India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள பாரதியார் நகரில், தி.மு.க. நிர்வாகி மற்றும் தொழிலதிபரான ரித்தீஸ் வீட்டில் 140 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது. இந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை, 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இரண்டு குற்றவாளிகளை கைது செய்தது. அவர்களிடம் இருந்து 119 சவரன் நகைகள் மீட்கப்பட்டன. மேலும், இந்த திருட்டில் ஈடுபட்ட மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு ஆட்சியர் சினேகா, ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கும் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். விருப்பமுள்ளவர்கள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 30ஆம் தேதி ஆகும்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவாக்கப் பகுதியாக, சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை புதிய வழித்தடம் அமைய உள்ளது. இதன் முதல் கட்டப் பணிகளுக்காக, தமிழ்நாடு அரசு 1,963.63 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. சுமார் 15 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்தத் தடத்தில் 13 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த வழித்தடத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
போலியான ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்கள் வழியாக குறைந்த விலையில் பொருட்கள் தருவதாகக் கூறி நடைபெறும் மோசடிகள் அதிகரித்துள்ளதாக செங்கல்பட்டு காவல்துறை எச்சரித்துள்ளது. நம்பகமான இணையதளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆன்லைன் மோசடிகளில் ஏமாற்றப்பட்டால், உடனடியாக 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.
செங்கல்பட்டு மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <
செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த நம்மாழ்வார் விருது வழங்கப்பட உள்ளது இந்த விருதினை பெற விரும்பும் விவசாயிகள், குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் உயிர்ம வேளாண்மையில் சாகுபடி செய்தல் வேண்டும். அக்ரிஸ்நெட் வலைதளத்தில், செப்15ம் தேதிக்குள் பதிவுக் கட்டணம் 100 ரூபாய் செலுத்தி,விண்ணப்பிக்க வேண்டும்.
இதுதொடர்பான தகவலுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்
செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் ஏரியில் மண் அள்ளுவதை எதிர்த்து ஜெயப்பிரகாஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏரியில் வண்டல் மற்றும் உயர்த்தப்பட்ட பகுதிகளில் மண் அள்ளுவதால் பருவமழையால் கிடைக்கும் அதிக நீரைத் தக்கவைக்கவும், நிலத்தடி நீரை பெருக்கி விவசாய தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உதவும் என்று வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம் அல்லது 0427-2451943 என்ற எண்ணை அழைக்கலாம்.ஷேர் பண்ணுங்க!
சென்னை கடற்கரை- அரக்கோணம் மின்சார ரயில் நேற்று இரவு பாலூர் ரயில் நிலையத்தில் நாகர்கோவில் விரைவு ரயிலுக்கு வழிக்காக, 2வது நடைமேடையில் நிறுத்தப்பட்டது. 30 நிமிடங்களுக்கு மேலாக ரயில் புறப்படாததால் ஆத்திரமடைந்த பயணிகள் ரயில் முன்பு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு ரயில்வே போலீசார் பயணிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழகம் வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் த.மோ.அன்பரசன் ஆகியோர் வரவேற்றனர். அரசின் சார்பில் அவருக்குப் புத்தகம் வழங்கப்பட்டது. காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.