Chengalpattu

News March 26, 2025

கல்பாக்கம் அணு மின் நிலையம் வேலைவாய்ப்பு

image

செங்கல்பட்டில் இயங்கி வரும் கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் Nurse, Medical Officer, Lab Technician ஆகிய பதவிகளுக்கு 14 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நேரடியாக வந்து விண்ணப்பிக்க வேண்டும். ஏப்ரல் 23க் குள் விண்ணப்பிக்க வேண்டும். ரூ.47,430 முதல் ரூ.108,508 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முன் வயது, கல்வி தகுதி ஆகியவற்றை இந்த <>இணையதளத்தில்<<>> தெரிந்து கொள்ளலாம். #Share_It

News March 26, 2025

ஹீலியம் கேஸ் நிரப்பி இளைஞர் தற்கொலை

image

காட்டாங்கொளத்தூரை சேர்ந்தவர் ஹரி ராம்நாராயணன். போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர் தன்னுடன் பணியாற்றும் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். இதனால் மனவேதனையில் இருந்த அவர் நேற்று தனது வீட்டின் அறையில் ‘ஹீலியம் கேஸ்’ கசிய விட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 25, 2025

திருமண தடை நீக்கும் நித்யகல்யாண பெருமாள்

image

சென்னைக்கும் மாமல்லபுரத்திற்கும் இடையிலான கிழக்கு கடற்கரை சாலையில் 1000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான நித்யகல்யாண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவராக விளங்கும் நித்யகல்யாண பெருமாளை வேண்டினால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 25, 2025

செங்கல்பட்டு மாவட்டத்தில் சுங்க கட்டணம் உயர்வு

image

தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 78 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. வாகனங்களுக்கு ஏற்ப 5 முதல் 25 ரூபாய் வரை கட்டண உயர்வு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News March 25, 2025

செங்கல்பட்டு மக்களே கட்டாயம்! மிஸ் பண்ணிடாதீங்க

image

தமிழக அரசின் அறிவிப்பையடுத்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் கைரேகையை பதிவு செய்யாத குடும்ப அட்டைதார்கள் தங்களுடைய நியாய விலைக் கடைக்கு சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது. வெளி மாவட்டங்களில் இருப்பவர்கள் அருகில் உள்ள நியாய விலை கடைகளில் ஆதார் அட்டையுடன் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

News March 25, 2025

கல் குவாரியில் மூழ்கிய வாலிபர்; 2வது நாளாக தேடும் பணி

image

சிவகங்கையை சேர்ந்தவர் பாலமுருகன் (28). இவர் குன்றத்துாரில் தங்கி தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி பாலமுருகன் தன் நண்பர்களுடன் எருமையூரில் உள்ள கல்குவாரியில் குளிக்க சென்றார். அப்போது அவர் நீரில் மூழ்கி மாயமானார். சோமங்கலம் போலீசார் மற்றும் படப்பை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடியும் கிடைக்கவில்லை. 3வது நாளாக இன்றும் தேடுதல் பணியில் ஈடுபட உள்ளனர்.

News March 25, 2025

அட இவங்கல்லாம் செங்கல்பட்டுல பிறந்தவர்களா?

image

வஹீதா ரெஹ்மான் – இந்தியாவின் புகழ் பெற்ற நடிகை. நாசர் – புகழ் பெற்ற தமிழ் நடிகர். C.V ஸ்ரீதர் – புகழ்பெற்ற இயக்குனர். சுல்தான் பக்ஷ் – 1857 ஆம் ஆண்டு முதல் சுதந்திரப் போரின் போது ஆங்கிலேயர்களை கடுமையாக எதிர்த்த ஒரு புரட்சியாளர். ஜெனரல் கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜி – ராணுவத் தளபதி (1986 – 1988). ஒவி.அழககேசன் – செங்கல்பட்டின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர். உங்களுக்கு தெரிந்த பிரபலங்களை Comment செய்யுங்கள்

News March 25, 2025

மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 579 மனுக்கள் பெறப்பட்டன

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பட்டா, முதியோர் உதவித்தொகை, ஓய்வூதியம், நலத்திட்ட உதவிகள்,சாலை, குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு வகைப்பட்ட 579 மனுக்கள் பெறப்பட்டன. அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

News March 24, 2025

சர்பதோஷம் நீக்கும் காளத்தீஸ்வரர்

image

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ராகு கேது ஒருவர் பின் ஒருவர் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். மேலும், நாகம் அடையாளம் காட்டிய தலங்களில் ஒன்றாக இந்த திருக்கோயில் உள்ளது. சர்ப்பதோஷம் இருப்பவர்கள் சனிக்கிழமையில் நடைபெறும் சர்பதோஷ நிவர்தியில் கலந்து கொள்ள சர்ப்ப தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க.

News March 24, 2025

சென்னை TIDEL Parkல் வேலை- ரூ.1,87,000 வரை சம்பளம்

image

சென்னை டைடல் பார்க் நிறுவனத்தில் மேற்பார்வை பொறியாளர், மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.59,300 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு BE (EEE), ஏதேனும் ஒரு டிகிரி உடன் CA முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை<> இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!