Chengalpattu

News April 18, 2025

செங்கல்பட்டு மாவட்ட சில செய்திகள்

image

➡தாம்பரம் ரயில் நிலையத்தில் நள்ளிரவில் ரயில்வே பாதுகாப்பு படையினர் தங்க பெண்களுக்கு ஓய்வு அறை அமைக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி. ➡ செய்யூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.3.5 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசாணை வெளியீடு. ➡மாமல்லபுரத்தில் ரூ.30 கோடி செலவில் சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று அறிவிப்பு.

News April 18, 2025

செங்கல்பட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் வளாகத்தில் வரும் 25-ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணிவரை நடைபெற உள்ளது.மேலும் தகவலுக்கு 044-27426020, 60933 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு இதை ஷேர் செய்யுங்கள்

News April 18, 2025

மாமல்லபுரத்தில் ஒருநாள் இலவச அனுமதி

image

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்க்க இன்று (18.04.2025) ஒருநாள் மட்டும் இலவச அனுமதி என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு இன்று பொதுமக்கள் அனைவரும் இந்த இலவச அனுமதியை பயன்படுத்தி மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை பார்வையிடலாம். நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News April 18, 2025

லாரி மோதி ஒருவர் பலி

image

செங்கல்பட்டு, பெரும்பேர்கண்டிகையை சேர்ந்தவர் சரவணன் (47). இவர் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்துாரில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்றார். அப்போது அச்சிறுபாக்கம் அருகே முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்ற போது லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி பலியானார். போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

News April 17, 2025

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் செம வேலை

image

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பல்வேறு காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.Sc, D.Pharm, Diploma, DMLT, MBBS, Nursing படித்தவர்கள் நேரடியாக சென்று வரும் ஏப்.23-க்குள் விண்ணப்பிக்கலாம். தகுதியானோருக்கு ரூ.47,430-ரூ.108,508 வரை சம்பளம் வழங்கப்படும். மேலம், தகவலுக்கு <>இங்கு கிளிக்<<>> செய்யவும். *நிச்சயாமாக இது ஒரு நல்ல வாய்ப்பு. தவற விட வேண்டாம். நண்பர்களுக்கும் கட்டாயம் தெரியப்டுத்துங்கள்*

News April 17, 2025

செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருது

image

அச்சிறுப்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், செங்கல்பட்டு மாவட்ட சிறந்த பள்ளிக்கான காமராஜர்விருது, பாராட்டுசான்று வழங்கும்விழா (ம) 8-கூடுதல் பள்ளிகட்டிடங்கள் திறப்புவிழா நிகழ்ச்சி இன்றுகாலை மாவட்ட ஆட்சியர் S.அருண்ராஜ், கூடுதல் ஆட்சியர் நாராயணசர்மா (மா.ஊரகவளர்ச்சி) தலைமையில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் S.C.அகர்வால், CMD.மைத்தன் நிறுவன மேலாளர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்,

News April 17, 2025

அங்கன்வாடி பணி: விண்ணப்பிப்பது எப்படி?

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் 156 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த <>லிங்கை கிளிக் <<>>செய்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து, வரும் 23ஆம் தேதிக்குள் தங்களது வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். கணவனை இழந்த அல்லது ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 25-35 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்.

News April 17, 2025

செங்கையில் 64 ஏரிகள் தூர்வாரும் பணி துவக்கம் 

image

செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 64 ஏரிகள் சமூக பொறுப்பு நிதி 5.17 கோடி ரூபாய் செலவில் துார்வாரி சீரமைக்கும் பணி துவங்கி உள்ளது. ஏரிகள் துார்வரும் பணிக்கு, முதல் முறையாக தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் வட கிழக்கு பருவமழை துவங்கும் முன் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க, ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News April 17, 2025

செங்குளவிகள் கொட்டி பெண் பலி 

image

மதுராந்தகம் குருகுலம் பகுதியைச் சேர்ந்த மனோகரன்(55), இவரது மனைவி லட்சுமி(53). இவர்களது வீட்டின் அருகே உள்ள மரத்தில் குளவி கூடு கட்டி இருந்தது. நேற்று, திடீரென்று கூட்டை விட்டு பறந்த செங்குளவிகள் மனோகரன், லட்சுமி மற்றும் வீட்டில் இருந்த மூவரை கொட்டி உள்ளது. மயங்கி விழுந்த இவர்களை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், லட்சுமி செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News April 16, 2025

ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கு  குறை தீர்க்கும் கூட்டம்

image

ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 22.05.2025 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் கூடுதல் இயக்குநர் மூலம்  நடத்தப்பட உள்ளது. ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக குறைகள் ஏதேனும் இருப்பின் அதற்கான முறையீட்டினை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு 21.04.2025 முதல் 30.04.2025 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!