India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டத்தில் சாகுபடி பயிர்களுக்கு தேவையான 3244 மெ.டன் யூரியா, 946 மெ.டன் டி.ஏ.பி 582 மெ.டன் பொட்டாஷ் மற்றும் 5030 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் அரசு மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளது. சான்று பெற்ற நெல் விதைகள் 187 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் 112 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் தேளூர் அரசுப் பள்ளியில் கணினி வெடித்த விபத்தில் மாணவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வகத்தில் கணினி வெடித்ததில் கரும்புகை பரவி மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் 19 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து அரியலுர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் என்எல்சியில் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு இவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 15 சவரன் நகை இரண்டு கிலோ வெள்ளி 30 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் தேசியக் குடற்புழு நீக்க முகாம் நடைபெறுகின்றது இதில் 6 ஒன்றியங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக குழந்தைகளை குடற்புழு தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு இன்றும் விடுபட்டவர்களுக்கு 30 ஆம் தேதியும் நடைபெறும். முகாம்களில் அனைத்து பயனாளிகளும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம், அரசு மானியத்துடன் கூடிய மின்சார மோட்டார் பம்புசெட்டுகள் அமைக்க அரியலூர் மாவட்டத்திற்கு 13.50 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை தங்கள் வட்டாரத்திற்குட்பட்ட வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தை சேர்ந்த சரவணன்ராஜ் கடந்த 20ஆம் தேதியன்று சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை தடுத்து நிறுத்தி, மத்திய மாநில அரசுகள் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அரியலூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம், அரசு மானியத்துடன் கூடிய மின்சார மோட்டார் பம்புசெட்டுகள் அமைக்க அரியலூர் மாவட்டத்திற்கு 13.50 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை தங்கள் வட்டாரத்திற்குட்பட்ட வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளில் 66,232 உயர் இரத்த அழுத்த நோயாளிகளும், 44,412 நீரிழிவு நோயாளிகளும், 29,703 உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளும் கண்டறியப்பட்டு தொடர் சிகிச்சை, மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள 595 நபர்களுக்கு தொடர்ந்து நோய் ஆதரவு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக ஆட்சியர் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்ட பொது சுகாதாரத் துறை சார்பாக குழந்தைகளை குடற்புழு தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு ஆகஸ்ட் 23 மற்றும் 30ஆம் தேதிகளில் முகாம் நடைபெற உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 741 பள்ளிகள், 774 அங்கன்வாடி மையங்கள், கல்லூரிகள், குழந்தைகள் காப்பகங்களில் உள்ள 2,65,633 பேருக்கு மாத்திரைகள் வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து முன்னணியை சேர்ந்த 18 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அரியலூர் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் கடந்த 16-ஆம் தேதி இந்து முன்னணியினர் புகார் அளித்தனர் அதில் சுதந்திர தினத்தன்று ஒருவர் தேசிய கொடியை அவமதித்ததாகவும், அவரை கைது செய்ய கோரி கூறினார். கைது செய்த அவர்களை செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் அவர்களை மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Sorry, no posts matched your criteria.