India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த லிங்கை <
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் துணை ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) கீழ் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் மற்றும் பம்ப ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். வரும் மார்ச் 4ஆம் தேதிக்குள் <
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். 8 தாலுகாக்களில் உள்ள 30,000க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான பணிகளில் வருவாய்த்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணியில், மாவட்ட வருவாய்த் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மண்ணிவாக்கத்தைச் சேர்ந்தவர் சலாவுதீன் (57). இவர், நேற்று முன்தினம் (பிப்.14) இரவு கரசங்கால் பேருந்து நிறுத்தம் அருகே ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே வந்த மற்றோரு பைக் அவர் மீது மோதியது. இதில், சலாவுதீன் பலியானார். பைக் ஓட்டி வந்த கரசங்கால் பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவர்கள், ராகவ் தர்ஷன் (17), யுவராஜ் (17) இருவரும் பலத்த காயமடைந்தனர். தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலாஜாபாத், ராஜவீதி பகுதியில் வசித்து வருபவர் பழனி. மர வியாபாரம் செய்து வரும் இவர், தனது உதவியாளர் வரதன் உடன் நேற்று (பிப்.15) வாலாஜாபாத் – தாம்பரம் சாலை சேர்க்காடு பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பைக்கில் சாலையை கடக்க முயன்றனர். அப்போது தாம்பரத்திலிருந்து வாலாஜாபாத் நோக்கி சென்ற அரசு பேருந்து அவர்கள் மீது மோதியது. இதில், வரதன் உயிரிழந்தார். பழனி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
செங்கல்பட்டு மாவட்டத்திற்கான தனித்துவமான வன அலுவலகம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. முன்பாக, விவசாயிகள் மற்றும் அதிகாரிகள், வனத்துறையுடன் தொடர்பு கொள்ள காஞ்சிபுரம் செல்ல வேண்டியிருந்தது. புதிய அலுவலகம் ஏப்.1இல் செயல்படத் தொடங்குவதால், விவசாயிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு நேரம் மற்றும் செலவு மிச்சமாகும். வனப்பகுதி அனுமதிகள், பயிர் சேத இழப்பீடு உள்ளிட்ட பணிகள் இனி செங்கல்பட்டிலேயே முடிக்கப்படும்.
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் மேற்பார்வையாளரான கருப்பசாமி, அனுபுரம் நகரிய குடியிருப்புகளில் உள்ள சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து, சிறுமிகள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள், சதுரங்கபட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, கருப்பசாமியை நேற்று (பிப்.14) கைது செய்த மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இயற்கை பேரிடர்களால் 6 முறை அழிவைச் சந்தித்து, 7ஆவது முறையாக திருப்போரூர் முருகன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதனைக் கந்த சுவாமி கோயில் என்றும் அழைக்கின்றனர். இந்த முருகனைத் தரிசித்தால் ஆறுபடை முருகனை தரிசனப்பலன் அனைத்தும் கிடைக்கும் என்பது வரலாறு. தாரகனுடன் போர் நடந்ததால் இத்தலத்திற்கு போரூர், தாருகாபுரி, சமராபுரி என்ற பெயர்கள் ஏற்பட்டன. வாழ்வில் திருப்பம் தரும் கோயில் என்றும் சொல்லப்படும்.
விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயிலை சாலை மேம்பாலத்துடன் இணைத்து நீட்டிப்பதன் பரிந்துரைக்கான விரிவான திட்ட அறிக்கையை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தார். வழித்தடத்தின் மொத்த நீளம் 15.46 கி.மீ. ஆகும். 13 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளது. இவர், ரூ.9,335 கோடி செலவில் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சென்ற அரசு பேருந்தும், சேலத்திலிருந்து ஆவின் பால் ஏற்றிச் சென்ற லாரியும் நேற்று (பிப்.14) திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 5 பேர் லேசான காயமடைந்தனர். இதன் காரணமாக, அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் போலீசார், போக்குவரத்தை சீர் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.