India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு: இயலாக் குழந்தைகளுக்கு கற்பித்தல் உபகரணங்கள் மற்றும் சிகிச்சை தொடர்பான கருவிகள் வாங்க, கனிமவள நிதி 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு கலெக்டர் அறிவுறுத்துள்ளார்.
பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க.
கூடுவாஞ்சேரியை சேர்ந்த கார்த்திகேயன் (39) இரு சக்கர வாகனத்தில் காயரம்பேடு நோக்கிச் சென்றார். அப்போது, ஊனமாஞ்சேரியை சேர்ந்த தாமோதரன்(48), தங்கதுரை (65) ஆகியோர் ஒரே இருசக்கர வாகனத்தில் கூடுவாஞ்சேரி நோக்கி சென்றபோது எதிர்பாராத விதமாக 2 இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் தூக்கி வீசப்பட்ட நிலையில், கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு வழங்கும் உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மனுதாரர்கள் வரும் ஜூன் 10ம் தேதிக்குள், அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்ட பிரிவில் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.1.40 லட்சம் சம்பளம் வழங்கப்படும். தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்கு உரையாடவும் எழுதவும் தெரிந்து இருக்க வேண்டும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த லிங்கை <
செங்கல்பட்டு வேதகிரீஸ்வரர் கோயில் நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம், கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.
செங்கல்பட்டு அச்சிறுபாக்கத்தில் மரகத தண்டாயுதபாணி (நடுபழநி) திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இருக்கும் முருகன் சிலை மரகத கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் இருக்கும் முருகர் பழநி தண்டாயுதபாணியை போலவே இருப்பதால் ‘நடுபழநி’ என இக்கோயில் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் வங்து வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது. ஷேர் பண்ணுங்க மக்களே
பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அனைத்து மகளிர் காவல் நிலையம் செங்கல்பட்டு – 044-27432101, தாம்பரம் – 044-24493663, மேல்மருவத்தூர் – 044-27529100, மாமல்லபுரம் – 044-27529100. இந்த எண்களை உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் பகிர்ந்து சேவ் பண்ண சொல்லுங்கள்.
செங்கல்பட்டில் மூன்றாம் கட்டமாக 6 புதிய தடங்களில் மினி பஸ்கள் இயக்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழித்தடங்கள் விவரம் 1. மாம்பாக்கம் – காயார், 2. மதுராந்தகம் – காட்டுக்கரணை, 3. கல்யாங்குளம் – மேல்மருவத்துார், 4. தாம்பரம் மெப்ஸ் – டி.டி.கே., நகர், 5. சோழிங்கநல்லுார் – மாம்பாக்கம், 6. மண்ணிவாக்கம் காவல் நிலையம் – டி.எம்.ஜி., கல்லுாரி. பேருந்தில் செல்லும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
வண்டலூர் அருகே இயங்கி வரும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைகழக மாணவியை கர்ப்பமாக்கி, கருக்கலைப்பு செய்ததாக உதவிய பேராசிரியர் ராஜேஷ்குமார் (45) சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கருக்கலைப்பின்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு, கோமா நிலைக்குச் சென்ற கல்லூரி மாணவி, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.