Chengalpattu

News December 17, 2024

செங்கல்பட்டில் தற்காலிகமாக உருவாகியுள்ள நீர்வீழ்ச்சி!

image

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்து 2 கி.மீ தொலைவில் உள்ளது தையூர் ஊராட்சி, வடகிழக்கு பருவமழை பெய்யும் போது இங்குள்ள ஏரி முழுவதும் நிரம்பி தற்காலிக நீர்வீழ்ச்சி உருவாகி பொதுமக்களை கவர்ந்து வருகிறது. எட்டு அடி உயரத்தில் உள்ள இந்த நீர்வீழ்ச்சியில் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வருபவர்கள் ஆனந்த குளியல் குளித்து மகிழ்கின்றனர். இந்த வாரம் முழுவதும் தண்ணீர் வரும் என்று தெரிகிறது.

News December 16, 2024

செங்கல்பட்டில் டிச.20ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

image

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் டிச.20ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நடத்தப்பட உள்ளது. வேலை தேடுவோர், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து இந்த முகாமில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.

News December 16, 2024

தாய்லாந்துக்கு கூடுதல் விமான சேவை

image

தாய்லாந்து நாட்டின் பாங்காக்கிற்கு இன்று முதல், சென்னையில் இருந்து கூடுதலாக ஒரு விமானம் இயக்கப்படுகிறது. அதைப்போல் ஹாங்காங்கிற்கு செல்லும் விமானத்தில், கூடுதல் பயணிகள் பயணிக்க வசதியாக, பெரிய ரக விமானம் இயக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள், தொழில்துறை பயணிகள் அதிகரிப்பால், சென்னை விமான நிலையத்தில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News December 16, 2024

வரும் 19ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

image

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஊராட்சிகளில் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சிக்கும் தமிழக அரசைக் கண்டித்து, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. வரும் டிச.19ஆம் தேதி காலை 10 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

News December 16, 2024

இன்று கோயிலுக்கு செல்ல மறந்துடாதீர்கள்

image

மார்கழி மாதம் இன்று (டிச.16) பிறப்பதால், கோயில்கள் அனைத்தும் அதிகாலை 4:30 மணிக்கு திறக்கப்படும். சிவன் கோயில்களில் திருவெம்பாவை, திருபள்ளியெழுச்சி பாடபடும். விஷ்ணு பகவான் கோயில்களில் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடபடும். இந்த மார்கழி மாத அதிகாலை பள்ளியெழுச்சி பூஜையில் பங்கேற்பதால் கர்மவினைகள் நீங்கி புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம். அதனால், பக்தர்கள் அனைவரும் தவறாமல் கோயிலுக்கு செல்லுங்கள்.

News December 16, 2024

மார்கழி முதல் நாளில் செய்ய வேண்டியவை

image

மார்கழி மாதப்பிறப்பன்று சூரிய பகவானை வழிபடுவது நல்லது. அதிகாலையில் எழுந்து புனித நதிகளில் நீராடி, சூரிய பகவானுக்கு நீர் படைத்து வழிபட வேண்டும். சூரிய நமஸ்காரம் செய்து, சூரிய பகவானுக்குரிய மந்திரங்களை சொல்லி மனதார வழிபட வேண்டும். இப்படி பக்தியுடனும், முறையாக வழிபட்டால் அவர்கள் செய்த பாவங்களில் இருந்து விடுபடுவார்கள். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

News December 15, 2024

செங்கல்பட்டு அருகே வடிநீர் கொட்டியதில் 5 வயது குழந்தை பலி

image

திருப்போரூரை சேர்ந்தவர் சுபத்ரா. கடந்த 9 ந் தேதி வீட்டில் சாதம் வடித்த இவர் வடிநீரை ஊற்றுவதற்காக பாத்திரத்தில் கொண்டு வந்த போது எதிர்பாராத விதமாக குறுக்கே வந்த அவரது 5 வயது மகள் நற்பவி மீது வடிநீர் கொட்டியதில் உடல் வெந்தது. செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார். திருப்போரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 15, 2024

அரசுப் பேருந்து மோதியதில் 2 கார்கள் சேதம்

image

விழுப்புரத்தில் இருந்து செங்கல்பட்டில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு, அரசு பேருந்து ஒன்று நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் பகுதியில் உள்ள சிக்னல் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, முன்னாள் நின்று கொண்டிருந்த 2 கார்கள் மற்றும் 1 பைக் மீது பலமாக மோதியது. இதில், கார்கள் 2 சேதமடைந்தன.  இதுகுறித்து போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 15, 2024

மாமியாரை கொன்று தூக்கில் தொங்கவிட்ட மருமகள்

image

திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகரின் மனைவி அம்லு (38). இவர், அதே ஊரைச் சேர்ந்த சரவணன் (40) என்பவருடன் தகாத உறவில் இருந்துள்ளார். இதை அறிந்த ராஜசேகரின் தயார் லட்சுமி (50) அம்லுவை கண்டித்துள்ளார். கடந்த 10ஆம் தேதி அம்லு, அம்லுவின் தோழி பாரதி, சரவணன் மூவரும் சேர்ந்து லட்சுமியை கழுத்தை நெரித்து கொன்று தூக்கில் தொங்க விட்டுள்ளனர். மூவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

News December 14, 2024

முன் பதிவில்லா பெட்டிக்கு பதில் முன்பதிவு பெட்டி இணைப்பு

image

தாம்பரம் முதல் ஜசிதி வரை இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலில் (12376) டிசம்பர்.18 முதல் ஜனவரி 15 வரை ஒரு முன்பதிவில்லா பெட்டிக்கு பதிலாக முன்பதிவு மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய பெட்டி இணைக்கப்படும் என்றும், மறு மார்க்கத்தில் (12375) டிசம்பர்.21 முதல் ஜனவரி.18 வரை இதே போன்று இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

error: Content is protected !!