India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டம் வல்லத்தில் வேதாந்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. எங்கெல்லாம் முதிர்ந்த பாறைகள் உள்ளதோ அங்கெல்லாம் கல்குடைந்து கோவில் கட்டிய பல்லவர்கள் இதையும் குடைவரை கோயிலாக காட்டியுள்ளனர். சூரிய கதிர்கள் நேரடியாக கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது விழும் வகையில் கட்டப்பட்ட இந்த கோயிலில் வந்து வழிபட்டால் திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. https://employmentexchange.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து மனுதாரர்கள் ஜூன் 10ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். வேலை தேடும் உங்க நண்பருக்கு ஷேர் பண்ணுங்க
அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க
திருச்சியைச் சேர்ந்த தினேஷ், செங்கண்மால் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி சிறுசேரியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 23) நள்ளிரவு வேலை முடிந்து கேளம்பாக்கம் புதிய புறவழிச்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இளவந்தாங்கல் ரவுண்டானா அருகே சென்றபோது பைக் தடுப்புச்சுவரில் மோதியது. இதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
செங்கல்பட்டு காட்டாங்குளத்தூரில் அருள்மிகு காளத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இது பல்லவர் காலத்தில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயிலாகும். இங்கு அருளும் ஈசன் அதிக சக்தி கொண்டவர் என்பதால் நந்திதேவர் நேராகப் பார்த்து வழிபடாமல், ஒரு துவாரத்திலிருந்து வழிபடுகிறார். இங்கு நந்திதேவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், வீட்டில் தங்க ஆபரணங்கள் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
செங்கல்பட்டு மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘<
நமது WAY2NEWS-ல் ரிப்போர்டராக சூப்பர் வாய்ப்பு. நீங்கள் ஆசிரியரா? வானவில் மன்ற கருத்தாளரா? ஊரக வளர்ச்சித் துறையில் ஒப்பந்த ஊழியரா? சுய உதவிக்குழு உறுப்பினரா? ஆம் என்றால் உங்கள் பணி குறித்த நிகழ்வுகளை செய்தியாக வெளியிட்டு பண மழையில் நனையுங்கள். விருப்பமுள்ளவர்கள் <
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 85 அங்கன்வாடி பணியாளர், 2 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 69 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். இன்றைக்குக்குள் இந்த லிங்கை <
அச்சரப்பாக்கம் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தவர் கீதா. கிராம நிர்வாக அலுவலரை சந்திக்க வரும் ஆண்கள் சிலர் மது போதையில் வருவதால், தன்னுடைய பணியை மேற்கொள்ள முடியாமல் கீதா தவித்துள்ளார். இதுதொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அண்மையில் ஆய்வு மேற்கொண்ட வருவாய் கோட்டாட்சியர், கீதாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மனம் உடைந்த கீதா கதறி அழுததோடு, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
செங்கல்பட்டு அச்சிறுபாக்கத்தில் மரகத தண்டாயுதபாணி (நடுபழநி) திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இருக்கும் முருகன் சிலை மரகத கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் இருக்கும் முருகர் பழநி தண்டாயுதபாணியை போலவே இருப்பதால் ‘நடுபழநி’ என இக்கோயில் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் வங்து வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.