Chengalpattu

News December 4, 2024

சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து: பாஜக பிரமுகர் கைது

image

பாஜக பிரசார பிரிவு தலைவர் குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் சதீஷ் (45). இவர் முதல்வர், துணை முதல்வர், பெரியார் மற்றும் திராவிடம் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக ஐடி அணியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து சதீஷை நேற்று (டிச.3) காலை கைது செய்து பல்லாவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News December 3, 2024

தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை

image

செங்கல்பட்டை சேர்ந்தவர் குருசாமி என்பவரின் மகன் ராகுல் (20) பிஎஸ்சி படித்துள்ளார். படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வந்ததாக தந்தை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு ராகுல் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு நகர போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 3, 2024

செங்கல்பட்டில் 1,359 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன

image

செங்கல்பட்டு மாவட்டத்தில், ‘பெஞ்சல்’ புயல் காரணமாக கனமழை பெய்ததில், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 528 ஏரிகளில், 273 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பி வழிகின்றன. எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள, 2,512 குளங்களில், 1,359 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. நீர்நிலை பகுதிகளில், நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித் துறையினர் பாதுகாப்பு பணியை முடக்கிவிட்டுள்ளனர். 

News December 3, 2024

குறைதீர் கூட்டத்தில்167 மனுக்கள் பெறப்பட்டன

image

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்திலுள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில், வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், நில அளவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 167 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

News December 3, 2024

85 பேருக்கு இலவச தார்ப்பாய் வழங்கிய எம்.எல்.ஏ.

image

மாமல்லபுரம் கடற்கரை பகுதியில், இருளர்கள் குடிசை அமைத்து வசிக்கின்றனர். அவர்களுக்கு வீடுகள் கட்ட நடுவக்கரை பகுதியில், அரசு இடம் ஒதுக்கியுள்ளது. மழை காரணமாக குடிசைகள் சேதம் அடைந்ததால், கடந்த இரு நாட்களாக முகாமில் தங்க வைக்கப்பட்டனர். பலத்த காற்றில் குடிசைகள் சேதமடைந்தது குறித்து அறிந்த திருப்போரூர் விசிக எம்.எல்.ஏ., பாலாஜி, தலா 1 இலவச தார்ப்பாய் வீதம் 85 பேருக்கு தார்பாய்களை வழங்கினார்.

News December 3, 2024

மின் கட்டணம் செலுத்த டிச.10ஆம் தேதி வரை அவகாசம்

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக, கடந்த சில நாட்களாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கடுமையாக மழை பெய்து வந்தது. இதனால், மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் சில இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு, மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த வரும் டிச.10ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிரமமின்றி மின் கட்டணத்தை செலுத்துங்கள். ஷேர் செய்யுங்கள்.

News December 2, 2024

பாலத்தில் வெள்ளம்: இன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

image

விக்கிரவாண்டி அருகே ரயில்வே பாலத்தில் அபாய அளவை தாண்டி வெள்ளம் செல்வதால், சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூர் வழியாக திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ், விழுப்புரம்-தாம்பரம் பயணிகள் ரயில், புதுச்சேரி-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இன்று (02.12.2024) ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

News December 2, 2024

செங்கல்பட்டு மாவட்டத்தில் 273 ஏரிகள் நிரம்பின

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 528 ஏரிகள் நீர்வளத்துறையின் கட்டுபாட்டில் உள்ளன. ஃபெஞ்சல் புயல் காரணமாக கொட்டி தீர்த்த கனமழையால் பல ஏரிகள் நிரம்பி உள்ளன. அதில் 273 ஏரிகள் 100%நிரம்பியுள்ளது, 197 ஏரிகள் 75% க்கு மேல் நிரம்பியுள்ளது. 51 ஏரிகள் 50%க்கு மேல் நிரம்பியுள்ளது. ஏழு ஏரிகள் 25%க்கு மேல் நிரம்பியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News December 2, 2024

செங்கல்பட்டில் 103 ஏரிகளும் நிரம்பியது

image

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அம்மாவட்டங்களில் உள்ள 344 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. குறிப்பாக செங்கல்பட்டில் 103 ஏரிகளும், காஞ்சிபுரத்தில் 10 ஏரிகளும், திருவள்ளூரில் 231 ஏரிகளும் நிரம்பியுள்ளதாக தகவல் வந்துள்ளது.

News December 2, 2024

செங்கல்பட்டு அருகே இரண்டு மாடுகள் உயிரிழப்பு 

image

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொண்டமங்கலம் பகுதியில் விவசாய நிலத்தில் இருந்த மின்கம்பம் புயல் மற்றும் மழையின் காரணமாக உடைந்து விழுந்தது.இதில் மின் கம்பி அறுந்து கீழே விழுந்தது. அப்போது அங்கே இருந்த ஆறுமுகம் என்பவரது இரண்டு பசு மாடுகள் மீது மின் கம்பி பட்டு பசு மாடுகள் இரண்டும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

error: Content is protected !!