India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பங்குனி மாத சனிக்கிழமையில் வரும் பௌர்ணமி மிக விஷேசம். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கத்தில் ஆட்சீசுவரர் கோயில் உள்ளது . இங்கு வந்து தீபம் ஏற்றி வழிபட்டால் EMI உள்ளிட்ட அனைத்து கடன் தொல்லைளும் நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பியாக உள்ளது. மேலும், இறைவனை மனதார வேண்டினால், சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். கடன் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாதம் ரூ.21,700 – ரூ.69,100 சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.60. இந்த <
தாம்பரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (52) கடந்த பிப்ரவரி மாதம் இவரை போனில் தொடர்பு கொண்ட சிலர், மும்பை போலீஸ் என கூறி மிரட்டி, 50 லட்சம் ரூபாயை பறித்தனர். அதேபோல் சரத் (32) என்பவரிடம் பங்குச்சந்தை வழியாக அதிகம் சம்பாதிக்கலாம் என கூறி 1.97 லட்சம் ரூபாயை ஏமாற்றினர். இது குறித்து விசாரித்த தாம்பரம் சைபர் குற்றப்பிரிவு போலீசார் டில்லியைச் சேர்ந்த ராயிஸ் (25) மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தனர்.
கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லுாரில் வசிப்பவர் வினோத்குமார், (39). நேற்று அதிகாலை 5:30 மணியளவில், முகமூடி அணிந்த மர்ம நபர், வினோத்குமாரின் வீட்டுக் கதவை இரும்பு கம்பியால் பிளந்து, உள்ளே நுழைந்துள்ளார். பின், உறங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி மம்தாஸ்ரீ அணிந்திருந்த தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பினார். புகாரின் அடிப்படையில் இச்சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இருந்து இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் உதவி காவல் ஆய்வாளர்களின் இன்றைய (ஏப்ரல் 11) பெயர் பட்டியல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி வெளியிடப்பட்டுள்ளது எனவே மக்கள் பயன்படுத்திக்கொண்டு காவல் ஆய்வாளர்களுக்கு தங்களது இரவு நேர பிரச்சனைகளை தெரிவிக்கலாம்.
தாம்பரம் மாநகர போலீசார் ஏற்பாடு செய்த ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி காரணமாக, சனிக்கிழமை காலை 7 முதல் 10 மணி வரை கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை சந்திப்பில் இருந்து மாமல்லபுரம் நோக்கி போக்குவரத்து தடைப்படும். வாகனங்கள் பழைய மாமல்லபுரம் சாலை வழியாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் நாளை காலை வேலைக்கு செல்வோர் அதற்கு ஏற்றவாறு தங்களது பயணத்தை திட்டமிட்டு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
▶மாவட்ட ஆட்சியர் – 044-27427412 ▶மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) – 044-27427412 ▶மாவட்ட வருவாய் அலுவலர் – 044-27427413 ▶செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் – 9445000414 ▶மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் – 044-71116862 ▶காவல் கண்காணிப்பாளர் 044-29540555 ▶டிஐஜி – 04427239009, ▶மாவட்ட மின்வாரியம் – 044-28521109, ▶செங்கல்பட்டு PRO- 9941403602, ▶விவசாய இணை இயக்குநர் – 044-27428391
வண்டலூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில் ஊஞ்சல் சேவை. பேரமனுார் வாலீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண தெப்ப உத்சவம். அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை. பெரும்பேர் கண்டிகை தாந்தோன்றீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், அலங்காரம், பூஜை. சோத்துப்பாக்கம் பாலமுருகன் கோவிலில் மண்டலாபிஷேகம். கேளம்பாக்கம் பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு. கூடுவாஞ்சேரி சக்தி விநாயகர் கோவிலில் நித்திய பூஜை. ஷேர்
நாளை ஏப்ரல் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, செங்கல்பட்டு மண்டல உதவி ஆணையர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நடத்தபட உள்ளன. பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்றவற்றை செய்து கொள்ளலாம். இலவசமாகவே ரேஷன் கார்டில் அப்டேட் செய்துகொள்ளலாம். இந்த அறிவிப்பால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஷேர் பண்ணுங்க
செங்கல்பட்டு மாவட்ட அளவில் தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வளாகத்தில் டிசம்பர் 15ம்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை நேரிலோ /dadskillcpt@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ / 6379090205, 044 – 27426554 தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.