Chengalpattu

News April 10, 2025

மாநகராட்சியில் வேலை: நாளை கடைசி நாள்

image

சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள நகர்புற சுகாதார நல மையங்களில் 345 பணியிடங்கள் உள்ளன. மருத்துவ அதிகாரி, நர்ஸ், சுகாதார பணியாளர், சமூக சேவகர், பேறுகால பணியாளர், எக்ஸ்ரே வல்லுநர், சப்போர்ட் ஸ்டாஃப் உள்ளிட்ட பணிகள் நிரப்பப்பட உள்ளன. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் நாளை 5 மணிக்குள் ரிப்பன் மாளிகைக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். ஷேர் செய்யுங்க

News April 10, 2025

பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் முகாம்

image

மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் கொண்டு, பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் முகாம் 15.04.2025 (செவ்வாய் கிழமை) அன்று செங்கல்பட்டு, அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில், தொழிற் பயிற்சி நிலையங்களில் பயின்றவர்கள் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News April 10, 2025

விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க பரிந்துரை

image

செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செங்கல்பட்டு, வண்டலூர், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. வடகிழக்கு பருவமழைக்கு, 1,217 ஏக்கர் விவசாய நிலங்களில், நெல் பயிர் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க, அரசுக்கு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் பரிந்துரை செய்துள்ளார்.

News April 10, 2025

ராணுவத்தில் வேலை: இன்றே கடைசி நாள்

image

அக்னிவீர் திட்டத்தின்படி, ராணுவத்தில் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சியான இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் உள்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும். 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க மக்களே!

News April 10, 2025

மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

மஹாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மதுபானக் கடைகளுக்கு இன்று விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இன்றைய தினத்தில் விதிகளை மீறி மதுபானக் கடைகள் திறந்திருந்தாலோ அல்லது சட்ட விரோதமாக இதர வழிகளில் விற்பனை செய்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News April 10, 2025

மின்சாரம் தாக்கி வட மாநில இளைஞர் பலி

image

பீஹாரை சேர்ந்தவர் மனோஜ் மாலிக். கூலித்தொழிலாளியான இவர் பவுஞ்சூர் அடுத்த நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கமலகண்ணன் என்பவரிடம் கடந்த 10 நாட்களாக நெல் மூட்டை ஏற்றும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று நீலமங்கலத்தில் சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான வயலில் நெல் மூட்டையை ஏற்றுவதற்காக லாரியில் சென்றார். அப்போது வயல்வெளியில் தாழ்வாக சென்ற மின்கம்பி உரசி மனோஜ் மாலிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News April 9, 2025

கடன் தொல்லை நீக்கும் மகா பைரவர்

image

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரை அடுத்துள்ள மகேந்திரா சிட்டிக்கு மிக அருகில் மகா பைரவ ருத்ர ஆலயம் உள்ளது. இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கினால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், வருடத்திற்கு ஒருமுறை இங்கு வந்தாலே ஆத்மா சுத்தமாகுமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News April 9, 2025

கதவு இல்லா கருவறையுடன் அமைந்துள்ள அற்புத ஆலயம்

image

பிரமிக்க வைக்கும் விதத்தில் செங்கல்பட்டு அருகே திருவடி சூலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயம். கோபுரம் மேலிருந்து பார்க்க ஸ்ரீசக்கரம் போல தோற்றமளிக்கின்றது. இந்த கோயிலில் ஸ்ரீ மகா பைரவர் மூலவராக அமைந்துள்ளதோடு, கோயிலில் ஸ்ரீ கிருஷ்ணர் சந்நிதி, ஹனுமன் சந்நிதி, ஹோம மண்டபம், பெளர்ணமி மண்டபம் உள்ளிட்டவை அமைந்துள்ளது. கதவு இல்லா கருவறையுடன் பயம் போக்குகின்ற பைரவராக காட்சி தருகின்றார். ஷேர்

News April 9, 2025

குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 6-தாலுகாக்களில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் போன்ற திருத்தங்கள் செய்ய, வரும் 12-ந்தேதி (சனிக்கிழமை) சிறப்பு முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். அதன்படி பரனூர், பிலாப்பூர், வில்லிவாக்கம், கடம்பாடி, கேளம்பாக்கம் மற்றும் நல்லம்பாக்கம் உள்ளிட்ட தாலுக்காக்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 9, 2025

செங்கல்பட்டு சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு

image

செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறையில் காலியாக உள்ள சித்த மருத்துவ அலுவலர் 1, யுனானி மருத்துவ அலுவலர் 1, யோகா ஆண் 8, பெண் 8, பல்நோக்கு பணியாளர்கள் 3 ஆகிய பணியிடங்களுக்கு <>இந்த <<>>இணையதளப் பக்கத்திலுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து 17.04.2025 க்குள் விண்ணப்பிக்கலாம். நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், செங்கல்பட்டு என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!