India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தாம்பரம் குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் ஓராண்டு ஐ.டி.ஐ. தொழில்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக், டீசல் மெக்கானிக், எலக்ட்ரீசியன், ஃபிட்டர், வெல்டர் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி காலத்தில் மாதம் ரூ.14,000 உதவித்தொகை வழங்கப்படும். நேர்முகத் தேர்வு செப்.10 காலை 10 மணிக்கு குரோம்பேட்டை தொழிற்பயிற்சி பள்ளியில் நடைபெறும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகளும் 24 மணி நேரமும் செயல்படலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இரவு நேரங்களில் கடைகளை மூடும்படி போலீசார் உத்தரவிட்டதற்கு எதிராக ஹோட்டல்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பு குறித்து மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் அளிக்க டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. SHARE பண்ணுங்க.!
செங்கல்பட்டு மாவட்டம் (30/08/25) இன்று செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனத்தில் பீல்டு இன்ஜினியர், பீல்டு சூப்பர்வைசர் பணிக்கு 1,543 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிவில், எலெக்ட்ரிக்கல், ECE, IT அல்லது அதற்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.23,000-ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்.17-க்குள் இந்த <
செங்கல்பட்டு மாவட்டத்தில் நெல் அறுவடை தொடங்கியுள்ள நிலையில், கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழை பெய்தால் நெல் வீணாகிவிடும் என அவர்கள் அச்சப்படுகின்றனர். இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் டி. ஸ்நேகா, 9 மையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும், தேவைக்கேற்ப விரைவில் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிர் மாவு அரைக்கும் இயந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியத் தொகையாக தமிழக அரசு வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மகளிர் சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில் செப்.1 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். ஆண்டு வருமான வரம்பு ரூ.1,20,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
ஐ.டி-யில் வேலை தேடும் இளைஞர்கள் அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவசமாக பயிற்சி பெற்று வேலை வாய்ப்பை பெறலாம். இந்த பயிற்சி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணம் இல்லை, உணவு, தங்கும் இடம் இலவசம். மேலும் மாதம் ரூ.12,000 உதவித்தொகை உண்டு. <
இலவசமாக ஐ.டி பயிற்சி பெற 2022 – 25 கல்வியாண்டில் CSE, ECE, EEE, BCA, B.Sc(CS), MCA அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் கொண்ட கலை அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரியர்ஸ் இருக்க கூடாது. வயது 18 – 35க்குள் இருக்க வேண்டும். ஐ.டி துறையில் செலவில்லாமல் பயிற்சி பெற்று வேலைக்கு செல்ல நல்ல வாய்ப்பு. வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
வேளாண் உட்கட்டமைப்பு நிதியின்கீழ், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஒரு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், அறுவடைக்கு பிந்தைய மேலாண்மைத் திட்டங்களான பதப்படுத்தும் மையங்கள், கிடங்குகள், குளிர்பதன தொடர் சேவைகள் அமைக்க ரூ.2 கோடி வரை கடன் பெறலாம். இந்தக் கடனை 3% வட்டியுடன் 7 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தலாம். இதுபற்றி மேலும் விவரங்கள் அறிய, உங்கள் வட்டார வேளாண் அலுவலகத்தை அணுகவும்.
தாம்பரம் குரோம்பேட்டையில் ஜி.எஸ் சாலையில் நேற்று இரவு சிமென்ட் லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 11 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மூன்று கிரேன்கள் உதவியுடன் லாரி மீட்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகினர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.