Chengalpattu

News March 18, 2025

மருத்துவ தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு, மருத்துவ தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் சேர்வதற்கு பி.எஸ்.சி., – எம்.எஸ்.சி., நர்சிங் பட்டயப்படிப்பு உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் தாட்கோ இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். 2 மாதம் அளிக்கப்படும். விடுதி கட்டணத்தை தாட்கோ அளிக்கும் என கலெக்டர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.

News March 18, 2025

குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ வழங்கும் முகாம்

image

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக வைட்டமின் ஏ சத்து குறைபாடு நோய்கள் மாலை கண் தொடர்பான நோய்களை தடுப்பதற்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மார்ச் 17 முதல் மார்ச் 22 வரை 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க.

News March 18, 2025

ரயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி

image

மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விஷ்வா (20) என்பவர் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். தினமும் மின்சார ரெயிலில் பயணம் செய்து கல்லூரிக்கு சென்று வந்தார்.நேற்று வழக்கம்போல் விஷ்வா மின்சார ரெயிலில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது, தாம்பரம் அருகே கூட்ட நெரிசல் காரணமாக எதிர்பாராத விதமாக ரெயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே விஷ்வா உயிரிழந்தார்.

News March 18, 2025

மதுராந்தகம் கவுன்சிலர் துாக்கிட்டு தற்கொலை

image

சித்தாமூர் அடுத்த சரவம்பாக்கத்தை சேர்ந்தவர் பிரியா (45).மதுராந்தகம் ஒன்றியக் குழுவின் 20வது வார்டு தி.மு.க ஒன்றிய கவுன்சிலராக இருந்து வந்தார்.இரண்டு மாதங்களுக்கு முன் மருத்துவமனையில் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சில நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மின் விசிறியில் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News March 17, 2025

செங்கல்பட்டு மக்களே… நீங்களும் வே2நியூஸ்-இல் நிருபர் ஆகலாம்

image

அன்பார்ந்த வே2நியூஸ் வாசகர்களே இனி நீங்களும் நிருபர் ஆகலாம். செங்கல்பட்டு மாவட்டத்தில் நிகழக்கூடிய அனைத்து விஷயங்களையும் எங்களுக்கு செய்தியாக கொடுத்து வருமானம் ஈட்டுங்கள். உங்களை சுற்றி நடக்கும் அனைத்தையும் செய்தியாக்குங்கள். இந்த <>லிங்கை <<>>பயன்படுத்தி உடனே பதிவு செய்யுங்கள். நாங்கள் உங்களை தொடர்பு கொள்கிறோம். வாய்ப்பை தவற விடாதீர்கள்!

News March 17, 2025

தொண்டை பிரச்சனை தீர்க்கும் திருக்கரை ஈஸ்வரர்

image

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுக்கா, மானாம்பதி பகுதியில் பிரசித்தி பெற்ற மானாம்பதி திருக்கரை ஈஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு வந்து வழிபாட்டால் பேச்சு குறைபாடுகள், தொண்டை பிரச்சினைகள் மற்றும் தைராய்டு பிரச்சினைகள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.

News March 17, 2025

செங்கல்பட்டு: வரி செலுத்த ஆட்சியர் அறிவுறுத்தல் 

image

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள 539 கிராம ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் கிராம ஊராட் சிக்கு 2024-25-ம் நிதியாண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி (வீட்டு வரி), குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரியினங்களையும் வரும் மார்ச் 28-ஆம் தேதிக்குள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நிலுவையின்றி இணைய வழியில் செலுத்துமாறு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.

News March 17, 2025

தனிநபர் விவசாய மேம்பாட்டு கிணறுகள் அமைக்க அனுமதி

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், புதிய குளம் உருவாக்கம், குளம் மற்றும் கால்வாய் துார்வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, சித்தாமூர், மதுராந்தகம், திருப்போரூர், லத்துார் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 30 விவசாயிகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

News March 17, 2025

அங்கன்வாடியில் ரூ.24,200 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி பணியாளர்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 7,783 அங்கான்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளனர்.அதிகபட்சம் 12ஆம் வகுப்பும் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.வயது 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு கிடையாது.ரூ.24,200 வரை சம்பளம். மேலும் தெரிந்து கொள்ள <>கிளிக் <<>>செய்யவும்.

News March 17, 2025

செங்கல்பட்டில் போதையில் இளைஞர் அடித்து கொலை!

image

செங்கல்பட்டு திருப்போரூர் அருகே பூபதி,பாஸ்கர், விஷ்ணு ஆகிய மூவர் மது அருந்தி உள்ளனர். அந்த நேரத்தில் அவ்வழியே சென்ற சரண்குமார் என்பவரிடம் சிகரெட் வாங்கி வர சொன்னதை அடுத்து வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.பின் அங்கிருந்து சென்ற சரண் மீண்டும் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த பொழுது மூவரும் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர்.அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஸ்கரை கட்டையால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

error: Content is protected !!