Chengalpattu

News February 15, 2025

பேருந்து – லாரி மோதி விபத்து: 5 பேர் காயம்

image

விழுப்புரத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சென்ற அரசு பேருந்தும், சேலத்திலிருந்து ஆவின் பால் ஏற்றிச் சென்ற லாரியும் நேற்று (பிப்.14) திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 5 பேர் லேசான காயமடைந்தனர். இதன் காரணமாக, அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் போலீசார், போக்குவரத்தை சீர் செய்தனர்.

News February 14, 2025

அஞ்சல் துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 59 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <>ஷேர் பண்ணுங்க<<>>

News February 14, 2025

செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியவர் பலி

image

உ.பி.யைச் சேர்ந்தவர்கள் விபின் (32), சர்வன்குமார் (25), சுதீர்வர்ஷன் (27). மூவரும் செட்டிபுண்ணியம் பகுதியில் தங்கி கட்டுமான வேலை செய்து வந்தனர். 2 நாட்களுக்கு முன்பு எப்போதும்போல் மூவரும் தங்கள் செல்போன்களை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிவிட்டனர். அப்போது மின் கசிவு ஏற்பட்டதில், தீ பற்றி சர்வன்குமார் பலியானார். இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News February 13, 2025

கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

image

மதுராந்தகம் அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் புனித வேல் (20). நேற்று (பிப்.12) விவசாய நிலத்தில் நீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை ஆன் செய்தபோது, மின் கசிவு ஏற்பட்டு இவர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 13, 2025

அதிக லாபம் வரும் என ஏமாற வேண்டாம்

image

செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில், நேற்று (பிப்.12) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அரசுத்துறையினர் அனைவரும் கலந்து கொண்டு செங்கல்பட்டில் அதிக பேர் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் வரும் என்ற போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு விஷயங்களை செங்கல்பட்டு காவல்துறை மக்களுக்கு எச்சரித்துள்ளது.

News February 13, 2025

கோல் இந்தியா நிறுவனத்தில் 434 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

News February 13, 2025

புறநகர் AC ரயிலின் சிறப்பம்சங்கள் 1/3

image

மெட்ரோ ரயில்களைபோல் இந்த ரயிலும் பயணிகள் முதல் பெட்டியிலிருந்து இறுதி பெட்டி வரை செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பெட்டிகளைவிட அதிக பயணிகள் செல்லும் வகையில் இந்தப் பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பெரிய கண்ணாடி ஜன்னல்கள், பயணிகளுக்கு GPS அடிப்படையில் தகவல்கள் தெரிவிக்க எண்ம பலகைகள், ஒலிப் பெருக்கிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. முதல், கடைசி பெட்டி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

News February 13, 2025

புறநகர் AC ரயிலின் சிறப்பம்சங்கள் 3/3

image

மெட்ரோ ரயிலைபோலவே தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் ரயில் ஓடும்போது கதவுகள் மூடிவிடும். அதேபோல், கூட்டம் அதிகமாக இருக்கும்போது, பயணிகளிடையே ஏற்படும் புழுக்கத்தை கட்டுப்படுத்த மின்விசிறிகள் உள்ளன. மேலும், ரயில் விபத்துகளை தடுப்பதற்காத ‘கவாச்’ தொழில்நுட்பமும் இந்த ரயிலில் உள்ளது. இதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. 1 வாரத்துக்குள் இந்த ரயில் தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்படும்.

News February 13, 2025

புறநகர் AC ரயிலின் சிறப்பம்சங்கள் 2/3

image

நின்று செல்லும் பெண் பயணிகளுக்கு எளிதாகப் பிடித்து நிற்பதற்காக கைப்பிடிகள் தாழ்வாக தொங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் அமா்ந்தபடி 1,116 போ், நின்றப்படி 3,798 போ் என மொத்தம் 4,914 போ் பயணிக்கலாம். ஒவ்வொரு பெட்டியிலும் கண்காணிப்பு கேமராக்கள், அவசர காலங்களில் ரயில் ஓட்டுரிடம் பேச ‘டாக்பேக்’ அமைப்பு, தீ விபத்து ஏற்பட்டால் அவற்றை கட்டுப்படுத்த தீயணைப்பான்கள் வைக்கப்பட்டுள்ளன.

News February 13, 2025

விரைவில் புறநகர் மின்சார AC ரயில்

image

கடற்கரை – செங்கல்பட்டு இடையே குளிா்சாதன மின்சார ரயில் இயக்கப்படும் என்று கடந்த 2019இல் ரயில்வே வாரியம் அறிவித்தது. இதையடுத்து, முதல்கட்டமாக 12 பெட்டிகள் கொண்ட 2 குளிா்சாதன மின்சார புகா் ரயில்களைத் தயாரிக்க ICF-க்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டது. அதன்படி, 12 பெட்டிகள் கொண்ட முதல் குளிா்சாதன மின்சார புகா் ரயில் தயாரிக்கும் பணிகள் தற்போது முழுவதுமாக நிறைவடைந்துள்ளன. விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

error: Content is protected !!