India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) லிங்கை <
மெட்ரோ ரயில்களைபோல் இந்த ரயிலும் பயணிகள் முதல் பெட்டியிலிருந்து இறுதி பெட்டி வரை செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பெட்டிகளைவிட அதிக பயணிகள் செல்லும் வகையில் இந்தப் பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பெரிய கண்ணாடி ஜன்னல்கள், பயணிகளுக்கு GPS அடிப்படையில் தகவல்கள் தெரிவிக்க எண்ம பலகைகள், ஒலிப் பெருக்கிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. முதல், கடைசி பெட்டி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
மெட்ரோ ரயிலைபோலவே தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் ரயில் ஓடும்போது கதவுகள் மூடிவிடும். அதேபோல், கூட்டம் அதிகமாக இருக்கும்போது, பயணிகளிடையே ஏற்படும் புழுக்கத்தை கட்டுப்படுத்த மின்விசிறிகள் உள்ளன. மேலும், ரயில் விபத்துகளை தடுப்பதற்காத ‘கவாச்’ தொழில்நுட்பமும் இந்த ரயிலில் உள்ளது. இதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. 1 வாரத்துக்குள் இந்த ரயில் தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்படும்.
நின்று செல்லும் பெண் பயணிகளுக்கு எளிதாகப் பிடித்து நிற்பதற்காக கைப்பிடிகள் தாழ்வாக தொங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் அமா்ந்தபடி 1,116 போ், நின்றப்படி 3,798 போ் என மொத்தம் 4,914 போ் பயணிக்கலாம். ஒவ்வொரு பெட்டியிலும் கண்காணிப்பு கேமராக்கள், அவசர காலங்களில் ரயில் ஓட்டுரிடம் பேச ‘டாக்பேக்’ அமைப்பு, தீ விபத்து ஏற்பட்டால் அவற்றை கட்டுப்படுத்த தீயணைப்பான்கள் வைக்கப்பட்டுள்ளன.
கடற்கரை – செங்கல்பட்டு இடையே குளிா்சாதன மின்சார ரயில் இயக்கப்படும் என்று கடந்த 2019இல் ரயில்வே வாரியம் அறிவித்தது. இதையடுத்து, முதல்கட்டமாக 12 பெட்டிகள் கொண்ட 2 குளிா்சாதன மின்சார புகா் ரயில்களைத் தயாரிக்க ICF-க்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டது. அதன்படி, 12 பெட்டிகள் கொண்ட முதல் குளிா்சாதன மின்சார புகா் ரயில் தயாரிக்கும் பணிகள் தற்போது முழுவதுமாக நிறைவடைந்துள்ளன. விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை எனவும், பதிவு செய்யாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோக்களை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என தாம்பரம் காவல்துறை அறிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இளம் பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் சீண்டல் செய்த சம்பவத்தை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு இயங்கி வருகிறது. இங்கு, 2 துணை தலைமை சட்ட உதவி வழக்கறிஞர்கள் பணிகள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பங்களை (https;//chengalpattu.dcourts.gov.in) என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை, வரும் 21ஆம் தேதிக்குள், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமர்ப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க
செங்கல்பட்டு சார் ஆட்சியர், ஊரக வளர்ச்சி கூடுதல் ஆட்சியராக பணி மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், துணை ஆட்சியர் நிலையில் பணியாற்றி வரும் மாவட்ட வட்ட வழங்கள் அலுவலர் சாகிதா பர்வீன், செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியராகவும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரான நரேந்திரன் – தாம்பரம் வருவாய் கோட்டாட்சியராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கி மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு. மார்க்கெட்டிங் பிரிவில் இருக்கும் 234 ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பல்வேறு பிரிவுகளில் பொறியியல் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும். <
செங்கல்பட்டு மாவட்டம் சத்துணவு திட்டத்தில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒப்பந்த அடிப்படையில் இந்த நியமனம் நடைபெற உள்ளது. அலுவலக உதவியாளர், தகவல் தொகுப்பாளர், கணினி உதவியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தால் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.8,000 – ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும்.
Sorry, no posts matched your criteria.