Chengalpattu

News February 8, 2025

விடுமுறை தினத்திலும் திறந்திருக்கும் வண்டலூர் பூங்கா

image

செவ்வாய்க்கிழமை தைப்பூசம் திருநாளை முன்னிட்டு 11ஆம் தேதி அரசு விடுமுறை என்பதால் அன்று அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக திறந்து இருக்கும் என அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விடுமுறை பூங்காவுக்கு விடுமுறை தினமாகும். தைப்பூசம் என்பதால் பார்வையாக அதிகம் பேர் வருவார் என்பதால் பூங்கா திறந்திருக்கும்.

News February 8, 2025

கைதான இருவரும் மாவு கட்டுடன் கோர்ட்டில் ஆஜர்

image

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இளம்பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை அளித்த தயாளன் (45), முத்தமிழ்ச்செல்வன் (56) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்ய முயன்றபோது தப்பி ஓடியதால், இருவருக்கும் கால் மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருவரையும் வண்டலூர் மகளிர் போலீசார் நேற்று கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி பிப்.21ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

News February 8, 2025

புதிய ஆலையை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

image

OMR சாலையில் உள்ள கோத்ரேஜ் கன்ஸ்யூமர் நிறுவனத்தின் புதிய ஆலையை முதல்வர் வரும் 11ஆம் தேதி திறந்து வைக்கிறார்.ரூ.515 கோடி முதலீடு செய்து 446 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. சோப்புகள், முக அழகு க்ரீம்கள், தலைமுடி பராமரிப்பு சாதனங்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்த திட்டத்தில், 50% பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளது. திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க உள்ளது.

News February 8, 2025

மதுராந்தகம் அருகே அரசு விரைவு பேருந்து விபத்து

image

நாகர்கோவிலிருந்து சென்னை சென்ற அரசு விரைவு பேருந்து, நேற்று முன்தினம் (பிப்.6) மதுராந்தகம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். பேருந்தில் பயணித்த 12 பயணிகளும் காயமின்றி உயிர் தப்பினர். ஓட்டுநர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 7, 2025

செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே தினமும் ரூ.500 வரை சன்மானம் பெற அரிய வாய்ப்பு. உங்கள் மாவட்டம், தாலுகா, கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் கோரிக்கைகளை நமது WAY2NEWSல் செய்தியாக பதிவிட்டு சன்மானம் ஈட்டுங்கள். மேலும், விவரங்களுக்கு 8870578987 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது WHATS APPல் தொடர்பு கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து உங்கள் தகவல்களை பகிரலாம்.

News February 7, 2025

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பெண்களுக்கு வேலை

image

செங்கல்பட்டில், மிஷன் சக்தி – ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப பெண் விண்ணப்பதார்கள் வரவேற்கப்படுகின்றனர். இளங்கலை பட்டம், முதுகலை பட்டம், டிப்ளமோ, பட்டபப்டிப்பு படித்தவர்கள் இதற்கு வரும் 14ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்கலாம்<<>>. சம்பளம் ரூ.12,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படும். மையம் நிர்வாகி, சமூக ஆலோசகர், பாதுகாவலர் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 17 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

News February 7, 2025

சரக்கு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

image

வேலுாரில் இருந்து பூந்தமல்லி நோக்கி, சரக்கு வாகனம் ஒன்று இயந்திரங்கள் ஏற்றிக்கொண்டு ஒரகடம் – ஆப்பூர் சாலை வழியாக, மறைமலைநகர் ஜி.எஸ்.டி., சாலை நோக்கி சென்று கொண்டிருந்தது. சரக்கு வாகனத்தை ஹரிஷ் (32), என்பவர் ஓட்டி வந்தார். ஆப்பூர் – மறைமலைநகர் சாலையில் வந்தபோது, வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், ஹரிஷின் இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 6, 2025

கிளம்பாக்கத்தில் பெண்ணை கடத்தியவர்கள் கைது

image

கிளம்பாக்கத்தில் இளம்பெண்ணை கடத்தியவர்களை தனிப்படை போலீசார் இன்று (பிப்.6) கைது செய்துள்ளனர். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணை, 3 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆட்டோவில் கடத்த முயற்சி செய்தது. அப்போது அப்பெண் கத்தி அலற, அவரை இறக்கிவிட்டுட்டு தப்பிச் சென்றனர். மர்ம கும்பலை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டதையடுத்து, மூவரும் இன்று கைது செய்யப்பட்டனர்.

News February 6, 2025

கோல் இந்தியா நிறுவனத்தில் 434 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளம் ரூ.50,000 முதல் – ரூ.1,80,000 வரை வழங்கப்படும். வரும் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்

News February 6, 2025

குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு 3 தனிப்படைகள் அமைப்பு

image

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே கடந்த பிப்.3ஆம் தேதி இரவு, வடமாநில பெண்ணை மர்ம நபர்கள் ஆட்டோவில் கடத்தினர். பல்லாவரம் போலீசார் பின்தொடர்வதை அறிந்த மர்ம நபர்கள் அப்பெண்ணை இறக்கிவிட்டு சென்றனர். இதுதொடர்பாக வழக்கு பதிந்து 3 தனிப்படைகள் அமைத்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர். அதே நேரத்தில் விளக்கு வெளிச்சத்தில் ஆட்டோ எண் சரியாக பதிவாகாததால், குற்றவாளிகளை கண்டறிவதில் சிக்கல் உள்ளதாக கூறினர்.

error: Content is protected !!