India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஃபெஞ்சல் புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்களாக அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 5 தாலுகாக்களான திருப்போரூர், திருக்கழுக்குன்றம்,செய்யூர்,செங்கல்பட்டு, மதுராந்தகம் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த 4 மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோருக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களில் அபராதமின்றி மின்கட்டணம் செலுத்துவதற்கு வரும் 10ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் மின் கட்டணம் அபராதமின்றி செலுத்த கால அவகாசம் வழங்குவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், “செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கிப்பட்டுள்ளது. எனவே, அபராதமின்றி வரும் டிச.10ஆம் தேதி வரை கட்டலாம்” என்று தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், செங்கல்பட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் ஆறாக ஓடியது. சாலைகள் குளம்போல் காட்சியளித்தது. பலத்த காற்று வீசியதால், ஆங்காங்கே மரங்கள் விழுந்தன. முறிந்து விழுந்த மரங்கள் உடனுக்குடன் அகற்றப்பட்டன. மழைநீரும் அவ்வப்போது அகற்றப்பட்டதால் பெரும் சிரமம் தவிர்க்கப்பட்டது. உங்க ஏரியாவில் மழை எப்படி?
ஃபெஞ்சல் புயல் இன்று மாலை மாமல்லபுரம்- காரைக்கால் யையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ தொலைவில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் புயல் நகருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் இன்று கரையைக்கடக்க உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இன்று கனமழை பெய்துவரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் இரவு 7 மணிவரை அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பலத்த காற்றால் சென்னை பூங்காநகர் பகுதியில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்துள்ளதாக தற்போது தகவல் வந்துள்ளது. இதனால், கடற்கரை -தாம்பரம் இரு மார்க்கத்திலும் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
ஃபெங்கல் புயல் காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள கீழ் தளத்தில் மழைநீர் புகுந்துள்ளது. இதனால், மருத்துவமனை ஊழியர்கள் மணல் மூட்டைகளை கொண்டு மழைநீர் உள்ளே வராமல் தடுத்து வருகின்றனர். மேலும், கீழ் தளத்தில் இருந்த நோயாளிகள் முதல் தளத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டு, நிவாரண பணிகளை மேற்கொள்ள குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களும் whatsapp எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
ஃபெஞ்சல் காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. பல்லாவரம், பம்மல், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், சிங்கப்பெருமாள் கோவில், அச்சிறுபாக்கம், கேளம்பாக்கம், கூடுவாஞ்சேரி, மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் மழை ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக, மாமல்லபுரம் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. உங்கள் ஏரியாவில் மழையா?
Sorry, no posts matched your criteria.