Chengalpattu

News March 23, 2025

கொள்ளைகொள்ளும் கொலவை ஏரி

image

கொலவை ஏரி செங்கல்பட்டு மாவட்ட நகரில் அமைந்துள்ளது. இது இம்மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும். மதுராந்தகம் ஏரி முதலிடத்தில் இருக்கிறது. இந்த ஏரியானது செங்கல்பட்டு இரயில் நிலையத்தின் அருகிலேயே உள்ளது. இந்த ஏரியில் மீசைக் கடற்பறவை, இந்திய புள்ளி-பில் வாத்துகள், மூர்ஹென்கள், கூட்ஸ் போன்ற புலம்பெயர்ந்த பறவைகள் உள்ளன. தற்பொழுது ஏரியின் ஆக்கிரமிப்பால் தண்ணீர் குறைந்து வருகிறது. ஷேர் பண்ணுங்க.

News March 22, 2025

ஆஞ்சநேயர் கிரிவலம் செல்லும் அதிசய மலைக்கோவில்

image

கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் செல்லும் சாலையில் உள்ள புதுப்பாக்கத்தில் கஜகிரி என்ற மலை மீது வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு வழிபட்டால் நோய்கள், மன அழுத்தம், திருமண தடைகள் நீங்கும். பவுர்ணமி தோறும் இங்கு ஆஞ்சநேயர் கிரிவலம் வருவதாக நம்பிக்கை. அந்த சமயத்தில் நாமும் கிரிவலம் வந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 22, 2025

JUST IN: செங்கல்பட்டு ஆட்சியருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிப்பு

image

செங்கல்பட்டு ஆட்சியருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கிராம உதவியாளராக பணியாற்றிய முனுசாமி 2001இல் மரணமடைந்தார். அவரின் மகன் ராஜாகிளிக்கு கருனை அடிப்படையில் 3 மாதங்களுக்குள் வேலை வழங்க 2023ல் ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி அவர் தொடர்ந்த வழக்கில் மாவட்ட ஆட்சியருக்கு நேட்டீஸ் அனுப்பியும் ஆஜராகததால் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

News March 22, 2025

செங்கல்பட்டில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

செங்கல்பட்டில் இன்று (மார்.22) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பல்லாவரம், தாம்பரம் போன்ற புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் குடை அல்லது ரெயின்கோர்டை எடுத்துச் செல்லுங்கள். உங்க ஏரியாவில் மழையா?

News March 22, 2025

குடிநீா் கேன்களை 50 முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது

image

ஒரு குடிநீா் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீா் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம். அதுமட்டுமன்றி நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்ட குடிநீா் கேன்களை பயன்படுத்த வேண்டாம். குடிநீரின் தரத்தை உறுதி செய்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டது. எனவே செங்கல்பட்டில் கேன் தண்ணீர் வாங்கும் பொது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மக்களுக்கு அறியுறுத்தல். ஷேர்

News March 22, 2025

படியில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

image

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த எண்டத்தூரை சேர்ந்த சிவகாமி மாமண்டூர் பகுதியில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று 21ஆம் தேதி பேருந்தில் வேலைக்கு வந்து மாமண்டூர் பகுதியில் இறங்கும்போது படியில் தவறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 22, 2025

இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது

image

சேலத்தை சேர்ந்த 23 வயது பெண், மறைமலைநகரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.இவர் கடந்த 19ம் தேதி விடுதியில் உள்ள குளியல் அறையில் குளிக்கும் போது ஒருவர் அவரை ஜன்னல் வழியாக மொபைல்போனில் வீடியோ எடுத்து உள்ளார்.இதைப் பார்த்து அவர் கூச்சலிடவே, அந்த மர்ம நபர் தப்பிச் சென்றார்.இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் பெரம்பலுாரை சேர்ந்த அருள்தாஸ் என்பவரை கைது செய்தனர்.

News March 21, 2025

வரங்களை வாரி வழங்கும் மாங்காடு காமாட்சி அம்மன்

image

தொண்டை நாட்டின் புகழ் பெற்ற அம்மன் ஆலயங்களில் மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் புகழ் பெற்றது. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகள் வழிபட சிறந்த நாளாகும். சுக்கிரன் வழிபட்ட தலம் என்பதால், திருமணத்தடை, குழந்தைப் பேறு ஆகியவற்றுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் ஏராளம். ஆறு வாரங்கள் தொடர்ந்து இரண்டு எலுமிச்சைப் பழங்கள் வாங்கி வந்து வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும். ஷேர் பண்ணுங்க

News March 21, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று (மார்.21) முதல் விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் – 364, மாநில அரசு விரைவு போக்குவரத்து கழகம் – 318, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) – 322 பணியிடங்கள் உள்ளன.24 வயது நிறைந்திருக்க வேண்டும்.10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விண்ணப்பிக்கும் <>லிங்க்<<>>.ஷேர் பண்ணுங்க மக்களே

News March 21, 2025

பள்ளி கல்வித்துறை பெயரில் பெற்றோரை ஏமாற்றும் கும்பல்

image

செங்கல்பட்டில் பெற்றோருக்கு அழைப்பு விடுத்து, பள்ளிக் கல்வித் துறையிலிருந்து பேசுவதாகக் கூறி பணம் பறிக்கும் கும்பல் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி மாவட்ட கல்வித் துறை கேட்டுக்கொண்டுள்ளது. பெற்றோரின் வங்கி கணக்கிற்கு கல்வி உதவித்தொகை அனுப்ப குறுஞ்செய்தியில் வரும் ‘கியூ ஆர்’ கோட்டினை ஸ்கேன் செய்து அனுப்பும்படி கூறுகின்றனர்.அவ்வாறு ஸ்கேன் செய்தவுடன் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது.

error: Content is protected !!