Chengalpattu

News November 11, 2024

ஒக்கியம் மடு ஆற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

image

கண்ணகி நகர் காவல் நிலையத்தில் உள்ள தங்கவேலு இன்ஜினியரிங் கல்லூரி அருகே ஒக்கியம் மடு ஆற்றில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தீயணைப்புத்துறை உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 11, 2024

மாவட்ட அளவில் கலைத் திருவிழா போட்டிகள் துவக்கம்

image

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் துவக்க நிகழ்ச்சி செங்கல்பட்டு தூய மரிய அன்னை மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முதன்மைக் கல்வி அலுவலர் கற்பகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆட்சியர் அருண்ராஜ், மாணவர்களை வாழ்த்தி போட்டிகளை துவங்கி வைத்தார். எம்.எல்.ஏ வரலட்சுமி மதுசூதனன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

News November 11, 2024

செங்கல்பட்டு அருகே விபத்தில் மரணம் 

image

காட்டாங்குளத்தூர் கன்னியம்மன் கோவில் தெருவை சார்ந்தவர் விஜயா ஆனந்த் (35) நேற்று இரவு 8:40 மணிக்கு ஜிஎஸ்டி சாலையில் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது பாண்டிச்சேரி நோக்கி சென்ற கார் ஒன்று இவர் பைக் மீது மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரவு 9 மணிக்கு உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய பாண்டிச்சேரியை சார்ந்த எபினேசர் (47) கைதானார்.

News November 11, 2024

செங்கல்பட்டு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு 

image

செங்கல்பட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள், கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம். https;//bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes என்ற இணையதள முகவரியிலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் ஜன., 15க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.

News November 11, 2024

இன்று முதல் 20ம் தேதி வரை சிறப்பு கடன் முகாம்

image

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் வாயிலாக, செங்கல்பட்டு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், எட்டு தாலுகா தலைமை இடங்களிலும், சிறப்பு கடன் முகாம் இன்று முதல் 20ம் தேதி வரை நடக்கிறது. பல்லாவரத்தில் இன்றும், தாம்பரத்தில் நாளையும், வண்டலுாரில் நாளை மறுநாளும் இம்முகாம் நடக்கிறது. இதனை பயன்படுத்தி பயனடையுமாறு செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் கேட்டுக்கொண்டார்

News November 10, 2024

செங்கல்பட்டில் நவ.13 முதல் மழைக்கு வாய்ப்பு

image

வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக வரும் நவ.13ஆம் தேதி முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 10, 2024

செங்கல்பட்டு:முதல்வர் மருந்தகம் வைக்க விண்ணப்பம் வரவேற்பு

image

செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார் வெளியிட்ட அறிவிப்பு, செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் வைக்க விருப்பம் உள்ளோர் வரும் 20ஆம் தேதிக்குள் www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். டி.பார்ம், பி.பார்ம் முடித்தவர்கள் இதில் பயன் பெறலாம். இதற்கு ரூ.3 லட்சம் ரொக்கமாக மற்றும் மருந்துகளாக வழங்கப்படும்.

News November 10, 2024

செங்கல்பட்டு அருகே விபத்தில் இளைஞர் மரணம் 

image

பெருங்களத்தூர் – வண்டலூர் ரயில்வே பாதையில் இளைஞர் உடல் ஒன்று கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் இறந்து கிடந்த சடலத்தை மீட்டு விசாரணை செய்ததில், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (19) என்பவர் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது தேஜாஸ் ரயில் மோதி இறந்தது தெரிந்தது.

News November 10, 2024

செங்கல்பட்டு மீனவர்களின் வாரிசுகள்  கடற்படையில் சேர வாய்ப்பு

image

கோவளம், சட்ராஸ், முதலியார்குப்பம் ஆகிய கடலோர கிராமங்களில் வசிக்கும் மீனவர்களின் பிளஸ் 2 முடித்த மகன், மகள்கள் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படையில் சேர இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. விருப்பமுள்ள மீனவர்களின் வாரிசுகள், நவ., 15க்குள் கோவளம், சட்டாஸ், முதலியார்குப்பம் ஆகிய கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்திலும், நீலாங்கரை மீன்வளத்துறை அலுவலகத்திலும் விண்ணப்பங்களை அளிக்கலாம்.

News November 10, 2024

அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கிய மாமன்ற உறுப்பினர்

image

தாம்பரம் மாநகராட்சியின் 50ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் எம்.யாகூப் இன்று அமைச்சர் தா.மோ. அன்பரசனை நேரில் சந்தித்தார். அப்போது தனது வார்டில் மக்கள் பணிகள் புறக்கணிக்கப்படுவதாக கூறி மக்களுக்கு தேவையான கோரிக்கைகளை மனுவாக அமைச்சரிடம் வழங்கினார். அதிகாரியிடம் தெரிவித்து மக்கள் வளர்ச்சி பணிகள் முறையாக நடைபெறும் என அப்போது அமைச்சர் உறுதி அளித்தார்.

error: Content is protected !!