India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வார இறுதி மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு, கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு 705 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் செப்.19 அன்று 355 சிறப்புப் பேருந்துகளும், செப்.20 அன்று 350 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனம்பாக்கம், விமான நிலையத்தில், இன்று (செப்.17) காலை, ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து, ரூ.20 கோடி மதிப்புள்ள 2 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. சாக்லேட் டப்பாக்களில் மறைத்து வைத்து இந்த போதைப்பொருள் கொண்டு வரப்பட்டது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கென்யா நாட்டைச் சேர்ந்த அந்த நபரை, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் – நாகர்கோவில் இடையே, பண்டிகை காலக் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, வாராந்திரச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தச் சிறப்பு ரயில்கள், செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 27 வரை இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவுகள், இன்று (செப்.17) காலை முதல் தொடங்கியுள்ளன.
செங்கல்பட்டு மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
செங்கல்பட்டு மக்களே, உங்களுக்கு தேவையான 1.சாதி சான்றிதழ், 2.வருமான சான்றிதழ், 3.முதல் பட்டதாரி சான்றிதழ், 4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ், 5.விவசாய வருமான சான்றிதழ், 6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ், 7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <
கடன் தொல்லை நீக்கும் ஆட்சீசுவரர்: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கத்தில் ஆட்சீசுவரர் கோயில் உள்ளது. புரட்டாசி முதல் நாளான இன்று இங்கு வந்து தீபம் ஏற்றி வழிபட்டால் EMI உள்ளிட்ட அனைத்து கடன் தொல்லைளும் நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பியாக உள்ளது. மேலும், இறைவனை மனதார வேண்டினால், சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். கடன் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய சர்வதேச நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மேலும், மாஸ்டர் பிளான் தயாரிக்க டிட்கோ நிறுவனத்திடம் டெண்டர் கோரியுள்ளது. பொதுமக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்கள் உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் கருத்து என்ன?.
தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ், இவரது இருசக்கர வாகனத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் இருவர் திருடிச் சென்றனர். இந்நிலையில் OLX இணையதள வாயிலாக வாகனத்தின் உரிமையாளர் விக்னேஷ் இடமே திருடிய இருசக்கர வாகனத்தை விற்க முயன்ற மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், அடிக்கடி மின்வெட்டும் ஏற்படும். அவ்வாறு, முன்னறிவிப்பின்றி ஏற்படும் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்னகத்தின் (9498794987) எண்ணை தொடர்வு கொள்ளவும். ஒருவேளை லைன் கிடைக்கவில்லை அல்லது பிசியாக இருந்தால், 9444371912 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ <
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டமான காஞ்சிபுரத்திற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 16 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது . எனவே வெளியே செல்பவர்கள் முன்னெச்சரிக்கையா இருங்க. ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.