India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு துவக்க விழா, மாமல்லபுரம் அருகேயுள்ள பூஞ்சேரி பகுதியில் நாளை பிப். 26-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் உட்பட 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் விஜய்யை வரவேற்கும் விதமாக த.வெ.க., கட்சியினர் சுமார் 80 அடி உயரத்தில் பிரம்மாண்ட பேனர் அமைத்துள்ளனர்.
நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜா (39) மறைமலைநகரில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். மறைமலைநகர் நகராட்சி எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலையை கடக்க முயன்ற நிலையில், அதிவேகமாக வந்த பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மேலும், பைக்கில் வந்த ஷர்மா (23), ஆதித்யன் (22) ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் இள்ளலூர் அரசு உயர்நிலைப்பள்ளி படிக்கும் மாணவி வ.சரண்யா என்பவர் ஒன்றிய அரசு கல்வி தொகை தர மறுப்பதால் தன்னுடை மேல் படிப்பிற்காக சேமித்து வைத்திருந்த ரூபாய் 12,000 தொகையை இன்று (பிப்.24) மானம்பதி மக்கள் மருந்தகம் திறப்பு விழா நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் எல்.இதயவர்மன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
மத்திய தொழில் பாதுகாப்பு படையான CISFல் 1161 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். 18- 23(1.8.25) வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21,700- ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் https://cisfrectt.cisf.gov.in/ என்ற இணையதளத்தில் 5-03-2025- 3-04-2025க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
செங்கல்பட்டு: சதுரங்கப்பட்டினம் அடுத்த மெய்யூர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி(48), மீனவர்கள் சிலருடன் கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது கடலில் ஏற்பட்ட வெப்ப சீதோஷ்ண நிலைக்கு உடல் ஒத்துழைக்காததால் திடீரென படகில் மயங்கி விழுந்தார். பதறி போன சக மீனவர்கள் வேக வேகமாக கரை திரும்பி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமான உயிரிழந்தார். இவருக்கு 1 மகன், 2 மகள்கள் உள்ளனர்.
இந்திய ரயில்வேயில் உள்ள குரூப்: D பிரிவில் மொத்தமுள்ள 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்ட உள்ளன. 10 மற்றும் ITI முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக தென்னக ரயில்வே கோட்டத்தில் மட்டும் 2,694 பணியிடங்கள் உள்ளன. வயது 18-36க்குள் இருக்க வேண்டும். தொடக்கத்தில் 18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் மார்ச்.1க்குள் இந்த <
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வாயலூர் கள்ளுக்கடை பகுதியை நோக்கி, கிழக்கு கடற்கரை சாலை வழியாக 1 லட்சம் எண்ணிக்கையிலான புதிய காலி குவார்ட்டர் மது பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி நிலைதடுமாறி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி டிரைவர் பரந்தாமன் (52) சிறு காயங்களுடன் அதிஷ்ட–வசமாக உயிர் தப்பினார்.
இந்திய கடலோரக் காவல்படையில் 300 நவிக் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10, பிளஸ் 2 முடித்த இளைஞர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 22க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக 21,700- 47,600 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் https://joinindiancoastguard.cdac.in/cgept/ என்ற இணையத்தில் வரும் பிப்.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராக பணியாற்றிய அனாமிக ரமேஷ் பயன்படுத்திய அரசு வாகனம் TN 19G 0166 கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் தலைமை செயலாளரின் வருகையின் போது மாமல்லபுரம் பகுதியில் அதிவேகமாக 105 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுள்ளது. தற்போது (பிப்.21) அதிவேகமாக சென்றதற்காக போக்குவரத்துத்துறை சார்பில் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 22 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 28 வயதிற்குள் இருக்கும் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.70,290 வரை சம்பளம். ஆர்வமுள்ளவர்கள் https://clri.org/careers.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச்.01. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.