Chengalpattu

News December 21, 2024

பயண நேரங்களில் ஹெட்-செட் வேண்டாம்: காவல்துறை 

image

பயண நேரங்களில் ஹெட்-செட் வேண்டாம் என்றும், கவனம் சிதறி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இ.சி.ஆர்., சாலை, ஓ.எம்.ஆர்., சாலை, தேசிய நெடுஞ்சாலை உள்ளதால் விபத்துக்கள் தொடர்ந்து அதிகரிக்கிறது. இதனை கட்டுப்படுத்த விழிப்புணர்வுகளை போக்குவரத்து போலீசார் ஏற்படுத்தி வருகின்றனர். ஷேர் பண்ணுங்க

News December 21, 2024

வரும் 31ஆம் தேதி அஞ்சல் குறைதீர் கூட்டம்

image

செங்கல்பட்டு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சண்முகசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வரும் 31ஆம் தேதி செங்கல்பட்டு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கோட்ட அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. தபால் சம்பந்தப்பட்ட புகார்களுக்கு, தொடர்புடைய ஆவணங்களை புகாருடன் இணைத்து வரும் 26ஆம் தேதிக்குள் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

News December 21, 2024

கிணற்றில் மூழ்கி பெண் உயிரிழப்பு

image

செய்யூர், கீழச்சேரி கிராமத்தில் உள்ள ஆஞ்சனேயர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி கல்பனா (28), நேற்று காலை வீட்டின் அருகே உள்ள கிணற்றில், துணி துவைக்கச் சென்றார். நீண்ட நேரமாகியும் கல்பான வீடு திரும்பாததால் கிணற்றில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. செய்யூர் தீயணைப்புத் துறையினர் கிணற்றில் மூழ்கிய கல்பனாவை சடலமாக மீட்டனர். இதுகுறித்து செய்யூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 21, 2024

போலி நீதிபதி கணவருடன் கைது

image

பூந்தமல்லியைச் சேர்ந்த கணபதி என்பவர், தன் மனைவி ரேவதி நீதிபதியாக இருப்பதாவும், ரூ.20 லட்சம் கொடுத்தால் ஐகோர்ட்டில் நீதிபதியின் உதவியாளராக வேலை வாங்கித் தருவதாகவும் கூறி, ஆவடியைச் சேர்ந்த ராஜேஷ் (37) என்பவரிடம் ரூ.20.76 லட்சம் வாங்கி மோசடி செய்துவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் மோசடி செய்த கணபதி, நீதிபதி என ஏமாற்றிய மனைவி ராதிகா (39) இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

News December 20, 2024

தாம்பரத்தில் 263 தெரு நாய்களுக்கு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை

image

தாம்பரம் மாநகராட்சியில் நேற்று முதல் இன்று வரை 265 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு 263 தெருநாய்களுக்கு நாய்கள் மையத்தில் கால்நடை மருத்துவக் குழுவினரால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை முடிந்து ஐந்து நாட்கள் வரை பராமரிக்கப்பட்டு, உடல் தகுதி பெற்ற பின் நாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டு பிறகு பிடித்த இடத்திலேயே விடப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News December 20, 2024

செங்கல்பட்டு காவல்துறையின் அறிவுரை பதிவு 

image

சாலையை கடக்கும்போது கவனம் தேவை என செங்கல்பட்டு மாவட்ட போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர் .அதன்படி1) சாலையில் நடந்து செல்லும்போது கைபேசியை பயன்படுத்தாதீர்.2) குழந்தைகளின் மேல் அதிக கவனம் செலுத்துங்கள்.3) வலது மற்றும் இடது பக்கம் பார்த்து சாலையை பாதுகாப்பாக கடப்பீர் என போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் அறிவுறுத்தி உள்ளனர்.

News December 20, 2024

செங்கல்பட்டு காவல்துறையின் எச்சரிக்கை பதிவு 

image

எக்காரணத்தை கொண்டும் அறிமுகமில்லாத நபர்களிடம் வங்கியின் தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. தங்களின் வங்கி விவரங்களை கேட்டு பணத்தை முழுவதும் மோசடி செய்யும் கும்பல் அதிகரித்து வருகிறது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்புடன் வங்கி கணக்கை கையாளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

News December 20, 2024

கிணற்றில் தவறி விழுந்து தாய் குழந்தை உயிரிழப்பு

image

கீழச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது மனைவி கல்பனா நேற்று மதியம் 1 மணியளவில் கிணற்றிற்கு துணி துவைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குழந்தையுடன் கிணற்றில் விழுந்துள்ளார். நீச்சல் தெரியாத காரணத்தால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இருவரது உடலையும் மீட்டுள்ளனர்.

News December 20, 2024

செங்கல்பட்டில் சாரல் மழை

image

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, செங்கல்பட்டு மாவட்டதில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மீனம்பாக்கம், பல்லாவரம், பம்மல், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர், ஸ்ரீபெரும்புதூர், கல்பாக்கம், மாமல்லபுரம், கேளம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க ஏரியாவில்?

News December 20, 2024

நாட்டிய விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

image

மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய திருவிழா 22.12.2024 முதல் 20.01.2025 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் அறிவுறுத்தலின்படி செங்கல்பட்டு சார் ஆட்சியர் அலுவலகத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சார் ஆட்சியர் நாராயண சர்மா தலைமையில் நடைபெற்றது. இதில், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

error: Content is protected !!