India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருமானூர் அருகே கீழ கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய் மீது திருமானூர் மற்றும் கீழப்பழுவூர் காவல் நிலையங்களில் பல்வேறு கொலை முயற்சி வழக்குகள் உள்ளது இந்நிலையில் கடந்த மாதம் பாலமுருகன் என்பவரை மறித்து அடித்து கொலை செய்ய முயற்சித்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட எஸ்பி பரிந்துரையில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி இன்று உத்தரவிட்டார்.
கீழப்பழுவூர் அரசு தொழில்நுட்ப கல்லூரியினை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி மற்றும் அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா ஆகியோர் இன்று பார்வையிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் எண்ணிக்கை, பாடப்பிரிவுகள் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்தார். கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கணினி ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா ஆகியோர் திறந்து வைத்தனர்.
அரியலூர் நியாய விலைக்கடையில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இருப்பில் உள்ள பொருட்களின் விவரம் மற்றும் தரம், மின்னணு குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, பொருட்கள் வழங்கப்படுவது குறித்தும் ஆய்வு செய்ததுடன், பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என பொதுமக்களிடமும் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
ஊரகப்பகுதிகளில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் இன்று மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் தீர்வு காணவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி அறிவுறுத்தினார். மேலும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 2672 மனுக்கள் பெறப்பட்டது.
அரியலூரிலிருந்து 70 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோயில் நகரம் கங்கைகொண்ட சோழபுரம். முதலாம் ராஜேந்திரன் கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்றதை நினைகூறும் வகையில் 1023-ல் நிறுவப்பட்டது. 250 ஆண்டுகள் பிற்காலச்சோழர்களின் தலைநகராகவும் விளங்கியது. 2004-ல் யுனெஸ்கோ (UNECSCO) உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலின் மாதிரியாகவே இது பார்க்கப்படுகிறது.
அரியலூர் வட்டத்தில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி இன்று மாலை 4.30 மணி அளவில் கள ஆய்வு மேற்கொண்டு, அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற உள்ளார். எனவே, அரியலூர் வட்டார பகுதி மக்கள், இதில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டத்தில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மதிப்புக்குரிய மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி நாளை கள ஆய்வு மேற்கொண்டு, மாலை 04.30 மணியளவில் அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற உள்ளார். எனவே அரியலூர் வட்டார பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.
அரியலூர் அண்ணா சிலை அருகில் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் தலைமையில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் ரேசன் கடைகளில் பருப்பு பாமாயில் நிறுத்த முயற்சிக்காமல் அனைத்து பொருட்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்
அரியலூர் அரசு கலைக் கல்லூரியின் சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்ட 13 துறைகளில் இறுதிக்கட்ட கலந்தாய்வு இன்று(23-7-2024) முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாணவர்கள் தாங்கள் விண்ணப்பம் செய்திருந்தாலும் செய்யாமல் இருந்தாலும் நேரடியாக கலந்தாய்வில் கலந்துகொண்டு தங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தங்களது விருப்ப பாடத்தை தேர்வு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் ஆலயத்தில், ஆடி திருவாதிரை விழாவினை முன்னிட்டு வருகிற 02.08.2024 (வெள்ளிகிழமை) அன்று அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை எனவும், அதனை ஈடுசெய்யும் பொருட்டு 17.08.2024 அன்று முழுவேலை நாள் என கலெக்டர் இரத்தினசாமி அறிவித்துள்ளார்
Sorry, no posts matched your criteria.