Chengalpattu

News April 7, 2025

தம்பி கண் எதிரேயே அக்கா தூக்கிட்டு தற்கொலை

image

பொழிச்சலூர் எம்.ஜி.ஆர்.நகர் மூர்த்தி தெருவைச் சேர்ந்த ரோஷினி (10), 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது தாய் கவுசல்யா நேற்று (ஏப்ரல் 6) வேலைக்கு சென்றுவிட்டு வருவதற்குள் வீட்டு வேலைகளை செய்து வைக்கும்படி ரோஷினியிடம் கூறியுள்ளார். ஆனால் ரோஷினி, வீட்டு வேலைகள் எதுவும் செய்யவில்லை. இதனால் தனது தாய் தன்னை அடிப்பாரோ? என பயந்த ரோஷினி தனது தம்பி கண் எதிரேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News April 7, 2025

கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

image

திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் திருப்போரூர் அடுத்த காலவாக்கதில் உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி எலக்ட்ரானிக்ஸ் மற்றும்  கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (ஏப்ரல்.05) இரவு ஜீவானந்தம் தனது அறையில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 7, 2025

காஞ்சிபுரம்: இலவச ட்ரோன் பயிற்சி முகாம்

image

தமிழக அரசின் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான இலவச ட்ரோன் பயிற்சி முகாம் ஏப்ரல் 28 முதல் ஏப்ரல் 30 வரை சென்னையில் நடைபெற உள்ளது. 18 வயது பூர்த்தியான இருபாலரும் இதில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சி முகாமில் சேர விரும்புவோர் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

News April 6, 2025

செங்கல்பட்டு மாவட்டத்தில் 156 பணியிடங்கள் அறிவிப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 85 அங்கன்வாடி பணியாளர், 2 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 69 அங்கன்வாடி உதவியாளர் என மொத்தம் 156 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10th, 12th பாஸ் போதும். விருப்பமுள்ளவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையத்தில் ஏப்ரல் 23-க்குள் விண்ணப்பிக்கலாம். *ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்ட அனைத்து பெண்களுக்கும் ஷேர் பண்ணுங்க*.

News April 6, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து வரும் மே மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்.

News April 6, 2025

செங்கல்பட்டில் 3 மாதத்தில் 200 விபத்துகள்; 25 நபர்கள் பலி!

image

செங்கல்பட்டு மாவட்டம் புறநகர் பகுதியில் கடந்த மூன்று மாதங்களில் 200க்கும் மேற்பட்ட சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 25க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். விபத்துக்களை தடுக்க போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. வாகன போக்குவரத்துக்கு ஏற்ப இந்த பகுதிகளில் போக்குவரத்து போலீசார் பணியில் இல்லை என சமூக ஆர்வலர்கள் குற்றஞ் சாட்டி உள்ளனர்.

News April 6, 2025

”குழந்தை திருமணத்தில் தொடர்புடைய அனைவருக்கும் சிறை”

image

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”குழந்தை திருமணம் சட்டவிரோதம். பெண்களுக்கு 18க்கும், ஆண்களுக்கு 21க்கும் குறைவான வயதில் திருமணம் செய்தால் 2 ஆண்டு சிறை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இதை ஊக்குவிப்பவரும் தண்டனைக்கு உட்படுவர். புகாருக்கு 1098, 1091, 181 போன்ற இலவச எண்களில் தொடர்புகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News April 5, 2025

செங்கல்பட்டு மக்களுக்கு அவசியம் தெரிய வேண்டிய எண்கள்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக தொலைபேசி எண் – 044 – 27427412, ஆட்சியரக கட்டுப்பாட்டு அறை- 1077, பேரிடர் கால உதவி- 1077 / 044-27427412 /27427414, காவல் கட்டுப்பாட்டு அறை- 100, விபத்து உதவி எண்- 108, தீ தடுப்பு- 101, விபத்து அவசர வாகன உதவி- 102, குழந்தைகள் பாதுகாப்பு-1098, பாலின துன்புறுத்தல் தடுப்பு- 1091, BSNL ஹெல்ப் லைன்- 1500. *மிக முக்கிய எண்களான இவற்றை நண்பர்களுக்கும் பகிரவும்

News April 5, 2025

டி.ஜி.பி., பெயரில் போலி பேஸ்புக் கணக்கு

image

டி.ஜி.பி., ரேங்க் ஐ.பி.எஸ்., அதிகாரி சந்தீப் ராய் ரத்தோர். இவர், தற்போது செங்கல்பட்டு மாவட்டம் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல்துறை பயிற்சி கல்லூரி இயக்குநராக உள்ளார். இவரது பெயரில் சைபர் குற்றவாளிகள் போலியாக பேஸ்புக் கணக்கு துவங்கி, அவரது நண்பர்கள், உறவினர்களுக்கு நட்பில் இணைய அழைப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சைபர் கிரைம் போலீசில் சந்தீப் ராய் ரத்தோர் புகார் அளித்துள்ளார்.

News April 5, 2025

மொபைல் ஆபரேட்டர் வேலைவாய்ப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள டிவைன் எண்டர்பிரைசஸ் கம்பெனியில் மொபைல் ஆபரேட்டர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். 10, 12, ITI, டிப்ளமே படித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதற்கு வரும் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.15,000 – ரூ.25,000 வழங்கப்படும். உணவு, போக்குவரத்து ஊக்கத்தொகை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!