Ariyalur

News September 3, 2024

அரியலூர்- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 543 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

News September 3, 2024

அரியலூர்- நெல்லுக்கான குறைந்த பட்ச விலை

image

அரியலூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் விற்கப்படும் நெல்லுக்கான விலை பற்றி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதில் ஏ கிரேடு நெல்லுக்கு மத்திய அரசின் ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.2,320/- மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகை ரூ.130/- ஆகக்கூடுதல் தொகை ரூ.2,450/- ஆகும். குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டால் 1க்கு ரூ.2,300/- மாநில அரசின் ஊக்கத் தொகை ரூ.105/- ஆகக்கூடுதல் தொகை ரூ.2,405 என தெரிவித்தார்.

News September 2, 2024

அரியலூரில் 18 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

image

அரியலூர் மாவட்டத்தில் கே.எம்.எஸ் குறுவை பருவத்தில் தளவாய், கூடலூர், ஏலாக்குறிச்சி, சன்னாசிநல்லூர், திருமழப்பாடி, கண்டிராதீர்த்தம் நமங்குணம், செங்கராயன்கட்டளை, குருவாடி, குலமாணிக்கம், மஞ்சமேடு, கா.மாத்தூர், ஓலையூர், காடுவெட்டி, அருள்மொழி, ஸ்ரீபுரந்தான், கோவிந்தபுத்தூர், தூத்தூர் உள்ளிட்ட 18 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 2, 2024

மாணாக்கர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஜூலை 18ம் நாள் தமிழ் நாடு நாள் விழாவினை முன்னிட்டு அரியலூர் மாவட்ட அளவில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னுசாமி வழங்கினார்.

News September 2, 2024

உள்ளாட்சி நிதி தணிக்கை துறை அலுவலர்களுக்கு பாராட்டு

image

அரியலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரியலூர் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டு தமிழ் ஆட்சி மொழி திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய உதவி இயக்குனர் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை அலுவலகத்திற்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சி தலைவர் போ ரத்தினசாமி வழங்கினார். இதில் அரசு அலுவலர்கள் கேடயம் மற்றும் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.

News September 2, 2024

அரியலூரில் புதிய ரேஷன் கடைக்கு கட்டுமான பணி துவக்கம்

image

அரியலூர் வாலாஜா நகர பஞ்சாயத்து உட்பட்ட நியூ மார்க்கெட் சீட் பகுதி 1வது வார்டு இன்று புதிய ரேஷன் கடை கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா அவர்களின் தலைமையில் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பணி துவங்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

News September 2, 2024

அரியலூரில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

image

ஆண்டிமடம் அருகே இருசக்கர வாகனத்தைத் திருடியவா் குண்டா் சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டாா். கடலூா், விருத்தாசலத்தை சோ்ந்தவா் கண்மணிராஜா (38), இருசக்கர வாகனத்தை திருடியதற்காக கடந்த 7 ஆம் தேதி இவரை ஆண்டிமடம் போலீஸாா் கைது செய்தனர். மாவட்டக் எஸ்பி ச. செல்வராஜ் பரிந்துரையின்பேரில் கண்மணிராஜாவை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி நேற்று உத்தரவிட்டாா்.

News September 1, 2024

அரியலூரில் பரிசு வழங்கிய அமைச்சர்

image

அரியலூரில் 43ஆவது மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு திருவாடுதுறை ஆதீனம் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று பரிசு வழங்கினார். இதில் மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், அரசு கொறடா செழியன், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, கும்பகோணம் எம் எல் ஏ அன்பழகன் மற்றும் பலரும் கலந்து கொண்டுள்ளார்.

News September 1, 2024

அரியலூரில் விநாயகர் சிலைகள் கரைக்க கட்டுப்பாடு

image

விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் கரைப்பதற்கான மாசு கட்டுப்பாடு வாரியம் வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிா்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து ஒத்துழைப்பு வழங்குமாறு ஆட்சியர் கூறியுள்ளார். இதன்படி அரியலூா் பகுதியில் சிலைகள் மருதையாறிலும், திருமானூா் பகுதிக்கு கொள்ளிடம் ஆறு, செந்துறை, உடையாா்பாளையம் மற்றும் ஆண்டிமடம் பகுதிக்கு வடவாா் பகுதிகள் சிலைகள் கரைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

News September 1, 2024

அரியலூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை

image

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகேயுள்ள பெருமாள் தீயனூா், காலனி தெருவைச் சோ்ந்தவா் அரியமுத்து (81). விவசாயக் கூலித் தொழிலாளி. இவா், மன நலன் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட மகளிா் காவல் துறையினா், அரியமுத்துவை போக்சோ சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

error: Content is protected !!