Chengalpattu

News April 5, 2025

தாம்பரத்தில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

image

தாம்பரம் அடுத்த படப்பையில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் இன்று (ஏப்ரல் 5) கைது செய்தனர். கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க, சம்பவ இடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சதாம் உசேன், பிரவீன் குமார், இம்ரான்கான் ஆகியோரை கையும் களவுமாக கைது செய்தனர். கஞ்சா வாங்கினால் போதை மாத்திரை இலவசம் என சலுகை முறையில் விற்று வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

News April 5, 2025

வரதட்சணை காரணமாக பெண் தற்கொலை: கணவர் கைது

image

செங்கல்பட்டு மாவட்டம் மேலமையூரில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் பூர்ணிமா என்ற பெண்ணை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களாக மணிகண்டன் பூர்ணிமாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பூர்ணிமா கடந்த 31ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புகாரின் பேரில் மணிகண்டனை போலீசார் நேற்று (ஏப்ரல் 4) கைது செய்தனர்.

News April 5, 2025

செங்கல்பட்டில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் முகாம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மின்வாரிய பொறியாளர்கள் அலுவலகத்தில் மின்நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணத் தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து புகார்களையும் நிவர்த்தி செய்யும் பொருட்டு, 05.04.2025 (நாளை) சனிக்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

News April 4, 2025

செங்கல்பட்டு அரசு சுகாதாரத்துறையில் வேலை

image

தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் கீழ் செங்கல்பட்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 21 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். குறிப்பாக பல்நோக்கு பணியாளருக்கு எழுத படிகக் தெரிந்திருந்தால் போதுமானது. சம்பளம் 8,000-35,000 வரை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து வரும் ஏப்ரல் 17லுக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News April 4, 2025

1,299 SI பணியிடங்கள்: 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வாரிசுதாரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு 10% ஒதுக்கீடு உள்ளது. ஷேர் செய்யுங்கள்

News April 4, 2025

ஆம்னி பேருந்து மீது மோதி: காவலர் பலி

image

ஆலந்தூர் அருகே உள்ள ஆசர்கானா பகுதியில், போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் (SI) சிவகுமார் (53) நேற்று (ஏப்ரல் 3) பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முன்னாள் சென்ற ஆம்னி பேருந்து ஒன்று அவரது பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 4, 2025

ராஜேந்திரசோழன் மெய்கீர்த்தி கல்வெட்டு கண்டுபிடிப்பு

image

ஈசூர் பாலாற்றில், ராஜேந்திர சோழன் மெய்கீர்த்தி கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. 12 வரிகள் கொண்ட இந்த கல்வெட்டு, ஆற்றங்கரை பகுதியில் உள்ள பழங்கால கோவிலில் இருந்திருக்கலாம். முழுமையான கல்வெட்டாக இல்லாததால், கோவிலைப் பற்றியோ, தற்போது இந்த கோவில் உள்ளதா என்பதைப் பற்றியோ அறிய முடியவில்லை. இந்த கல்வெட்டை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாக வரலாற்றுத் துறை விரிவுரையாளர் தெரிவித்துள்ளார்.

News April 3, 2025

நினைத்தது எல்லாம் நிகழ்த்தும் சிறந்த கோயில்

image

தாம்பரத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ ராம ஆஞ்சிநேயர் கோயில் உள்ளது. இந்த கோயில் அருகே சிவன் கோயில் உள்ளது. இங்கு தேங்காய் கட்டி பிராத்தனை மேற்கொண்டால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற, திருமணம் கைகூட, உடல் நலம் மேம்பட பக்தர்கள் இங்கு வழிபடுகின்றனர். மேலும், இது அனைத்தும் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிகின்றனர். தெரிந்தவர்களுக்கு ஷேர்பண்ணுங்க.

News April 3, 2025

ரயில்வே வேலை: ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்

image

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணினி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும். <>ஷேர் செய்யுங்கள்<<>>

News April 3, 2025

காதலியை கல்லால் அடித்து கொன்ற காதலன்

image

அனகாபுத்தூரைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (33) கணவரை பிரிந்து தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். வீட்டருகே வசிக்கும் ஞானசித்தன் உடன் பாக்யலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (ஏப்ரல் 1) பாக்கியலட்சுமி வேறு ஒரு நபருடன் செல்போனில் பேசி கொண்டிருந்ததால், ஆத்திரமடைந்து ஞானசித்தன் கடப்பா கல்லை எடுத்து பாக்கியலட்சுமி தலையில் போட்டு கொலை செய்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!