந்து இறைவனை வழிபடுகின்றனர். மேலும், இந்த காரியம் அனைத்தும் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். பணப்பிரச்சனை உள்ள உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.