Ariyalur

News July 26, 2024

துப்பாக்கி சுடும் போட்டி

image

திருச்சி மத்திய மண்டல உயர் அதிகாரிகளுக்கு இடையிலான வருடாந்திர பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. அரியலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் இரண்டாவது இடத்தையும், கணினி சார் குற்றப்பிரிவு அரியலூர் காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அந்தோணி ஆரி அவர்கள் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

News July 26, 2024

சிலிண்டர் வெடித்து வீடு எரிந்து நாசம்

image

ஆண்டிமடம் அடுத்த அய்யூர் கிராமத்தில் சிலிண்டர் வெடித்து வீடு முற்றிலும் எரிந்து நாசமாயின. நேற்று மாலை எதிர் பாராதவிதமாக திடீரென சிலிண்டர் வெடித்தது. இதில் தீப்பற்றி கூரை வீடு முழுவதுமாக எரிந்ததில் 50ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

News July 26, 2024

அரியலூரில் 30 பேருக்கு ரூ.1 கோடியில் வீடு

image

அரியலூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் 2ஆம் கட்ட சிறப்பு முகாம் தத்தனூரில் நேற்று நடைபெற்றது. இதில், எம்எல்ஏ கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுகொண்டார். பின்னர், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் வீடு கட்ட நிர்வாக அனுமதி ஆணையை வழங்கினார்.

News July 25, 2024

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 3065 மனுக்கள்

image

அரியலூர் மாவட்டத்தில் 4ம் கட்டமாக ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் அரியலூர் ஒன்றியத்தில் சுண்டக்குடி ஊராட்சியில் மற்றும் திருமானூர் ஒன்றியத்தில் திருமானூர் ஊராட்சியில் நடைபெற்றது. சுண்டக்குடி ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் மாவட்ட ஆட்சியருடன், எம்எல்ஏ சின்னப்பா கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். இன்று இந்த இரண்டு ஊராட்சிகளிலும் 3065 மனுக்கள் பெறப்பட்டுள்ளது

News July 25, 2024

பேருந்தில் பயணச்சீட்டு வாங்கிய அமைச்சர்

image

அரியலூர் பழைய பேருந்து நிலையத்தில் பல்வேறு வழித்தடத்தில் 7 புதிய பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். அப்போது பேருந்தில் அமைச்சர் சிவசங்கர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி சட்டமன்ற உறுப்பினர்கள் சிறிது தூரம் பயணம் செய்தனர். அப்பொழுது நடத்துனரிடம் பணம் கொடுத்து அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட அனைவரும் பயண சீட்டு பெற்று பயணம் செய்தார்.

News July 25, 2024

அரியலூர் சிமெண்ட் ஆலைகளால் கேள்விக்குறியாகும் விவசாயம்

image

கனிம வளங்கள் நிறைந்துள்ள அரியலூரில் தற்போது 8 பெரு வணிக சிமெண்ட் ஆலைகள் உள்ளன. அரியலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுரங்கம் தோண்டுவதற்கு பல முன்னணி நிறுவனங்கள் வேலை வழங்குவதாக கூறி விவசாயிகளிடம் நிலங்களை கையகப்படுத்துகின்றன.பின்பு கூறியபடி வேலை வழங்குவதில்லை என கூறி பிச்சை எடுப்பதை தவிர வேற வழி இல்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.

News July 25, 2024

பால் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு

image

அரியலூரில் உள்ள தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க மையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை, கொள்முதல் செய்யப்படும் பால், சில்லரையில் விற்பனை செய்யப்படும் பால், கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்து கேட்டறிந்தார். மேலும் கொள்முதல் செய்யப்படும் பாலின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

News July 25, 2024

அரியலூரில் அதிரடி காட்டிய கலெக்டர்

image

அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரின் நேற்றைய ஆய்வில் அறிவுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று அதிகாலை 6 மணிக்கு நகராட்சியில் நடைபெறும் தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அனைத்து தெருக்களிலும் உள்ள குப்பைகளை முழுமையாக அப்புறப்படுத்தி நகரை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

News July 25, 2024

பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்ற ஆட்சியர்

image

அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை முதல் அரியலூர் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா மாற்றம், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கை தொடர்பான 69 மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

News July 24, 2024

பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்ற ஆட்சியர்

image

அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை முதல் அரியலூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா மாற்றம், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கை தொடர்பான 69 மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

error: Content is protected !!