Chengalpattu

News January 20, 2025

பல்வேறு பணிகளுக்கு ரூ.43.2 லட்சம் நிதி ஒதுக்கீடு

image

செங்கல்பட்டு நகராட்சியில் ஜே.சி.கே.நகர், நத்தம், வேதாசலம் நகர், உள்ளிட்ட 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில், கான்கிரீட் மற்றும் தார் சாலைகள் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும். மழைநீர் வடிகால்வாய், சிறுபாலம் கட்ட வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திடம் நகரவாசிகள் முறையிட்டனர். அதன்படி, இந்த பணிகளுக்காக ரூ.43.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் வழங்கி உள்ளது.

News January 20, 2025

பைக் மோதி காஞ்சி நபர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை

image

காஞ்சிபுரத்தை சேர்ந்த சாந்தகுமார் (55) நேற்று முன்தினம் காலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே பழைய ஜி.எஸ்.டி. சாலையைக் கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத பைக் மோதியதில் இவர் காயமடைந்தார். பின் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 19, 2025

தாம்பரம் பகுதியில் ஒரே நாளில் 8 பேரிடம் வழிப்பறி!

image

தாம்பரம் காவல் ஆணையரக எல்லையில் மறைமலைநகர், ஊரப்பாக்கம், பீர்க்கன்காரணை, ஆதனூர், சிட்லப்பாக்கம், மேற்கு தாம்பரம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 8 பேரிடம் அடுத்தடுத்து நேற்று முன்தினம் வழிப்பறி சம்பவம் நடந்துள்ளது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

News January 19, 2025

போக்சோ வழக்கில் பள்ளி மாணவன் கைது

image

ஒத்திவிளாகம் கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் மாணவர் அப்பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மேல்மருவத்தூர் அனைத்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவரை கைது செய்த போலீசார், செங்கல்பட்டில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறார் சிறையில் அடைத்தனர்.

News January 19, 2025

காட்டாங்குளத்தூர் – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

image

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக நாளை (ஜன.20) அதிகாலை 4 மணி முதல் காலை 6:20 வரை தாம்பரம் – காட்டாங்குளத்தூர் – தாம்பரம் இடையே 12 பெட்டிகள் கொண்ட சிறப்பு புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வந்திறங்கும் பயணிகள் இந்த ரயில்களை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 19, 2025

செங்கல்பட்டில் விடிய விடிய மழை

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்றிரவு பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக, செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் விடிய விடிய மழை பெய்தது. இன்றும் (ஜன.19) காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க..

News January 18, 2025

காட்டாங்குளத்தூர்- தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

image

பொங்கல் முடிந்து ஊர் திரும்பும் செங்கல்பட்டு மக்களுக்கு சிறப்பு புறநகர் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வரும் திங்களன்று (ஜன20) காட்டாங்குள்த்தூரில் இருந்து தாம்பரத்துக்கு அதிகாலை 4.00, 4.30,5.00, 5.45, 6.20க்கு சிறப்பு ரயில்களும், தாம்பரத்தில் இருந்து காட்டாங்குளத்தூருக்கு அதிகாலை 5.05, 5.40 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

News January 18, 2025

போக்குவரத்து நெரிசலை குறைக்க கட்டுப்பாடுகள்

image

பொங்கல் பண்டிகை முடிந்து மீண்டும் சென்னை திரும்பும் மக்களுக்காக, போக்குவரத்து நெரிசலை குறைக்க செங்கல்பட்டு – தாம்பரம் வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை, GST, OMR மற்றும் ECR சாலைகளில் வரும் 20ம் தேதி வரை கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. GST சாலையில் போக்குவரத்தை விரைவுப்படுத்த, ஆம்னி பேருந்துகள் வெளிவட்ட சாலையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 18, 2025

இன்றும் நாளையும் 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கம்

image

பொங்கல் பண்டிகைக்கு பிறகு பயணிகள் சென்னை திரும்புவதால், 18.1.2025 மற்றும் 19.1 2025 ஆகிய தேதிகளில் வெளியூர்களிலிருந்து சென்னைக்கு அதிக போக்குவரத்து எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் தங்கள் பயணத்தை விரைவாக முடிக்க செங்கல்பட்டு, மறைமலை நகர், பொத்தேரி, மற்றும் காட்டாங்கொளத்தூர் ரயில் நிலையங்களில் இருந்து 15 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

News January 18, 2025

கனரக வாகனங்கள் ஜி.எஸ்.டி சாலையை பயன்படுத்த தடை

image

பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் சென்றவர்கள் சென்னை வர தொடங்கி உள்ளதால் இன்று முதல் வரும் 20ம் தேதி வரை ஜிஎஸ்டி சாலை, வண்டலூர் கேளம்பாக்கம் சாலை, ஓஎம்ஆர் சாலை, ஈசிஆர் சாலை ஆகிய சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆம்னி பேருந்து வண்டலூர் வெளிவட்ட சாலையை பயன்படுத்தி சென்னைக்குள் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தாம்பரம் வழியாக சென்னை செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!