Chengalpattu

News August 15, 2025

செங்கல்பட்டு: இலவச AI பயிற்சி, ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்!

image

செங்கல்பட்டு மக்களே, AI துறையில் படிக்க விருப்பமுள்ளவர்களுக்கு, தமிழ்நாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் சென்னையில் இலவசப் பயிற்சி அளிக்கிறது. இதற்கு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ, அல்லது டிகிரி முடித்தவர்கள் இங்கு <>கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். AI டெவலப்பர், டேட்டா அனலிஸ்ட் போன்ற பணிகளுக்கு, ஆண்டுக்கு ரூ.4.5 லட்சம் வரை சம்பளத்துடன் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். ஷேர் பண்ணுங்க

News August 15, 2025

முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்த நபர் கைது.

image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சுதந்திர தின விழாவில் கொடி ஏற்றும் போது வெடிகுண்டு வெடிக்கும் என நேற்று (ஆக. 14) காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் தொடர்புக் கொண்டு மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் செங்கல்பட்டு மாவட்டம் படாளம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரை கைது செய்தனர். தொழிலில் நஷ்டம் அடைந்த விரக்தியில் மது போதையில் இவ்வாறு செய்தது தெரியவந்தது.

News August 14, 2025

தாம்பரம் போலீசார் இரவு ரோந்து பணி விவரம்

image

தாம்பரம் மாநகராட்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் (14/08/25) இன்று இரவு ரோந்து பணி பார்க்கும் காவலர்களின் தொலைபேசி எண்கள் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவலர்கள் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அப்போது ஏதேனும் அவசரம் என்றால் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.

News August 14, 2025

செங்கல்பட்டு: ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி முகாம்

image

செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 1-15 வயது குழந்தைகளுக்கு பள்ளி, அங்கன்வாடிகளில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடக்கிறது. கியூலக்ஸ் கொசு கடியால் பரவும் இந்த நோயால் தீவிர பாதிப்பு, மரணம் ஏற்படுத்தலாம். தடுப்பூசி பாதுகாப்பானது; வலது மேல்கையில் செலுத்தப்படும். பாதிப்பு ஏற்பட்டால் 104 அழைக்கலாம்.

News August 14, 2025

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி முகாம்

image

செங்கல்பட்டு உட்பட சென்னை, காஞ்சிபுரம், வேலூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் 1-15 வயது குழந்தைகளுக்கு பள்ளி, அங்கன்வாடிகளில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடக்கிறது. கியூலக்ஸ் கொசு கடியால் பரவும் இந்த நோயால் தீவிர பாதிப்பு, மரணம் ஏற்படுத்தலாம். தடுப்பூசி பாதுகாப்பானது; வலது மேல்கையில் செலுத்தப்படும். பாதிப்பு ஏற்பட்டால் 104 அழைக்கலாம்.

News August 14, 2025

“ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி முகாம்”

image

செங்கல்பட்டு உட்பட சென்னை, காஞ்சிபுரம், வேலூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் 1-15 வயது குழந்தைகளுக்கு பள்ளி, அங்கன்வாடிகளில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடக்கிறது. கியூலக்ஸ் கொசு கடியால் பரவும் இந்த நோயால் தீவிர பாதிப்பு, மரணம் ஏற்படுத்தலாம். தடுப்பூசி பாதுகாப்பானது; வலது மேல்கையில் செலுத்தப்படும். பாதிப்பு ஏற்பட்டால் 104 அழைக்கலாம்.

News August 14, 2025

பேருந்தில் அதிக கட்டண வசூலா.? இதை செய்யுங்க

image

தொடர் விடுமுறையை முன்னிட்டு, தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் படையெடுத்துள்ளனர். ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னை டூ மதுரைக்கு ரூ.4,000 வரையிலும், திருச்சி போன்ற நகரங்களுக்கு ரூ.1,500-ரூ.3,000 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது, 1800-424-6151 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News August 14, 2025

பராமரிப்பு பணி; சென்ட்ரல் – கூடூர் இடையே ரயில்கள் ரத்து

image

சென்னை சென்ட்ரல் – கூடூர் இடையே பொறியியல் பணிகள் நடைபெறவுள்ளதால் இன்றும், ஆகஸ்ட் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் 17 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டில் இருந்து காலை 9.55 மணிக்குக் கும்மிடிப்பூண்டி செல்ல வேண்டிய ரயில் சென்னை கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல், கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 3 மணிக்குத் தாம்பரம் செல்லும் ரயில் சென்னை கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும்.

News August 14, 2025

செங்கல்பட்டு காவல்துறை மாற்று வழி அறிவிப்பு

image

சுதந்திர தினம் மற்றும் வார இறுதி விடுமுறைகள் காரணமாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வாகன ஓட்டிகள் கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) மற்றும் செங்கல்பட்டு-திருப்போரூர் சாலை (GWT) போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்தலாம் என செங்கல்பட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. உங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, பாதுகாப்பாகச் செல்லுங்கள்.

News August 14, 2025

செங்கல்பட்டு காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

தொடர் விடுமுறை கருத்தில்கொண்டு, செங்கல்பட்டு காவல்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை எண் 32 (GST சாலை)-ல் புக்கத்துறை, படாளம் சாலை சந்திப்புகளில் மேம்பாலக் கட்டுமானம் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதால், இந்த பகுதிளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட கூடும். பொதுமக்கள் இந்த சாலையை கவனத்துடன் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!