Chengalpattu

News August 20, 2025

இ- ஸ்கூட்டர் பெற மானியம்

image

தமிழ்நாடு அரசு இ- ஸ்கூட்டர் மானியம் பெற ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம், பணிபுரியும் நிறுவனத்தின் சான்றிதழ், வங்கி பாஸ்புக்கின் முதல் பக்கம், நலவாரிய அட்டை போன்றவை தேவை. ஏற்கனவே பெட்ரோல் பைக்குகள் வைத்திருந்தாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம். உணவு பொருள் டெலிவரி செய்யும் இளைஞர்களுக்கு உதவும் திட்டம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 20, 2025

செங்கல்பட்டில் இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்

image

தமிழ்நாடு அரசு ஆன்லைன் டெலிவரி செய்யும் இளைஞர்களுக்காக இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்கி வருகிறது. இதன் மூலம் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் பெறலாம். மானியத்தைப் பெற, தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். <>இந்த லிங்கில்<<>> சென்று உறுப்பினராக பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு <<17460609>>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க

News August 20, 2025

செங்கல்பட்டு: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

image

செங்கல்பட்டு மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற ▶️குடும்ப அட்டை ▶️வருமானச் சான்று ▶️ குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட சான்றுகளுடம் செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம் அல்லது <>உங்களுடன் ஸ்டாலின்<<>> முகாமில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 1800 425 3993 அழைக்கவும். SHARE பண்ணுங்க

News August 20, 2025

ராபிடோ பைக் டாக்சி மீது கார் மோதி இருவர் உயிரிழப்பு

image

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் நேற்று (ஆக.19) அதிகாலை தாம்பரத்திலிருந்து குரோம்பேட்டை செல்வதற்காக ராபிடோ பைக் டாக்சியில் புக் செய்து சென்றுள்ளார். சானடோரியம் அருகே சென்ற போது அவ்வழியே அதிவேகமாக வந்த இன்னோவா கார் மோதி பாலமுருகன் மற்றும் பைக் டேக்ஸி ஓட்டுனர் பால்ராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 19, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி

image

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 19) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.

News August 19, 2025

செங்கல்பட்டு: சொத்து வாங்கும் போது இதை CHECK பண்ணுங்க!

image

✅வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)

✅தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)

✅சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்

✅கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)

✅வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)

சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452120 அழைத்து CHECK செய்து வாங்குங்க… SHARE பண்ணுங்க..

News August 19, 2025

ரூ.2.5 லட்சம் முதலீடு செய்து ஏமாந்த பெண் தற்கொலை

image

தாம்பரம், பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த வனஜா (38) யூடியூபில் பார்த்து, கணவருக்குத் தெரியாமல் ஆன்லைன் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய கடன் செயலியில் ரூ.2.5 லட்சம் கடன் வாங்கினார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால், கடன் கொடுத்த தனியார் வங்கி ஊழியர்கள் நெருக்கடி கொடுத்தனர். இதனால் மனமுடைந்த அவர், வாட்ஸ்அப் மூலம் கணவருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

News August 19, 2025

செங்கல்பட்டு: LIC-யில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை

image

செங்கல்பட்டு மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் (ம) விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 08.09.2025 ஆகும். SHARE IT

News August 18, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 18) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.

News August 18, 2025

மாமல்லபுரம் கடலுக்கு அடியில் பழங்கால கட்டுமான சிதைவுகள்

image

மாமல்லபுரம் கடலில் நேற்று (ஆக. 18) தொல்லியல் துறையின் கடல் ஆராய்ச்சி பிரிவின் கூடுதல் இயக்குனர் அப்ரஜிதா சர்மா தலைமையில் 5 பேர் கொண்ட மத்திய தொல்லியல் துறை கடல் ஆராய்ச்சி குழுவினர் பாதுகாப்பு கவச உடை அணிந்து கடற்கரை கோயில் அருகில் படகில் சென்று நவீன கருவி மூலம் ஆய்வு செய்தனர். இதில் கடலில் மூழ்கிய 6 கோவில்களில் 1 கோயிலின் தடயங்கள் பாசியுடன் உள்ள கருங்கல் கட்டுமானங்கள் கிடைத்ததாக தெரிவித்தனர்.

error: Content is protected !!