India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆண்டிமடம் வட்டாரத்தில் ‘பெண் குழந்தையை காப்போம் பெண் குழந்தையை கற்பிப்போம்’ திட்டத்தின் வாயிலாக ஆசிரியர்களுக்கான கட்டாய கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம் 2009 அனைவருக்கும் கல்வி திட்டம் கஸ்தூரிபா காந்தி பாலுகா வித்யாலயா வளர் இளம் இளம் பெண்கள் தன்னுரிமை மேம்பாட்டு திட்டங்கள் பற்றியும் இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஏரளாமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
மீன்சுருட்டி அருகே இருவேறு இடங்களில் 2 பெண்களிடம் முதியோா் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி நகைகள் பறித்து சென்றுள்ளனர். முத்துசோ்வாமடம் காலனித் தெருவைச் சோ்ந்த முத்துலிங்கம் மனைவி மலா்க்கொடி மற்றும் வெண்ணங்குழி கிராமத்தைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் மனைவி சரஸ்வதி (65) இருவரிடமும் 8 கிராம் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவில் செய்யக்கூடாதவை குறித்து அரியலூர் ஆட்சியர் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளை பயன்படுத்த வேண்டாம், ஒருமுறை உபயோகித்து தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக், தெர்மாகோல் மற்றும் இரசாயனப் பொருட்கள் அல்லது சாயங்களை பயன்படுத்த வேண்டாம், அனுமதி இல்லாத நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
ஆண்டிமடம் அருகே கருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜன். இவரது சித்தப்பா சிங்காரவேல். இருவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 2020ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் சிங்காரவேலு மற்றும் அவரது மகன்கள் பழனிவேல், முருகவேல் ஆகியோர் தேவராஜனை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இது குறித்த விசாரணையில், வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி கிரிஸ்டோபர் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கினார்.
அரியலூர் செந்துறை அருகே சிமெண்ட் ஏற்றி சென்ற லாரி இன்று காலை விபத்துக்குள்ளானது. டால்மியா சிமெண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சிமெண்ட் லாரி செந்துறை – ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற போது பொன்பரப்பி கிராமத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் உயிர் சேதம் ஏதுமில்லை. இந்த சம்பவம் குறித்து செந்துறை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம், பாப்பாக்குடி, ஓலையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளது. இதனால் கீழநெடுவாய். புக்குழி, சாத்தனப்பட்டு, அகரம், அழகாபுரம், சிலம்பூர், சிலுவைச்சேரி, நாகம்பந்தல், ஸ்ரீராமன், வீரபோகம், வங்குடி, இறவாங்குடி, பெரியாத்துக்குறிச்சி, ஓலையூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்வினியோகம் இருக்காது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பு அறையினை மாவட்ட ஆட்சித் தலைவர் பொ ரத்தினசாமி இன்று மேற்பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் பொது அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக கிராமங்களான கீழப்பழூவூர், மேலப்பழூவூர், கோக்குடி, பூண்டி, வைப்பம், கருவடச்சேரி, கல்லக்குடி, அருங்கால், பொய்யூர், கீழவண்ணம் உள்ளிட்ட கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதனை தகவலை திருமானூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்தார்.
நவராத்திரி கொலு பண்டிகையை முன்னிட்டு 21.09.2024 முதல் 06.10.2024 வரை மாநில அளவிலான நவராத்திரி விற்பனை கண்காட்சி சென்னையில் நடைபெறவுள்ளது. எனவே, மாவட்டத்தில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்க 10.09.2024-ம் தேதிக்குள் https://exhibition.mathibazzar.com./Login என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்ந்த திட்டங்கள் தொடர்பான அனைத்து விளம்பர பலகைகளுடன் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று காலை 9.35 மணி அளவில் தொடங்கி வைத்தார். இந்த வாகனம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் சென்று விழிப்புணர்வு செய்யும் வகையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.