India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

செங்கல்பட்டு இன்று ( பிப்ரவரி-02) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) இங்கு <

சில சமயம் நாம் கடைகளில் வாங்கும் பொருட்கள் தரமற்றோ, பழைய பொருட்களாகவோ வரலாம். இதை கடை ஓனர் மாற்ற மறுத்தாலோ (அ) பணத்தைத் தராவிட்டாலோ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புகார் செய்யலாம். வாங்கிய பொருள் 15 நாட்களுக்குள் சேதாரம் இல்லாமல், வாங்கிய நிலையில் இருந்தால், அதை மாற்ற, பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு. மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (044-27428832) தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

செங்கல்பட்டு மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<

மஹாராஷ்டிராவை சேர்ந்தவர் நோயல்(23), ஜார்க்கண்ட்டை சேர்ந்தவர் ரித்தேஷ் குமார் (21), கோவில்பட்டியைச் சேர்ந்த முகேஷ் பிரவீன் (19)ஆகியோர் கானத்தூரில் உள்ள தனியார் மரைன் பொறியியல் கல்லுாரியில் படித்து வருகின்றனர். நேற்று 3 பேரும் கோவளம் கடற்கரைக்கு சென்று கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, அலையில் சிக்கி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தார். கேளம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

செங்கல்பட்டு மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <

குன்றத்துார் அருகே சின்னப்பணிச்சேரியைச் சேர்ந்தவர் பாபு (45) லாரி ஓட்டுநர். இவர், நேற்று இரவு எண்ணுார் துறைமுகத்தில் இருந்து, புதிய லாரிக்கு பாடி கட்டுவதற்காக திருச்சி புறப்பட்டார். மீஞ்சூர் – வண்டலுார் வெளிவட்ட சாலையில், குன்றத்துார் அருகே எருமையூர் பகுதியை கடந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்தது. இதில் பாபு, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

பெருங்களத்தூர் அருகே நெடுங்குன்றம் பகுதியில் வசித்து வந்தவர்கள் பிரியங்கா, நரேஷ் குப்தா. இவர்கள் அங்கு இருந்த நாய்களை உணவளித்து பராமரித்து வந்தனர். இந்நிலையில், இந்த நாயகளால் அக்கம் பக்கத்தினருக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும், வீட்டை காலி செய்யவும் வீட்டு ஓனர் தெரிவித்துள்ளார். வீட்டை காலி செய்த அவர்கள், மீட்டும் அந்த நாய்களை பார்க்க வந்த போது அவைகள் செத்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 841 நியாய விலைக் கடைகளில் 32,242 தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில் வருகின்ற 2,3,4 ஆகிய தேதிகளில் வீடுகளுக்கே சென்று பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று பொது விநியோகத் திட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு நேற்று ( பிப்-01) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.