India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜெர்மன் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணி புரிவதற்கு 6 மாதங்கள் பணி அனுபவம் பெற்ற 35 வயதுடைய ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இடைத்தரகர், ஏஜெண்டுகளை நம்ப வேண்டாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், வரும் 15ஆம் தேதிக்குள் <
வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் டீக்கடை பேருந்து நிறுத்தம் அருகே நடந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தனேஸ் ரெட்டி, ஸ்ரெயர்ஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 2 மாணவர்கள் 1 மாணவி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செய்யூர் அடுத்த மேட்டு நெமிலி பகுதியை சேர்ந்தவர் துலுக்காணம் தனது நேற்று குடிசை வீட்டைப் பூட்டி விட்டு நுாறு நாள் வேலைக்கு சென்றார்.காலை 11: 00 மணிக்கு திடீரென குடிசை தீப்பற்றி எரிந்தது.வேகமாக பரவிய தீ அருகே இருந்த கஜேந்திரன் என்பவரின் குடிசை வீட்டிலும் பரவியது .தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் இரண்டு குடிசை வீடுகளும் முழுதும் எரிந்து, வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகின.
செங்கல்பட்டு அருகே ஓடும் பள்ளி பேருந்தில் வைத்து 5 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது.பள்ளி பேருந்தில் இருந்து வீட்டிற்கு சென்ற சிறுமி தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி தெரிவித்துள்ளார்.அதன் அடிப்படையில் பேருந்தின் கிளீனர் முருகன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கோவிலம்பாக்கம் காந்திநகர் 14ஆவது தெருவில் வசித்து வருபவர் முனுசாமி. இவரது வீட்டில் நேற்றிரவு கேஸ் கசிந்துள்ளது. இன்று (மார்.5) காலை அவரது மனைவி ராணி சுவிட்சை ஆன் செய்தபோது, தீப்பிடித்தது. இதில், முனுசாமி, ராணி, மகள் சாந்தி, சாந்தியின் கணவர் ரகு 4 பேரும் தீயில் சிக்கிக் கதறியுள்ளனர். 4 பேரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். 4 பேருக்கும் 40% தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் 750 பணியிடங்கள், தமிழகத்தில் 175 பணியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலை.,த்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 20 – 28 வயது வரை இருக்க வேண்டும். மாதம் ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க
செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் பதிவு சரிபார்த்தல் சிறப்பு முகாம், 31ம் தேதி வரை நடக்கிறது.செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்களது கிராமங்களில் வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள். பொதுசேவை மையங்களுக்கு நேரடியாக சென்று தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதார், மொபைல் எண் ஆகிய விவரங்களை அளித்து வரும் 31ம் தேதிக்குள் பதிவு செய்யலாம்.
ஒரகடம் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி வீட்டின் அருகில்,கடந்த 2019 ஜூலை 10ம் தேதி விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது, காஞ்சிபுரம் அருணாச்சலம் (60) என்பவர் சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்தார்.இதுகுறித்த புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நசீமா பானு ஆயுள் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
தாம்பரம் அருகே ஜி.எஸ்.டி., சாலையில் குபேந்திரன் என்பவர் தனது ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளின் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் தனது ஆட்டோ முழுவதும் பச்சை பசேலென தோட்டம் போல அழகுபடுத்தியுள்ளார். பசுமை மீது தீராத காதல் கொண்ட குபேந்திரன் இவ்வாறு வடிவமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த ஆட்டோ சாலையில் செல்லும் போது அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், வல்லம் என்ற ஊரில் பல்லவ மன்னன் மகேந்திர வர்மனால் கட்டப்பட்ட குடவரை கோயில் உள்ளது. இங்குள்ள சிவபெருமானை தரிசனம் செய்தால் நோய் நீங்கி நீண்ட ஆயுள் பெறுவர். அம்பிகையை தரிசனம் செய்தால் திருமணம் எளிதில் கைகூடும். விநாயகரை வேண்டினால் காரியங்கள் யாவும் வெற்றிகரமாக முடியும். முருகரை வேண்டினால் நவக்கிரக தோஷம் நட்சத்திர தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.