Chengalpattu

News March 10, 2026

கனரக லாரி மோதி தாயி, மகள் பலி

image

பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் லாவண்யா. இவர் இன்று (மார்ச்.10) காலை தனது மகள் இனியாவை இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த செங்கல் ஏற்றிய கனரக லாரி மோதி சம்பவ இடத்திலேயே தாயும், மகளும் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 10, 2026

செங்கல்பட்டு காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு

image

செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு இன்று ( மார்ச்-10) வெளியிட்டுள்ளது. எங்கள் நிறுவனத்தின் கூகுள் மேப் இடத்தை லைக் செய்து போட்டோ எடுத்து அனுப்பினால் ரூபாய் 150 அனுப்பி நம்ப வைத்து பின்னர் எங்களிடம் பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பாக பெறலாம் என தெரிவித்து அதிக அளவு பணத்தை ஏமாற்றி திருடும் சைபர் களின் குற்றங்கள் நடைபெறுகின்றன. இவற்றை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் சைபர் கிரைம் புகார் தெரிவிக்க ☎️1930

News March 10, 2026

செங்கல்பட்டு: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். *உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க*

News March 10, 2026

செங்கை: IDBI வங்கியில் 1300 காலியிடங்கள்! APPLY NOW

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள 1300 காலிப் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பாதிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 19ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்

News March 10, 2026

BREAKING: செங்கையில் உடல் கருகி 3 பேர் பலி

image

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே கன்னிவாக்கத்தில் இன்று கொசுவத்தியால் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த கணவர் பார்த்திபன் (33), மனைவி ஜெயசித்திரா(29) மற்றும் இரண்டரை வயது குழந்தை ஜெயஸ்ரீ ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். உடல்களை மீட்டு மறைமலைநகர் தீயணைப்புத்துறை வீரர்கள் கூராய்வுக்கு அனுப்பிய வைத்தனர்.

News March 10, 2026

செங்கல்பட்டில் இளைஞர் துடிதுடித்து பலி

image

செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் தென்பாதி கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார். மறைமலை நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வேலை முடிந்து விட்டு பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது திம்மாவரம் அருகில் கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின் பக்கத்தில் மோதியது. இதில் தினேஷ் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News March 10, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (9.3.2026) இரவு முதல் இன்று (10.3.2026) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News March 9, 2026

செங்கை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <>pmjay.gov.in <<>>இணையத்தில் ரேஷன், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் காப்பீடு அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 9, 2026

செங்கல்பட்டு: ரூ.34,800 சம்பளத்தில் செவிலியர் அலுவலர் வேலை!

image

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும். ஷேர் பண்ணி வேலை தேடுவோருக்கு உதவி பண்ணுங்க.

News March 9, 2026

செங்கல்பட்டில் 250 கோழிகள் இலவசம்!

image

செங்கல்பட்டு மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!