Chengalpattu

News February 6, 2025

கிளம்பாக்கத்தில் பெண்ணை கடத்தியவர்கள் கைது

image

கிளம்பாக்கத்தில் இளம்பெண்ணை கடத்தியவர்களை தனிப்படை போலீசார் இன்று (பிப்.6) கைது செய்துள்ளனர். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணை, 3 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆட்டோவில் கடத்த முயற்சி செய்தது. அப்போது அப்பெண் கத்தி அலற, அவரை இறக்கிவிட்டுட்டு தப்பிச் சென்றனர். மர்ம கும்பலை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டதையடுத்து, மூவரும் இன்று கைது செய்யப்பட்டனர்.

News February 6, 2025

கோல் இந்தியா நிறுவனத்தில் 434 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளம் ரூ.50,000 முதல் – ரூ.1,80,000 வரை வழங்கப்படும். வரும் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்

News February 6, 2025

குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு 3 தனிப்படைகள் அமைப்பு

image

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே கடந்த பிப்.3ஆம் தேதி இரவு, வடமாநில பெண்ணை மர்ம நபர்கள் ஆட்டோவில் கடத்தினர். பல்லாவரம் போலீசார் பின்தொடர்வதை அறிந்த மர்ம நபர்கள் அப்பெண்ணை இறக்கிவிட்டு சென்றனர். இதுதொடர்பாக வழக்கு பதிந்து 3 தனிப்படைகள் அமைத்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர். அதே நேரத்தில் விளக்கு வெளிச்சத்தில் ஆட்டோ எண் சரியாக பதிவாகாததால், குற்றவாளிகளை கண்டறிவதில் சிக்கல் உள்ளதாக கூறினர்.

News February 5, 2025

தற்கொலைக்கு முன் உருக்கமாக பதிவிட்ட இளைஞர்

image

திருவள்ளூரைச் சேர்ந்த தமிழ்செல்வன் (25), நேற்று முன்தினம் (பிப்.3) திருவள்ளூர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி திருவள்ளூர் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்த தமிழ்செல்வன், மொபைல் போனில் வைத்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்சில், “எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க. என்னை மாதிரி யாரும் ஆன்லைன் கேம் ஆடாதீங்க” என உருக்கமாக பதிவிட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

News February 5, 2025

மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு

image

செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக, சேக் முகையதீன் பொறுப்பேற்றுக் கொண்டார். திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றிய சேக் முகையதீன், செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த உத்தரவை, அரசு தலைமை செயலர் முருகானந்தம் கடந்த ஜன.4ஆம் தேதி பிறப்பித்தார். இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக சேக் முகையதீன் நேற்று (பிப்.4) பொறுப்பேற்றுக் கொண்டார்.

News February 5, 2025

சென்னை – மஸ்கட் இடையே கூடுதல் விமான சேவை

image

சென்னையில் இருந்து ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டிற்கு கூடுதல் நேரடி விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மஸ்கட்டிற்கு செல்லும் பயணிகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றனர். இதனால், பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், வாரத்தில் 2 நாட்கள் இந்த நேரடி விமான சேவையை தொடங்கியுள்ளது. இதனால் விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

News February 5, 2025

மத்திய அரசு நிறுவனத்தில் 400 காலிப்பணியிடங்கள்

image

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இன்ஜினியரிங் டிரைய்னி – 150, மேற்பார்வையாளர் டிரைய்னி – 250 என மொத்தம் 400 பணியிடங்கள் உள்ளன. 27 வயது உடைய முதுகலை பட்டம் முடித்தவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்கலாம்<<>>. ஏப்ரல் 11, 12, 13 தேதிகளில் தேர்வு நடைபெறும். சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

News February 5, 2025

ரம்மி விளையாடியவர் ரயில் முன்பு பாய்ந்து பலி

image

பூந்தமல்லி, வயலாநல்லூரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (25). சுங்குவார்சத்திரத்தில், உறவினர் வீட்டில் தங்கி ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணிபுரிந்தார். ஆன்லைன் ரம்மி விளையாடி வந்த தமிழ்செல்வன், அதில் ரூ.10 லட்சம் வரை பணத்தை இழந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று முன்தினம் (பிப்.3) திருவள்ளூர் – ஏகாட்டூர் இடையே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

News February 4, 2025

மாவட்ட ஆட்சியர் அழைப்பு 

image

செங்கல்பட்டு மாவட்டம், கவனம் சார்ந்த வட்டாரங்கள் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்த லத்தூர் ஒன்றியத்தில் அறிவுசார் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளி புதிதாக உருவாக்கப்பட உள்ளதால் இப்பள்ளியை செயல்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் 10.2.2025 அன்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க ஆட்சியர் அருண்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

News February 4, 2025

எருமை குறுக்கே ஓடியதால் விபத்து: இருவர் காயம்

image

காஞ்சிபுரம், ஒரகடத்தில் இருந்து தனியார் தொழிற்சாலை பேருந்து, ஸ்ரீபெரும்புதுார் – சிங்கபெருமாள் கோவில் சாலையில் வந்துகொண்டிருந்தது. சேந்தமங்கலம் அருகே சாலையின் குறுக்கே எருமை ஒன்று ஓடியுள்ளது. ஓட்டுநர் திடீர் பிரேக் அடித்து பேருந்தை நிறுத்தினார். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. இதில் இரு பயணிகள் காயமடைந்தனர். பாலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!